இடுகைகள்

சாதிக்கயிறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கைகளைச் சுற்றிய பாம்பு - சாதிக்கயிறுகள் எதற்கு?

படம்
thewire இது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இப்படி கைகளின் கயிறு பேண்ட் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படித்தானே இருக்கிறது? எங்கள் சாதி பற்றி எங்களுக்கு பெருமை என்று பேசியது யாரோ அல்ல; நாளை இந்த சமூகத்தில் தலைமை தாங்கிச்செல்லக்கூடிய மாணவர் ஒருவரின் குரல்தான் இது. திருநெல்வேலி, தென்காசியில் சாதிக்கயிறுகளின் ஆட்சி அதிகம். அண்மையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளில் நெற்றியில் திலகம்,  பொட்டு, சாதியைக் குறிக்கும் கலர் கயிறுகள், பேண்டுகள் கட்டிவரக்கூடாது என தடை விதித்துள்ளது. சாதியைச் சொல்லும் இந்தப் பெருமை முதலில் பெரியவர்கள் பையன்களுக்குக் கற்றுத்தந்தனர். இந்த நச்சு பள்ளிக்குள் புகுந்தது. இப்போது இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருந்த மாணவிகளும் தம் தலையில் கலர் ரிப்பன்களை சூடி சாதியை பிறருக்கு சொல்லத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் ஒழுங்காகப் பேசவும், நடக்கவும் தொடங்கும் முன்னரே சாதிப்பெருமைக்கான சுழலில் சிக்கி விடுகின்றனர். அவர்களது சாதியைச் சேர்ந்த தலைவர்களது புகழ் பாடத்தொடங்குகின்றனர். இதுதான் இந்த சாதி நச்சுப்ப