இடுகைகள்

லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!

படம்
  அன்புக்குரிய மெகந்தியர்களே,  பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு  ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம். மனேஷ் எப்படி இருக்கீங்க? உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா? என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா? ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறைய