இடுகைகள்

தலைவலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

படம்
            தடுப்பூசியால் ரத்தம் கட்டினால் என்ன அறிகுறிகள் ஏற்படும் ? 1. கடுமையான தலைவலி ஏற்படும் . இதற்கு நீங்கள் வலிநிவாரணி பயன்படுத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது . 2. தூங்கும்போதும் , உட்கார்ந்திருக்கும் தலைவலியின் கடுமையை பொறுத்துக்கொள்வது கடுமையாக இருக்கும் . 3. இதுமட்டுமல்ல . தலை கிறுகிறுப்பு , குமட்டல் , பேசுவதில் தடுமாற்றம் , பார்வை மங்கலாவது ஆகியவை உபரி விளைவாக ஏற்படும் . 4. நெஞ்சு வலி , மூச்சு விடுவது குறைவாகும் . அடிவயிற்றில் வலி தோன்றும் , கால்கள் நடக்கமுடியாமல் தடுமாறும் . இப்போது என்ன செய்வது ? கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் மேற்சொன்னது போல தோன்றினால் சொன்ன நேரத்தில் அடுத்த தடுப்பூசியையும் போடவேண்டும் . நான்கு நாட்கள் முதல் நான்கு வாரம் அதாவது ஒருமாதம் வரை அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவேண்டும் . பெண்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவது உண்மைதான் . ்ஆஸ்ட்ராஸென்கா வகை ஊசியைப் போட்ட ஏராளமான பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை . இங்கிலாந்தில் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்களில் 41 சதவீதம் பேர் மு

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள்

படம்
ஒற்றைத் தலைவலிக்கு இன்று விக்ஸ், அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங், ஜண்டு பாம் , டைகர் பாம் என விதவிதமான தீர்வுகள் உண்டு. ஆனால் அன்று ஒரே தீர்வு, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும் கைமருந்துகள்தான். இல்லை ஆயா சொல்லும் பச்சிலை மருந்துகள்தான். ரத்தம் வெளியேறினால் தலைவலி நிற்கும் ஆம். நவீன மருத்துவம்  வரும் முன்பு உடலிலிருந்து  குறிப்பாக மூக்கிலிருந்து சிறிது ரத்த த்தை வெளியேற்றினால் தலைவலி குறையும் என ஊர் என்ன உலகமே நம்பியது. பின்னர் ஸ்விஸ் நாட்டு மருத்துவர், சாமுவேல் அகஸ்டே தலைவலிக்கான மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தினார். பூண்டு பேய் வந்தால் பூண்டைக் காட்டி தப்பிவிடலாம் என பேய் சீரியல்களை தூர்தர்ஷனில் பார்த்து நம்பிய அப்பாவி நான். ஆனாலும் பூண்டை தலைவலிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியபோது பெரிய ஆச்சரியமில்லை. வாயு சமாச்சாரத்திற்கு இதனைப் பயன்படுத்தும்போது வலி சமாச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதா? என சமாதான சகாவு ஆனேன். 11 ஆம் நூற்றாண்டு அபு அல் காசிம் எனும் மருத்துவர் பூண்டை தலைவலிக்கான சூப்பர் மருந்தாக பரிந்துரைத்தார்.  கையில் காயம் செய்து அதில் பூண்டைப் புதைத்து விநோத வைத