இடுகைகள்

வெய்போ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையல் எண்ணெய்யை எரிபொருள் கண்டெய்னரில் ஏற்றிச்சென்ற சீன அரசு நிறுவனம்!

படம்
            சமையல் எண்ணெய்யும், எரிபொருட்களும் ஒரே கன்டெய்னரில்..... சீனாவில் புலனாய்வு செய்தி என்பது அரிதிலும் அரிதானது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதிலுமுள்ள ஊடக செய்திகளைக் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட செய்திகளை பரப்ப வேண்டுமெனில் பரப்புகிறது. இல்லையெனில் அவற்றை நீக்கிவிடுகிறது. அந்த வகையில், அண்மையில் சமையல் எண்ணெய்யை எரிபொருள் லாரியில் கொண்டு சென்றது தொடர்பான செய்தி ஒன்றை வெய்போ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியது. பெய்ஜிங் நியூஸ் என்ற ஊடகம், சீன அரசு நிறுவனம் ஒன்று, தனது எரிபொருள் லாரியில் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்யை சுகாதாரமின்றி கையாண்டதை புலனாய்வு செய்து கட்டுரையாக நாளிதழில் பிரசுரித்தது. அதுதொடர்பான வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டது. அதில் வேடிக்கை, சுகாதார சிக்கலுக்கு உள்ளானது சீனாவின் அரசு நிறுவனம். அதன் பெயர் சினோகிரெய்ன். இந்த நிறுவனம் தொடர்பான விசாரணைகளை சீன அரசு தொடங்கியது. இப்படி தொடங்குவதற்கு வெய்போவில் பயனர்கள், அரசை குறைசொல்லி பதிவுகளை இடத்தொடங்கியதே முக்கிய காரணம். முறையாக விசாரணை செய்து தவறுகளை தீர்ப்ப...