இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுதுபவரும், வாசகரும்

படம்
                                                        எழுதுபவரும், வாசகரும் இந்த இருவருக்குமான நேயமே சிறிது சிக்கலான ஒன்றுதான். வாசகரைப்பொறுத்தவரை அவர் தன் மனக்கண்ணில் எழுத்தினைப் பொறுத்து எழுத்தாளரை ஒரு மனதாக முடிவு செய்து வைத்திருப்பார். ஆனால் ஓரிடத்தில் வாசகர் சந்திப்பில் எழுத்தாளரை சந்திக்கும்போது அவர் மனதில் நினைத்ததற்கு மாறாகவே இருக்கும் அவரது உடல், குரல், கருத்தினைப் பகிரும் தன்மை. இதனாலேயே பெரும்பாலும் எழுத்தாளரும், வாசகரும் சந்திப்பதென்பது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருந்ததில்லை. அப்படி சந்திக்க வேண்டும் என்றால் எழுத்தாளரின் எழுத்தில் அவர் அடைந்த உணர்ந்து எழுதிய தன்மையை நாம் சிறிதேனும் தொட முயற்சித்திருந்தால் அதைப் புரிந்திருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நம் சூழ்நிலையில் என்ன நிகழ்கிறது? பழனி முருகனுக்கு காவடி தூக்குவது போல எழுத்திற்கு காவடி தூக்குவது. இல்லையா? தூக்கி ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவது. எனது சகோதரரின் நண்பர் ஒருவர் வெகுஜன பத்திரிகை ஒன்றில் பயணக்கட்டுரை ஒன்றினை மனிதர்களின் அனுபவங்களோடு எழுதியிருந்த  ஒரு எழுத்தாளரை புத்தகத்திருவிழாவில் சந்த

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள்

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள் :                                               மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழ...

மேலோட்டமான ஊடகமனிதர்கள்

படம்
                                              மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழைப்பையும், தளராத முயற்சியையும் கோருவன. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தகவல்களை இளைஞர்கள் பெறுவது மிக எளிது.  ஆனால் குறிப்பிட்ட செய்திகளின் தாக்கம் அவர்களின் மனதை சென்றடைகிறதா என்பதே சந்தேகம்தான். ஆனால் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப அவர்களின் உழைப்பு இருக்கிறதா என்று என்னால் அறியமுடியவில்லை. அவர்கள் மெல்ல ஏழைமக்களுக்கு எதிராக திரும்புவதும் போல் தெரிகிறது. இவர்களின் கல்வித்தகுதி என்பது பெரியதாக இருக்கிறது. எனக்கு அண்மைய நாட்களில்  சுந்தர் என்பவர் அறிமுகமானார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் சந்திப்புகளிலேயே நான் நினைத்தது பட்டினத்தாரின் மறுபிறப்போ என்றுதான். ஆனால் அவருக்குள்ளேயே பெண்களின் உடை, சுதந்திரம் குறித்து ஆதிக்க மரபான மனிதன் இடையறாது உரையாடி வந்தான் என்பதை நான் பேச்சினூடே எளிதில் உணர முடிந்தது. இணைய வீடியோக்கள், செய்திகள் என சிந்திக்காது அவற்றின் பார்வைக்கோணத்தை,  அரசியலை சந்தேகிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவற்றை நம்பும் மனங்களினால் விளையும்

லட்சியவாதங்களின் நொறுங்கல்

படம்
                                           லட்சியவாதங்களின் நொறுங்கல்   சில நாட்களுக்கு முன் ஒரு முன்னாள் லட்சியவாதி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்து நான் பேசியதை விட அவர் பேசிய பொருமலைத்தான் அதிகம் கேட்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ காந்தியின் லட்சியங்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அதே உரசலைத்தான் இன்னொரு நிகழ்கால அப்டேட் வர்ஷனில் கூறிக்கொண்டிருந்தார். முன்பு லட்சியவெறி எல்லை தாண்டி இருந்த போது தன் மூத்த மகளையும், இரு மகளையும் தமிழ் வழியில் படிக்கவைத்திருந்தார் ஆனால் இன்றைய காலநிலையில் தமிழுக்கான கௌரவத்தை இந்த வலைப்பூ நிறுவனரின் நிலையைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். முதுகெலும்பு நொறுங்க வேலை செய்து நகரத்தில் என்ன செய்கிறார் என்பதை அவரது புலம்பலான எழுத்துக்களிலிருந்து அறிந்துவருகிறோம். அதே கதைதான். ஆனால் பயம் தொடர்பான அவரது இளைய மகளுக்கல்ல.  ஆசிரியர் மற்றும் முக்கியமான அந்த எழுத்தாளப்பெருந்தகைக்குத்தான்.             ஒவ்வொரு நண்பராக அழைத்து என்ன படிப்பிற்கு வருங்காலத்தில் வரவேற்பு இருக்கும்? என்று அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறு அழைப்புகளுக்கும் ம

சிறிதேனும் கடவுளாகலாம்

படம்
                                            சிறிதேனும் கடவுளாகலாம்               இந்தியாவில் கடவுளாவது பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மிக எளிதுதான். ஏதேனும் எளியவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தால் போதுமானது. இங்கே பெரும்பாலும் தீர்வுகளை எதற்கும் நினைவுகூருவதே இல்லை. ஏனெனில் பிரச்சனைகள்தான் தீர்ந்துவிடுமே. ஒரட்டாங்கைபோல் எப்போதும் ஒரே புலம்பல், அழுகை. அதுவும் ஒரு அரசியல் வழிதான். பலரும் கடவுளைத் தொழுகிறார்கள். பிரச்சனைகள் தீர, தேவைகள் நிறைவேற, வணிகக்கூட்டிற்காக, சுமையை சுமத்துவதற்காக, பிரச்சனையிலிருந்து மீளுவதற்காகவும் கூடத்தான். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 'ஞா' என்று கொள்வோம். இருவரும் திருமண விழாவில் சந்தித்துகொள்வதாக ஏற்பாடு. சந்தித்தோம். பேசினோம். இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏறத்தாழ இரண்டு மணிநேரங்கள் பேசினார் நண்பர். பிறகு, அவர் அழைத்தது ஒரு பெண்தோழி என்றார். ''அவுங்க வீட்டுல ஏதோ பிரச்சனையாட்ட, ஈஷாவுக்கு போயிரலாம்னு இருக்கறங்கறாங்க, நாஞ் சொன்னன் இங்க பிரச்சனைன்னு அங்க போனா அங்க ஏதாவது சிக்கல் இருந்தா எங்க போவீங்கன்னு கேட்டா எதுவும் ப

தேதியிடா குறிப்புகள்

படம்
தேதியிடா குறிப்புகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடா குறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது! பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்

வானமே கூரை

படம்
                                          வானமே கூரை                   சென்னையில் நீங்கள் நடைபாதையில் ஏதோ ஒரு மரத்தின் அடியில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருப்பவர்களைப் பற்றி எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா? நாமோ இஎம்ஐ வாங்கி அதைக்கட்டுவதற்கென்றே பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு போகின்ற ஆட்கள். ஆனால் இது போன்ற எந்தக்கவலையும் இல்லாமல் எப்படி அவர்கள் அழுக்குத்துணியோடு, அடுத்தவேளை உணவு, மலம் கழிப்பது போன்ற அவசியமான எந்த கவலைகளும் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது? என்னைப் பொறுத்தவரையில் சென்னை வந்தாலே வயிற்றுக்குள் பல உருட்டல் மிரட்டல் சத்தங்கள் கேட்கத்துவங்கிவிடும். எங்கே போகவேண்டும்? சரியான பேருந்தில்தான் ஏறுகிறோமா? எங்கே போனாலும் அங்கே கழிவறை இருக்குமா? தண்ணீர் வைத்திருப்பார்களா? குழாயில் காற்றுக்குப்பதில் நீர் வர சாத்தியம் இருக்குமா? என பல கேள்விகள் எழும். முடிந்த அளவு சில முன்னேற்பாடுகளுடன் எழுந்து கவனமாக தயாராவேன்.                    ஒரு பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்கு சென்னை வந்துவிட்டு தங்க இடமில்லை. அப்போது அன்பரசின் சகோதரர் கூட இடம் கேட்க முடியாத சூழல். அப்ப

