இடுகைகள்

சித்தமருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ஆயிரம் நன்கொடை வழங்கலாமே! கடிதங்கள்

படம்
             மருந்தே உணவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இந்த வாரம் ஊருக்கு சென்று அம்மாவுடன் ஈரோடு சித்த மருத்துவமனைக்கு சென்றேன் . எனக்கு ஒவ்வாமை மருந்துகளுடன் அம்மாவுக்கு தலைசுற்றல் பிரச்னைக்கு கிலோ கணக்கில் கஷாயம் , மாத்திரைகள் , லேகியங்களை வாங்கி வந்தோம் . அம்மாவுக்கு நரம்புரீதியான பிரச்னை தீவிரமாகிக்கொண்டே வருகிறது . அலோபதி அவளுக்கு பெரிதாக கேட்கவில்லை . எனவே நானே சித்தமருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன் . எந்த பிரச்னைக்கும் அடுத்தவர்களை மட்டுமே குறைசொல்லும் அற்புத குணம் கொண்டவள் , என்னுடைய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டாள் . சித்த மருந்துகளை சாப்பிடுவதில் உள்ள பிரச்னை பத்தியம்தான் . மருந்து கால் பகுதி , பத்தியம் முக்கால் பகுதி என சாப்பிட்டால் உடலின் தன்மையே சில மாதங்களுக்கு பிறகு மாறிவிடுகிறது . எனக்கு கத்தரிக்காய் , கிழங்கு வகைகளை தவிர்க்க சொல்லிவிட்டதால் ஹோட்டலில் அவற்றை பரிமாறுவதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது , இவற்றை சாப்பிட்டு . நானே சமைத்து சாப்பிட்டு வருவதால் அதிக சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்க