இடுகைகள்

குலாம்நபி ஆசாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திராகாந்தி போல துடிப்பாக செயல்படும் தலைவர் காங்கிரசுக்கு தேவை! - குலாம் நபி ஆசாத்

படம்
      குலாம் நபி ஆசாத்   குலாம் நபி ஆசாத் நீங்கள் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்துள்ளீர்கள். ஆனால் இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதுதான் காரணமா? நான் கட்சி தலைமையிடம் 2004லிருந்தே என்னை பதவியிலிருந்து விடுவிக்கச்சொல்லி கேட்டுவந்தேன். ராஜீவ்காந்தி தொடங்கி பல்வேறு தலைவர்களுடன் நான் பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன். இந்த பணியில் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் காங்கி ஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று எனக்கு வயதாகிறது. குடும்பம் சார்ந்த சில பொறுப்புகளும் உள்ளன.முன்னர் தீவீரமாக உழைத்தது போல இன்று என்னால் உழைக்கமுடியவில்லை. 2016இல் உத்தரப்பிரதேசம், 2019இல் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்சி பொது செயலாளராக இருந்துள்ளேன். இதுபற்றித்தான் நான் கடிதம் எழுதி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் என்னை பொறுப்பிலிருந்து விடுவித்தது என் மீதான கருணையாகவே பார்க்கிறேன். பழிவாங்கும் உணர்ச்சியாக அல்ல. சோனியா காந்தியின் குடும்பம் என்மீது மரியாதையுடன்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள் .அந்நிலை இன்றுவரை