வக்கிரத்தின் அளவீடு எது?

படம்
                                                 வக்கிரத்தின் அளவீடு எது?               42 ஆண்டுகள் கோமாவில் இருந்து இறந்துபோன மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் 66 வயதில் இறந்துவிட்டார். அதுகுறித்த ஏங்க இப்படி நடக்குது? என்று அதிர்ச்சியடைந்த முகத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். நண்பர் சுந்தரத்தின் சக தோழி ஒருவர் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காதல் கடிதம் கொடுக்கிறான் இது எவ்வளவு வக்கிரமானது? என்று வருத்தப்பட்டார் அவர். ஏறத்தாழ பள்ளி பயின்ற நம்மைப்போல பலரும் ஆணோ, பெண்ணோ ஆசிரியர் எவராக இருந்தாலும் அவரது கம்பீரம், பழகும் முறை, கவர்ச்சி இதனால் கவர்ந்திழுக்கப் படாமல் இருக்கவே முடியாது. ஆண் என்பதை விட பெண் எனும் போது அது மாணவர்களுக்கு கூடுதல் பிணைப்பை அவர்களுடன் ஏற்படுத்துகிறது. தாயின்மேல் தந்தையிடம் இருப்பதைவிட ஆண் பிள்ளைகளுக்கு நெருக்கம் அதிகம்தானே! இதை ஏன் நாம் இந்தக்கோணத்தில் பார்க்கக்கூடாது? என்றேன். அதற்கு அவர், ''அப்படியா சரி, நெல்லை பேருந்து நிலையத்தில் நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் 45 வயது மதி

கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?

படம்
                                      கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?   விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று பலரும்  குறை கூறுகிறார்கள். சிலர் இதனை நேரடியாக டி.வி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒன்றினை நண்பர் ஆர்.எம்  கலந்துகொண்ட பகுதியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ அழுதுகொண்டே என் நிலத்தில் யாரும் வேலை செய்ய வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு காரணம் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் அதை நிறுத்தவேண்டும் என்கிற ரீதியில் பேசினார். அப்போது செந்தமிழன், ஆர்.எம் இருவரும் அதற்கான நேர்மையான காரணத்தை கூறியபோதும், நிலவுடைமையாளரால் உண்மையை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. நேர்மையான காரணம் என்னவென்றால் நிலத்தில் வேலை செய்வது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; தலித் மக்கள்தான். ஆனால் இந்த மேல்ஜாதி முதலாளிகள் அவர்களை கடுமையாக அதட்டி உருட்டி அடிமைபோல வேலை வாங்குகிறார்கள். மரியாதை கிடைக்காத வேலையை ஒருவர் ஏன் ஏற்க வேண்டும்? முதலில் வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்று ஏராளமான வாய்ப்புகளை நகரம் வாரி வழங்குகிறது.  எனவே அவர்கள் அங்கே குறைந்த கூலி என்றாலும் அதை நாடி செல்கிறார்கள். அந்த வீட

திசை தேடி....

படம்
                                                                திசை தேடி....                   நகரத்தைப் பொறுத்தவரையில் திசை மிகவும் முக்கியம் என்று கூறலாம்.  அண்ணாநகர் மேற்கு என்றால் அங்கிருந்து மெயின் ரோட்டில் இருந்து பல சாலைகள் இடையறாது நூலகம் வரையில் பிரிந்து பிரிந்து ஒன்று சேரும். கிராமங்களில் உள்ள போக்குவரத்து சாலைகள் போன்றதல்ல இவை. நகரத்தில் பேருந்துகள் போக ஒரு வழி, திரும்பி வர ஒரு வழி. இவை ஏதோ ஒரு இடத்தில் ஒரு பொதுவான சந்திப்பில் சந்தித்துக்கொள்ளும். ஆனால் புதிதாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரும் ஒருவனுக்கு இவை பெரும் திகைப்பை அளிக்கும். அதாவது எனக்கு அளித்தது. அடிக்கடி தொலைந்துபோவதுதான் எனது வாடிக்கை. மிகத்துல்லியமாக தவறான வழியில் சென்று நூடுல்ஸ் அல்லது பாஸ்தா போன்றிருக்கிற மூளையை மேலும் நொச நொச வென முறுக்கிக்கொள்வேன். முதலில் மயிலாப்பூரில் வந்தபோது, வெஸ்டர்ன் டாய்லெட் போக ஒருவார பயிற்சியை எனது உடன்பிறப்பு அளித்தார். அப்படியிருந்தும் அதில் அமர்ந்து மலம் கழிப்பது என்பது பிராண சங்கடமாகவே இருந்தது. உட்கார்ந்தவாக்கில் மலம் கழிப்பது என்பது எப்படி பழகுவது என்று என்னால் பு

ஏத்துடா மெழுகுவத்திய!

படம்
                                                ஏத்துடா மெழுகுவத்திய!             இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது எப்போதும் நம்மிடையே இருக்கும் ஒரு உத்திதான். எல்லாமே தத்தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகத்தான் தோழர்களே! இப்போது பாருங்கள்.  இறந்தவர்களை பாராட்டுபவர் அவரது கொள்கைக்கு விரோதியாக கூட இருக்கலாம். மோடி அம்பேத்கரை பாராட்டுவது போல. அதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சனையா என்ன. செத்தவன் எழுந்து வந்து ஏதாவது சொல்லவா போகிறான்? நேற்று நுங்கை முழுவதும் ஒருவர் பேனரில் மண்வெட்டி வைத்து நிற்கிறார். ஒன்றில் கட்சியின் அணிவகுப்பை பார்வையிடும் மேஜர் ஜெனரல் போல இருக்கிறார். ஆனால் கட்சியினர்க்கு இன்னும் திராவிடக் கட்சியினரைப் போன்ற படைப்புத்திறன் இல்லை. ஒசாமா, ஒபாமா, சே போன்று எல்லாம் முயற்சிக்கவில்லை. அட மறந்துவிட்டேன். அதை குருமா எடுத்துக்கொண்டு விட்டார் அல்லவா? அதனாலென்ன அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என வாய்ப்புகள் நிறைய நமக்கு காத்திருக்க என்ன இது மண்வெட்டி, மேஜர் ஜெனரல் வேஷம் எல்லாம். ஞாயிற்றுக்கிழமையை எப்படி கழிப்பது என்பவர்களுக்கு இதுபோன்ற போலி செயல்பாட்டுவாதிகள் பெரும்

எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்

படம்
                                                 எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்                  பல்க்மான் எனும் நடிகர் சாலையோரத்தில் காரை ஓட்டி நடைபாதையில் படுத்திருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருக்கு கால் போய்விட்டது. மற்ற நான்கு பேருக்கு கடுமையான காயம். இது குறித்து பலரும் பலவிதமான பேசுகிறார்கள். பல்க்மானின் நண்பர்கள் அவருக்கு கண்ணீர் சிந்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். பலர் ஏழை மனிதர்களின் பக்கம் நின்று செய்தித்தாளில் பல பக்கம் எழுதுகிறார்கள். நான் கேட்கிறேன். பல்க்மான்தான் காரை வேகமாக ஓட்டினார். அது ஒருவரின் மேல் ஏறி அவர் இறந்துவிட்டார். அதற்காக அவரை எப்படி நீங்கள் சிறையில் அடைக்க முடியும்? அவர் ஒரு கதாநாயகன் சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும். பீயிங் ஹியுமன் எனும் நிறுவனத்தை நடத்தி பலருக்கு உதவிகள் செய்கிறார். ஓவியங்கள் வரைந்து விற்கிறார். இவருக்கு பல அரசியல்வாதிகள் தெரியும், அவர்களின் ஏகோபித்த அன்பு உண்டு. பிற்காலத்தில் தாமரைக்கட்சியில் சேர்ந்து எம்.பி கூட ஆகலாம்.  ஆனால் இறந்த மனிதர் யார்? அவருக்கு அடுத்தவேளை சாப்பிட சட்டைப்பையில் காசிருந்ததா? வானத்தை கூரையாக நினைத்து

தேடலும் தேடல் நிமித்தமும்

படம்
                                                    தேடலும் தேடல் நிமித்தமும்                                        ஒரு ஊரில் அது முற்றிலும் அந்நியமாக இருக்கையில் அதனைத் தேடி அதனுள் ஒரு இடத்தை உறுதி செய்து நிழலில் அமருவது பெரும்பாடு. அப்படி அமர்ந்தவர்களின் உதவியில் அமருவது அதன் பின் வருபவர்களின் வழக்கம். நகரம் கிராமத்தின் பல மனிதர்களை வசீகரித்து இழுக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சியும் வசீகரமும் மாநகரத்தில் வாழும் சில நாட்களிலேயே அவர்களுக்கு பிடிக்காது போய்விடும். காரணம் பொருள் தேடும் பரபரத்து தடதடத்து பாயும் காட்டாற்று வாழ்க்கையில் இங்கே முகம் கொடுத்து பேச, புன்னகைக்க யாரிருக்கிறார்கள் இங்கே?  பெரும்பாலான  சமயங்களில் கடற்காற்றும் வானமும் துணையாக நிற்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏன் நகரத்தில் சலனமில்லாது மோட்டார்சைக்கிளை சிறிதும் கவனமேயில்லாது ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஈர்க்கும்படி வேகமாக ஓட்டிச்செல்கிறார்கள்? சைலன்ஸரின் ஒலியை மாற்றியமைத்து அரசியல் மேடையின் ஆபாச கூச்சல்களுக்கு இணையாக அதனை நம் காதில் கேட்க வைக்கிறார்கள்? அனைத்திற்கும் காரணம் உண்டு.                 நகரங்களி

நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?

படம்
                    நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?                    சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் நண்பர் கதிரவன் என்பவர் தான் ஒரு அறக்கட்டளை நிறுவி ஏதாவது உதவிகளைச் செய்வதாக  கூறினார். ஆனால் நான் அதை பத்தாவது, பிளஸ் டூ மாணவர்களின் உற்சாக உளறல்களாக அப்போது நினைக்கவில்லை. ஆனால் அதன் பின் எனது வாழ்விலும், அவரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்று நாங்கள் ஒன்றாக சந்தித்துப் பேசும்போது மூலமான கொள்கை எண்ணங்கள் செயல்பாடு என்பதிலேயே பெரும் மாற்றத்தைப் பார்த்தேன். என்னைப்போல அவர் இல்லை. அவருக்கு  கிராமத்தில் நிலங்களும் உண்டு. வழக்குச் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதிலும் அவர்கள் தந்தை, தாய், அக்கா என எல்லோருமே விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்கள். அவருக்கு விடுமுறை என்று கிடைத்தால் அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கவே முடியாது. வீட்டிற்குச் சென்று அழைத்தால் தம்பி காட்டுல இருக்கறானப்பா என்றுதான் பலமுறை கூறியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து வந்த களைப்பு தீருவதற்குள் விவசாய வேலையில் மூழ்கிவிடுவார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிட்டு சிறிது முதலீ

இந்தியர்களை இணைப்பது எது?

படம்
                                         இந்தியர்களை இணைப்பது எது?           தேசியகீதம் என்கிறீர்களா? கிடையவே கிடையாது. உணவு  நிச்சயம் இல்லை. வேறென்ன? சினிமாதான். நான் தங்கியிருக்கும் அறையில் முதல் நாள் யாரும் என்னிடம் பேசவே இல்லை. சில விவரங்களை கேட்டார்கள் அந்த மூத்த அறைவாசிகள். என்ன வேலை? சம்பளம்? வேலையின் பெயர்? இதுபோன்றவை. அதில் ஒருவரின் பெயர் பதுமன் என்பதே நான் அவரிடம் தெலுங்கு படங்கள் தொடர்பான சில விஷயங்களை பேசியபின்னே அவர் முகம் மலர்ந்து தன் பெயரைக்கூறும் போதுதான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு அவர் தவிர்த்த மற்ற அறைவாசிகளிடம் நான் அதிகம் பேசுவது கிடையாது. அவர்களைப் பார்த்தால் கடப்பா ராஜூ உணர்ச்சிதான் மனதில் எழுகிறது. தவிர்க்கமுடியவில்லை.             ஒருவர் நல்ல யூரியா உரமூட்டை மாதிரி இருப்பார். அவர்  பெயர் தெரியவில்லை. ஆனால் படிக்கும் நேரம் தவிரத்து மூஞ்சியில் ஒரு க்ரீம் பூசுவார். ஆம்பாடுகளில் (தொடை இடுக்குகளில்) ஒரு க்ரீம் பூசுவார். ஒரு நாளாவது இந்த இரண்டும் மாற வாய்ப்பிருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. நாமதான் ஏறுக்குமாறா ஏதாவது பண்ணி கோமாளித்தனம் பண்ணுவமே? ப

பெத்த கண்ணு பேரழகி!

படம்
                                                        பெத்த கண்ணு பேரழகி!                 காலையில் அலங்க மலங்க எழுந்தால் அறையில் உள்ள ஆந்திர வாலாக்களில் ஒருவர் மூச்சு பயிற்சி செய்துகொண்டிருந்தார். திடீரென்று இவர்களுக்கு தேர்வு தொடங்கினால் மட்டும் மூச்சு பயிற்சி நினைவு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. அது போதாதென்று தெலுங்கில் பவன் கல்யாணின் தமிழில் இளைய தளபதி நடித்த பத்ரியில் கிழங்கு தின்ற நாய் கத்துவது போல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது ஒருபாடல் வருமே  அந்த வர்ஷனில் அங்கே பவன் உடற்பயிற்சி செய்வார். அப்படியே அதே காட்சிகள் தமிழில் இருக்கும். அதைப்போட்டுக்கொண்டு ஷெல்பை பிடித்து அதைப் பெயர்த்து தரைக்கு கொண்டுவருவது போல புல் அப்ஸ் எடுத்து மிரட்சிக் குள்ளாக்குவது அடுத்த அவரது திட்டம்.  அறையில் இன்னும் இரு ஆந்திர வாலாக்கள் விடுமுறையில் இருப்பதால் மிரட்டல் அடி குறைவாக இருக்கிறது. இன்னும் பல மிரட்சிகள் காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.             பேருந்தில் ஏறினால் அங்கும் இஸ்லாமிய பெண்களில் முகத்தையும் கண்களிலேயே பார்த்து ஓகே ஒரு தடவை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே செ

தயிர்சாதம்

                                                              தயிர்சாதம்                              மம்மி மெஸ் போய் சாப்புடுப்பா என்று செயின்ட் கூறியபிறகு போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம். செரி என்று நண்பர் க. சு விடம் கூறிவிட்டு வேகமாக குளக்கரை சாலையில் நடந்தேன். அரக்க பரக்க செல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அலுவலக நிர்வாகி பி இரண்டு மணிக்குள்ளார வந்துருவியா என்று கேள்வி கேட்டுத்தான் சாப்பிட அனுமதித்தார். வேகமாக செல்ல நினைத்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட வள்ளுவர் கோட்டம் செல்லும் வழி அது. சாலை தாண்டி உள்ளே சென்று பத்து ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கோ என்று போஸில் நீட்டினால் எத்தனை என்றார் ஒரு பெண்மணி. எத்தனையா ஒன்னுதாங்க என்றேன். மூணு ரூபா எடு என்றார். சில்லறை கேட்கும் மனிதர்களுக்கு பெரிய தெம்பு ஏற்பட்டு விடுகிறது. தருவானா இருக்குமா பாப்போமே என்பதுதான் அது. தயிர்சாதம்தான் வாங்கினேன். நன்றாக கொதிக்கும் பதம். தயிர் சூடாக சாப்பிட்டால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை சாப்பிட்ட பின் தினமணி கதிரில் ஆயுர்வேத மருத்துவரின் பதில்களை படித்து தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லையென்ற

களமாடுவோமா தோழா

                                                                 களமாடுவோமா தோழா   லோகத்தின்ட தோஸ்த் வெளியிடுகின்ற லோகம் புத்தகம் முழுக்க அறிவியல் தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் கூட படிக்கமுடியவில்லை. ஆனால் முக்கியமான சூழல் குறித்த விழிப்புணர்வு புத்தகம்தான். என்னால் ஒரு பத்தி கூட வாசிக்க முடியவில்லை. எப்படியோ உணவுத்திருவிழா என்று நடத்தி சோறு போட்டு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார்கள். ஞாயிறன்று ஒரு கூட்டம் போட்டு அந்நாளை வெற்றிகரமாக பொழுதுபோக்கு ஆக்குகிறார்கள். களப்பணி என்றால் காணாமல் போகும் ஆட்கள் இவர்கள். செய்பவர்கள் என்ன சொல்லிக்கொண்டா இருக்கிறார்கள்?  எல்லாமே அடையாளம் குறித்த சிக்கல்தான் என்று வடிவமைப்பாளர் கூறினார். எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துவிடுவார் அந்த நண்பர். அவரின் தீர்மானங்கள் என்னைப்பொறுத்த வரையில் பெரிதாக தோற்றுப்போனதில்லை. வயிற்றுக்கு சோறு முதலில் வேண்டும். லட்சியத்தை காய்ந்த வயிற்றுடன் அடைய முடியாது என்பது அவர் என்னுடனான உரையாடலில் எப்போதும் கூறும் அருள்வாக்கு. அதை ந

மம்மி மெஸ்

                                                                மம்மி மெஸ்             செயின்ட் இறுதியாக கூறிவிட்டார். ''இப்படி கருவாடா கெடக்காதீங்க சார். பணம் குறைவா இருந்தா  மம்மி மெஸ்ல சோறு தீருறதுக்குள்ள போயி சாப்பிட்டு வந்திருங்க''. எனக்கு திகிலெல்லாம் மம்மி மெஸ்லயே கடைசி வரை டோக்கன் வாங்க வைச்சிருவாரோன்னுதான். வேலைகளை இறுதி செய்துவிட்டு  ஜாலி டூர் கெளம்பிவிட்டார் ஆசிரியர். செயின்ட் ஏற்படுத்தி வைத்திருக்கிற காமெடிகளையும் பலரும் நம்புகிறார்கள். ஒருத்தர் பஞ்சாபிலிருந்து  ஆன்லைன்ல உங்க புத்தகத்தை படிக்க முடியுமா? என்று கேட்டிருந்தார். சும்மாவே அதை படிக்கமுடியாது என்று நான் மனதிலிருப்பதை எல்லாம் பேசிவிடமுடியுமா என்ன? சமாளித்து பதில் எழுதினேன். இணையதளம் வேலை செய்வதேயில்லை. ஆனால் எதற்கு அதை ஒவ்வொருதரம் அச்சிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதாவது கேட்டால் எல்எஸ் மேமை கேட்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். விவாதித்து நல்ல விஷயங்களை செய்வது நல்லதுதான். ஆனால் தாமதம் ஆகக்கூடாது இல்லையா? இப்போதே அதிக நாட்கள் ஆகிவிட்டன. நாமென்ன விகடனா? எளிதில் புத்தகங்களை விற்றுவிட? சித்தா

மூவ் பண்ணுப்பா உள்ள

                                                        மூவ் பண்ணுப்பா உள்ள          24ஏ அடிக்கடி அதாவது இருபது நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் அரசை முழுக்க நம்பி நாம் காத்திருந்தால் காலடியில் வேர்கள் முளைத்துவிடும். நானும் வொயிட் போர்ட் பேருந்தில் குறைந்த கட்டணத்தில் பயணித்துவிடலாம் என்றாலும் வாய்ப்பு கிடைக்கமாட்டேன்கிறது. எப்போதுமே டீலக்ஸ்தான் வருகிறது. 29சி எடுத்துக்கொள்ளுங்கள். ஏகப்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. முக்கியமான நேரத்தில் வொயிட் போர்ட் பேருந்தும் உள்ளது. ஆனால் 24ஏ  பேருந்தைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கனவுபோல. அன்று இரவு வெகுநேரம் காத்திருந்து பேருந்து ஏறினேன். கண்டக்டர் 'மூவ் பண்ணு உள்ள'  என்றார். கதை எங்கேயும் உள்ளது என்பார்களே. அப்படித்தான் ஒரு கதை தோன்றியது. கருப்பு ஏ எழுத்தின் மேல் சிவப்பு வட்டம் போடும் படம்தான். காதலிக்கும் பெண்ணும், ஆணும் பேருந்தில் செய்யும் சில சில்மிஷங்கள்தான்  படம். பயப்படாதீர்கள். உரையாடல்கள், சில தீண்டல்கள் என இந்தப்பகுதி மட்டும் நான் யோசித்தேன். மீதிப்பகுதி அவர்கள் வீடு சென்றடைந்தபின் தொட

சில்லறை முறிப்பது எனும் கலை

படம்
                                                         சில்லறை முறிப்பது எனும் கலை                  நகரத்தில் சில்லறை முறிப்பது ஒரு கலை. உங்களுக்கு இதில் பல வாய்ப்புகள் உள்ளன. சரக்கு வாங்குவீர்களோ இல்லையோ சில்லறைக்காக நான பல டாஸ்மாக் கடைகளை நாடி ஓடியிருக்கிறேன். ஊரில் சென்னை வருவதற்கு சில்லறை முறிப்பதற்காக மூன்று கடைகளை அடைந்து சில்லறை இரண்டில் இல்லை பிறகு ஒரு கடையில் கிடைத்தது. அந்தக்கடை எக்ஸ்ட்ரீம் புரட்சியாளரை எப்போதும் சந்தித்து பேசும் கடை என்றால் நீங்கள் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே?                சென்னைப் பேருந்துகளில் நடத்துநர்களிடம் நம் உள்ளூர்கள் போலில்லாது விரைவில் சில்லறை கிடைக்கிறது. ஆனால் இதெல்லாம் மடமடப்பான நோட்டுகளுக்குத்தான். ஆனால் ஒரு ரூபாய் சில்லறைக்கு என்ன செய்வீர்கள்? வேறு வழியே இல்லை. தேநீர்  பிடிக்கிறதோ இல்லையோ ஒன்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கும் கடைக்குப்போய் அக்கம்பக்கம் பார்த்து தேநீரை கவனமாக உள்ளிறக்க முயலத்தான் வேண்டும். சில வேளைகளில் வெந்நீர் மலச்சிக்கலுக்கு நல்லது என்று இயற்கை மருத்துவம் நூலில் தமிழ்வாணன் கூறியிருக்கிறார்.