இடுகைகள்

வயிறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

படம்
    டீ டாக்ஸ் உணவுகள் உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.   மாவுச்சத்து உணவு, வறுத

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்

வயிற்றுக்குள் ஓர் புயல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  10.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் நெருக்கிக்கொண்டு இருக்கும். தங்களுக்கும் வேலைகள் அதிகரிக்கும்.  கட்டுரைகளை எழுதும் வேலைகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன. முன்னமே இதற்கான கட்டுரைகளை எழுதி வைத்துவிட்டேன். அதற்கான தேதிகளை மட்டும் மாற்றினால் போதும். மாதத்திற்கு எழுதியதால் பதிப்பிக்கும் தேதியை எடிட்டர் மாற்றிச் சொன்னார். இதனால் வேலை செய்யாமல் இருக்க முயலும் கோ ஆர்டினேட்டர் கட்டுரைகளை மாற்றத் தடுமாறிவிட்டார்.  கட்டுரைகளை அழிப்பேன் என மிரட்டுவதால், உதவி ஆசிரியர்களே அவர் செய்யும் வேலையை செய்து கட்டுரைகளை வேறு தேதிகளுக்கு மாற்றினோம்.  எண்ணெய் பலகாரங்கள் எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் தட்டு முட்டு சாமான்களை உருட்டுவது போல சத்தம் எழுகிறது. சிலசமயம் பலகாரங்களின் வாசனையைப் பொறுக்க முடியாமல் சாப்பிட்டால் இரவில் வயிற்று உப்புசம், வாந்தி, பேதி ஆகிறது. உடலை பராமரிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.  எங்கள் நாளிதழ் பள்ளிகளுக்கு போகிறதா என்று தெரியவில்லை. குறைந்த பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள் என சீஃப் டிசைனர் சொன்னார். தகவல்படம் இனி நான் தான்

ஹைடெக் மாத்திரை, மரபணு நோய்களை ஆராயும் முறை!

படம்
  ஹைடெக் மாத்திரை தடுப்பூசி, இன்சுலின் என பலரும் ஊசி வழியாக மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த  ஊசி வழி மருந்தை, மாத்திரை வடிவில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதுதான் அலெக்ஸ் ஆப்ராம்சனின் ஐடியா. அலெக்ஸ் கண்டறிந்துள்ள ஹைடெக் மாத்திரையில் சோமா (Soma)என்ற சிறு கருவி உள்ளது. இதனை சாதாரண மாத்திரை போல விழுங்கினால் போதும்.  உணவுக்குழாய் வழியே வயிற்றுச்சுவர்களுக்குச் செல்லாமல் மருந்து ரத்தவோட்டத்தில் எளிதாக கலந்து விடுகிறது. எலிகளிடமும், பன்றிகளிடமும் செய்த முதல்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது அலெக்ஸ் குழு.  மரபணு நோய்களை ஆராயும் முறை மனித நோய்களுக்கு காரணமாகும் மரபணுக்களை அடையாளம் கண்டால், நோய்களை முன்னரே கண்டறிந்து தடுக்கலாம். நோய் ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைத்து நோய்களை தடுப்பதே ஆராய்ச்சியாளர்களின்  எண்ணம்.  அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் ஷின் ஜின், ஜீன் தெரபி பற்றி ஆய்வு செய்து வருகிறார். “தொடக்கத்தில் ஒரு நேரத்தில் ஒரு செல் அல்லது ஒரு மரபணு என்று ஆராய முடியும

செரிமானத்தின் வேதியியல் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர் - வில்லியம் குஹ்னே

படம்
  வில்ஹெம் குஹ்னே ( wilhelm kuhne) வில்ஹெம், 1837ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.  கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் வேதியியல், உடல் அமைப்பு, நரம்பியல் பற்றிய பாடங்களைப் படித்து தேறினார். பட்டதாரியான பிறகு தவளையில் ஏற்படும் நீரிழிவு பற்றி செய்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார்.  ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்து உடலியல் பற்றிய பாடங்களைக் கற்றார். 1871ஆம் ஆண்டு ஹெய்டெல்பர்க் பல்கலையின் தலைவராக ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதவியேற்கும் முன்னரே, வில்ஹெம் உடலியல் பாடங்களைக் கற்றுவிட்டார். இப்பல்கலையில் வில்ஹெம் சேர்ந்தபிறகு, தசைகள், நரம்புகள் பற்றி கவனம் எடுத்து படித்தார். குறிப்பாக கண் நரம்புகள்.  கூடுதலாக, செரிமானத்தின் வேதியியல் பற்றியும் ஆய்வுகளைச் செய்தார். இதில்தான் ட்ரைப்ஸின் எனும் புரத என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1899ஆம் ஆண்டு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் பல்கலையில்தான் இருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் காலமானார்.  the biology book big ideas simply explained book

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்

வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

படம்
                    என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ? என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும். என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம். மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும். டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லல

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

வயிற்றுக்குள் நுண்ணுயிரிகள் எப்படி வருகின்றன?

படம்
              வயிற்றுக்குள் பிரளயம் ! ஒருவரின் வயிற்றுக்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . தினசரி வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் நடத்த நுண்ணுயிரிகள் உதவுகின்றன . மனித உடலில் முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்றால் வயிற்றில் மட்டும் முப்பத்து ஒன்பது டிரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . இதில் வைரஸ் , பாக்டீரியா , பூஞ்சை ஆகியவை உள்ளடங்கும் . மிகச்சிறியவை எ்ன்பதால் உடல் எடையில் பாதிதான் வரும் . ஆனால் இதன் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது . ஒவ்வொரு செல்களிலும் இருபது முதல் இருபத்தைந்தாயிரம் டிஎன்ஏக்கள் இதில் உள்ளன . நுண்ணுயிரிகளை இதோடு ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகம் . நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி வேகம் அதிகம் . மரபணுக்களை மாற்றிக்கொண்டு தனக்கு தேவையான செல்களில் புகுந்துகொண்டு செயல்படும் வேகம் இவற்றுக்கு அதிகம் . மனிதர்களின் உ

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி