இடுகைகள்

சிறந்த பணியாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

படம்
  காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்! மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார்.  மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை.