எழுதுபவரும், வாசகரும்

எழுதுபவரும், வாசகரும் இந்த இருவருக்குமான நேயமே சிறிது சிக்கலான ஒன்றுதான். வாசகரைப்பொறுத்தவரை அவர் தன் மனக்கண்ணில் எழுத்தினைப் பொறுத்து எழுத்தாளரை ஒரு மனதாக முடிவு செய்து வைத்திருப்பார். ஆனால் ஓரிடத்தில் வாசகர் சந்திப்பில் எழுத்தாளரை சந்திக்கும்போது அவர் மனதில் நினைத்ததற்கு மாறாகவே இருக்கும் அவரது உடல், குரல், கருத்தினைப் பகிரும் தன்மை. இதனாலேயே பெரும்பாலும் எழுத்தாளரும், வாசகரும் சந்திப்பதென்பது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருந்ததில்லை. அப்படி சந்திக்க வேண்டும் என்றால் எழுத்தாளரின் எழுத்தில் அவர் அடைந்த உணர்ந்து எழுதிய தன்மையை நாம் சிறிதேனும் தொட முயற்சித்திருந்தால் அதைப் புரிந்திருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நம் சூழ்நிலையில் என்ன நிகழ்கிறது? பழனி முருகனுக்கு காவடி தூக்குவது போல எழுத்திற்கு காவடி தூக்குவது. இல்லையா? தூக்கி ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவது. எனது சகோதரரின் நண்பர் ஒருவர் வெகுஜன பத்திரிகை ஒன்றில் பயணக்கட்டுரை ஒன்றினை மனிதர்களின் அனுபவங்களோடு எழுதியிருந்த ஒரு எழுத்தாளரை புத்தகத்திருவிழாவில் சந்த