எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!
எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி! திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரையில் 24ஏ அல்லது 24சி என இரண்டு பேருந்துகள்தான் நான் பயணிக்கும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. வேறங்கும் இல்லாத போக்குவரத்து நெரிசலை திருவல்லிக்கேணி செல்லும் வழியில் சந்திக்கும் தருணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான தொடக்க அறிகுறிகள் நேபாள் தேசத்தினர் போல இருக்கும் நடத்துநர் கை போடேம்மா, பஸ்சு திரும்ப வேண்டாமா? போடு கையப்போடுங்கப்பா என்பார். பேருந்து திரும்பும் ஆயிரம் விளக்கு மசூதி நிறுத்தம் அருகில் ஆசிப் பிரியாணிக் கடையெல்லாம் தாண்டி. இங்கு போக்குவரத்து மிகுவதற்கான காரணம் நிறைய இருக்கின்றன. முக்கியமான ஒன்று ரிவல்யூசன் செல்வி ஆதிக்கம் செலுத்தும் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ளது. அதனால் தீர்ப்பு எழுதப்படுவதும் வாய்தா வாங்கப்படும் போதெல்லாம் போக்குவரத்தினை நிறுத்தி விடுவதுதான் தொண்டர்களின் பெரும் கவனக்குவிப்பு ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பாக இருக்கும். செல்வி கோவாண்டி நீதிபதியால் விடுதலை செய்யப்பட்ட அன்று போக்குவரத்தில் பேருந்து ஐஸ்ஹவுஸ் க