இடுகைகள்

அஞ்சலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள் , காய்கறிகள் விற்பன

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்

சத்தீஸ்கர் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கேள்வி கேட்ட சமூக செயல்பாட்டாளர்! - இலினா சென்

படம்
    சமூக செயல்பாட்டாளர் இலினா சென்         அஞ்சலி இலினா சென் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை கேள்வி கேட்ட செயல்பாட்டாளர் இவர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டுகளை தங்கி வணிக சங்கங்களில் செயல்பட்டு வந்தார் . சமூக செயல்பாட்டாளர் , ஆசிரியர் எழுத்தாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு . அரசின் ஆதரவுப்படையாக சல்வா ஜூடும் என்ற படை அமைபப்பட்டு பழங்குடி மக்களை அச்சுறுத்தி வந்தது . இப்படை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கிக்கொடுத்த சமூக செயல்பாட்டாளர்களில் இவர் முக்கியமானவர் . இவரது கணவர் டாக்டர் பினாயக் சென் மீது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அரசு வழக்கு பதிந்துள்ளது . இலினா சென் , இன்சைடு சத்தீஸ்கர் - எ பொலிட்டிகம் மெமோர் , சுக்வாசின் - தி மைக்ரன்ட் வுமன் ஆப் சத்தீஸ்கர் என்ற நூல்களை எழுதியுள்ளார் . இவர் கடந்த 9.8.2020 அன்று கோல்கட்டாவில் புற்றுநோயாடு போராடி மரணமடைந்தார் . இந்தியன் எக்ஸ்பிரஸ்