இடுகைகள்

ஆளுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக உளவியலின் தந்தை கர்ட் லெவின்!

படம்
  ஒருவரின் குணநலன்களுக்கு அடிப்படையானது என்ன? அவரின் தனிப்பட்ட இயல்பா, அல்லது அவரைச் சுற்றியுள்ள அல்லது அவர் வாழும் சூழலா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். தொடக்கத்தில் சூழல் மட்டும்தான் என சூழலியலாளர்கள் நம்பினர். ஆனால் 1920ஆம் ஆண்டு, கர்ட் லெவின் வெறும் சூழல் மட்டுமல்ல தனிநபரும் கூடத்தான் அவரின் ஆளுமை மாற்றத்திற்கு காரணம் என்று கூறினார்.  இரண்டு எதிரெதிரான விசைகள் மனிதரை அவரது இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல உதவுகிறது என கர்ட் லெவின் கூறினார். இவர் கூறிய கருத்துகள், அன்றைய உளவியல் உலகிற்கு சற்று புரட்சிகரமானவை.  தன்னைத்தானே மாற்றியமைப்பது கடினமான ஒன்று. ஒருவர் அதுவரை சேமித்து வைத்த கொள்கைகளை தூக்கிப்போட்டுவிட்டு அனைத்தையும் மாற்றியமைத்து இலக்கை நிர்ணயித்து பயணம் செய்வது கடினம். அதுவே அமைப்பு ஒன்றை இதுபோல மாற்றினால் அதில் ஏராளமானவர்களின் பார்வை, அறிவு, தலையீடு என அனைத்துமே இருக்கும். இதையெல்லாம் உள்ளீடாக பெற்று அமைப்பு தன்னை மாற்றிக்கொள்கிறது. அப்படித்தான் காலத்திற்கேற்ப சவால்களை சமாளித்து வெல்ல முயல்கிறது.  ஒரு அமைப்பை மாற்ற முயலும்போதுதான் அதை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியும் என்று

குடும்பமே மனிதர்களின் ஆளுமைகளை உருவாக்குகிறது! - வர்ஜினியா சாடிர்

படம்
  ஒரு குடும்பம் சமூகத்திற்கு என்ன செய்கிறது? அங்குதான் சமூகத்தை முன்னே கொண்டு செல்ல, பின்னே கொண்டு செல்வதற்கான பல்வேறு மனிதர்கள் உருவாகி வருகிறார்கள். அமெரிக்க உளவியலாளர் வர்ஜினியா சாடிர் என்பவர், ஒருவரின் ஆளுமை உருவாகி வளர அவரின் குடும்பமே முக்கியக்காரணம் என்று கூறினார். ஒருவரின் ஆளுமை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக வளருவதற்கு குடும்ப சூழலே முக்கியமானதாக உள்ளது.  ஆரோக்கியமான குடும்பத்தில் அன்பு காட்டுவது வெளிப்படையானதாக நடைபெறும். அதில் மறைக்க ஏதுமில்லை. நல்ல முறையில் உறவினை வளர்ப்பது ஒருவரின் உளவியலை மேம்படுத்தி பக்குவப்படுத்துகிறது.  குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களோடு பேசி பழகி அன்பு காட்டி, எதிர்வினை அளிப்பதன் வழியாக சமூகத்தோடு உரையாடுவதற்கான சூழல் உருவாகிறது. மனச்சோர்வு இருக்கும்போது கூட முன்னர் நாம் செய்த பல்வேறு குடும்ப பாத்திரங்கள்தான் மனதிற்கு ஆறுதல் தந்து உதவுகிறது. நம்மை கட்டமைக்கிறது. எனவே குடும்பமே மனிதர்களை கட்டமைத்து வெளியே அனுப்பும் தயாரிப்பு சாலையாக உள்ளது. குடும்பத்தில் உள்ள சில பாத்திரங்களை வர்ஜினியா விவரிக்கிறார். எப்போதும் குறைகளைக் கூறிக்கொண்டே இருப்பவர், புத்திசால

தூங்கும் கோணமே ஆளுமையை தீர்மானிக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவது இமைகளை கீழே

தூங்கும் கோணத்தை வைத்து ஒருவரின் ஆளுமையைக் கணிக்கலாம்!

படம்
  நிழலா, நிஜமா? முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவத

மனநலனைக் கட்டுப்படுத்தும் உயிரிவேதியியல் மருந்துகள் - மனமறிந்து பழகு இறுதிப்பகுதி!

படம்
pixabay மனமறிந்து பழகு! - இறுதிப்பகுதி வேதிப்பொருட்களால் சிகிச்சை ஒருவருக்கு சூழல்களாலும் , தன்னுடைய குழந்தைப்பருவ வலி நிரம்பிய அனுபவங்களாலும் பாதிப்பு ஏற்படலாம் . அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக , பழக்கவழக்கமாக மாறிவிடுவதை தெரபிகளால் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது . அதற்காகவே வேதியியல்ரீதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன . அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி , அங்கு 1999 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மன அழுத்த மருந்துகளின் பயன்பாட்டு அளவு 95 சதவீதம் கூடியுள்ளது . இதற்கு முக்கியக் காரணம் , தொழில்துறை மாற்றங்கள் , பொறுப்புகள் கூடியுள்ளதும் , உறவு சார்ந்த சிக்கல்களும் முக்கிய காரணமாக உள்ளன . இவற்றுக்கு தெரபியோடு மூளையிலுள்ள செரடோனின் போன்ற மனநிலையை மாற்றும் சுரப்புகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகின்றன . இவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்தவேண்டும் . இந்த மருந்துகளுக்கும் உடல் கட்டுப்பட மறுத்தால் , இறுதிக்கட்டமாக மூளையில் சிறிய அளவு மின்சாரம் செலுத்தப்படும் . இப்போது மனநல சிகிச்சைகளுக்குப் பயன்படும் மருந்த

குடும்பத்தில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைத் தீர்க்க உதவும் தெரபி முறைகள்!

படம்
pixabay இஎம்டிஆர் எந்த பணிகளையும் செய்வதற்கு நாம் வேறு சூழல்களால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும். பொதுவாக நாம் ஏதாவது பணியில் இருக்கும்போது நம்மை அதை செய்யவிடாமல் தடுப்பது, நமது கண்களும் காதுகளும். இந்த தெரபி முழுக்க கண்களுக்கானது. தெரபி வல்லுநர் தன் சுட்டு விரலைக் காட்டி குறிப்பிட நிகழ்ச்சியை நினைக்கச் சொல்லுவார். பொதுவாக நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை விட துயரமான வேதனையான நிகழ்வுகள்தான் நினைவுக்கு வரும். அவற்றிலிருந்து ஒருவரின் மனதை திருப்பி அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவதுதான் இஎம்டிஆர் தெரபி நோக்கம். ஆர்ட் தெரபி அனைவராலும் தன்னுடைய உணர்வுகளை பேசுவதன் மூலமாக வெளிப்படுத்திவிட முடியாது. அதற்காகவே ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களை அவர்களது கலை வெளிப்பாட்டு வழியாக அறியும் தெரபி. ஓவியங்களை நாம் வெளிப்படையாக பிறருக்கு பார்வையிட அனுமதிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வும், விமர்சனங்களை ஏற்கும் மனநிலையும் ஏற்படுகிறது. ஓவியம் மட்டுமல்ல, இசை, எழுத்து ஆகியவையும் ஒருவருக்கு உதவலாம். இசை கேட்பது மட்டுமல்ல அதனை உருவாக்குவதும் மூளையிலுள்ள டோபமைன் சுரப்பில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அனிமல்

ஆளுமைக் குறைபாடுகளை போக்கும் மனநல தெரபி முறைகள்!

படம்
pixabay மையப்படுத்திய தெரபி இதில் உளவியலாளர் நோயாளியை சுதந்திரமாக பேச வைக்கிறார். இதன் காரணமாக அவர் தனது மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இவற்றில் உளவியலாளர் பங்கு நோயாளி சொல்வதை முழுமையாக கவனித்து உள்வாங்குவது மட்டுமே. இதனால் தான் செய்தது சரி, தவறு என வாதிடுவதை மெல்ல நோயாளி கைவிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. தன் செயல்சார்ந்து வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை இந்த தெரபி ஒருவருக்கு வழங்குகிறது. தெரபி அளிப்பவர் நோயாளி மீதான கரிசனம், நேர்மறையான எண்ணதுடன் அவரை அணுகுகிறார். அவரின் கண்களின் வழியாக உலகைப் பார்ப்பதால் உளவியலாளருக்கும், நோயாளிக்கும் நம்பிக்கையான உறவு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை சிறப்பாக பயனளிக்கும்   வாய்ப்பு பெருகிறது. ரியாலிட்டி தெரபி நோயாளிக்கு உறவுகளை பராமரிக்க பாதுகாக்க வளர்க்க தெரியாத சிக்கல் இருக்கும். இதனால் குறை, புகார், வசை பாடாமல் எப்படி உறவை வளர்ப்பது என இந்த தெரபி வழியாக உளவியலாளர் கற்றுத் தருகிறார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கான சுதந்திரம், பணி சார்ந்த அங்கீகாரம், குடும்பம், உறவுகள், நட்பு, உணவு உடை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த தெரபி உறுதி செய்க

சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ராபர்ட் கென்னடி!

படம்
ராபர்ட் கென்னடி ராபர்ட் கென்னடி ஜான் எஃப் கென்னடியின் சகோதரர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர். சகோதர ருக்குப் பின்னர் தேர்தலில் நிற்க நினைத்தார். ஆனால் சதிகார ர்களால் படுகொலை செய்யப்பட்டார். சகோதர ரின் ஆதரவுடன் அவரது ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக, பதவி வகித்தார். 1925 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் கென்னடி, 1960 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். பின்னர், சகோதரர் படுகொலையான பின்னர் நியூயாரக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் முயற்சியிலும் இருந்தார். 1968 ஆம் ஆண்டு ஜூன் 5 தாக்கப்பட்டு படுகாயமுற்றார். அடுத்தநாள் இறந்துபோனார். ராபர்ட்டின் தந்தை ஜோசப் சீனியர், தொழிலதிபர். இவரின் அம்மா ரோஸ், போஸ்டன் நகர மேயர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். ஜோசப்பிற்கு பிரிட்டனில் அமெரிக்கத்தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் ஏற்க, குடும்பம் இங்கிலாந்திற்கு பயணமானது. பின்னர் இரண்டாம் உலகப்போர் வெடிக்க, வேகமாக அமெரிக்காவுக்குத

ஆளுமையை மாற்றும் தூங்கும் நிலைகள்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி தூங்கும் பொசிஷன்கள், நமது ஆளுமையை மாற்றுமா? தூங்குவது, சாப்பிடுவது தவிர்த்து நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்துதான் இவர் இப்படி, அவர் இப்படி என அனுமானம் செய்கிறார்கள். வரையறுக்கிறார்கள். இந்த விஷயத்தை 2012ஆம் ஆண்டு வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் ஆளுமைக்கும் தூங்குவதற்கும் பெரிய தொடர்பில்லை என நினைக்கலாம். ஆனால் 2014ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பேரா.ரிச்சர்ட் வைஸ்மன் தூங்கும் நிலைகளுக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் தொடர்புண்டு என சொல்லியிருக்கிறார். இடதுபக்கம் சாய்ந்து படுப்பவர்கள் கிரியேட்டிவிட்டி பொங்கும் ஆட்கள் எனவும், அருகில் உள்ள மனைவிக்கு நெருக்கமாக படுத்து தூங்கும் ஆட்கள் ஜோவியலான ஆட்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். குப்புறப்படுத்து தூங்கும் என்னைப்போன்றவர்களை சுயநம்பிக்கை இல்லாதவர்கள் என்று வேறு கூறியிருக்கிறார். உண்மையா இல்லையா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். நன்றி - பிபிசி

அக்கறை கொள்ளாதவர்களின் வாழ்க்கை!

படம்
ஒருபடம் ஒரு ஆளுமை - லிஜி இறுதி அத்தியாயம்! விமானத்தை விட   வேகமாக பறந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில் திசைகளின்றி, மொழிகளின்றி, நம்பிக்கையின்றி, உணர்வுகளின் வழியாக மென்மையாக... மிகவும் மெதுவாக நம்முடன் சிலரும் பயணிக்கின்றனர். அவர்களின் இருளும், மௌனங்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் வெளிச்சமாக இருக்க வேண்டியவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நாம் தான். ஆனால், நம் பயணமே சரியான இலக்கின்றி பல நெருக்கடிகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும்போது எதிரே வருபவரையே நம்மால் கண்டுகொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஆனால், ஒரு கலைஞன் அதைக் கண்டுகொள்கிறான். நாம் கண்டுகொள்ளாத, தவறவிட்ட, அக்கறை காட்டாத ,இழந்து விட்ட வாழ்க்கையை தன் கலையினூடாக நமக்கு ஞாபகபடுத்துகிறான். நாம் கண்டுகொள்ளாமல், அக்கறை காட்டாமல் விட்டவர்களின் வாழ்க்கையைப் போல நமக்கும் கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வெளிச்சத்தின் முன்னால் நம்மையெல்லாம் குற்றவாளியாக நிறுத்த வைக்கிறான் ஒரு சிறந்த கலைஞன். இந்த மாதிரி நாம் கண்டுகொள்ளாமல் விட பட்ட பலரில்