இடுகைகள்

நூல்விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிபெயர்ப்பு பாடலைப் பட

நூலின் மீது காதல் கொண்டவர்களைப் பற்றிய நூல் - பைபிலியோஹாலிசம் - டாம் ராபே

படம்
  பைபிலியோஹாலிசம் நூல் அட்டை டாம் ராபே பைபிலியோஹாலிசம் டாம் ராபே பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் ச.சுப்பாராவ் என்பவர் புத்தக காதல் என தொடரை எழுதி வருகிறார். மாதம்தோறும் நூல்களைப் பற்றிய நூல்களை அறிமுகம் செய்கிறார். அதில்தான் பைபிலியோஹாலிசம் என்ற நூல் கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி. பைபிலியோஹாலிசம் என்றால் நூல்களை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம். இந்த வகை குறைபாடு கொண்ட ஆட்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. இவர்கள் நூல்களை வாசிக்கிறார்களா என்றால் அதில் கவனம் இருக்காது. செம்பதிப்பு, மலிவுவிலைப்பதிப்பு, கெட்டி அட்டை, பளிச்சிடும் தாள் என ஒரே நூலை பல்வேறு தரத்தில் வாங்கி வீடு முழுக்க அடுக்கி வைத்திருப்பார்கள். நூல்களை வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடுக்குவதே இவர்களது வேலை. இப்படி நூல்களை வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், அரிய நூல்களை வாங்குபவர்கள், நூல்களை வாசிப்பதே வாழ்க்கை என இருப்பவர்கள என ஏராளமானவர்கள் பற்றி பகடியான முறையில் டாம் ராபே   விவரித்து எழுதியிருக்கிறார். ஏனெனில் அவரே பைபிலியோஹாலிக்தான். நூல்களை வாசிக்கும் வேட்கை கொண்டவர்கள் பற்

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத மதங்களை தவிர்க்கிறார். 

சொத்தைக் கைப்பற்ற குடும்பத்திற்குள் நடக்கும் ரத்தக்களறி! - கணேஷ், வசந்த் துப்பறியும் கொலை அரங்கம்

படம்
                    கொலை அரங்கம் சுஜாதா கணேஷ் துப்பறியும் , வசந்த் ஏராளமான எசகுபிசகு நையாண்டி செய்யும் கதை . மௌபரி ரோடில் தொடக்கவிழா காணும் காம்ப்ளக்ஸ்தான் உத்தம்பீனா முத்தமிழ் மன்றம் . தொடங்கிய முதல்நாளே இலங்கை அமைப்புகள் பாம் வைக்கின்றன . அடுத்தடுத்த தாக்குதல்கள் பீனா , உத்தம்மை குறிவைத்து நடக்கின்றன . கட்டட தொடக்க விழாவிற்கு போன கணேஷ் - வசந்த் இந்த விவகாரங்களை அவர்களே சுயமாக எடுத்து விசாரிக்கின்றனர் . ஏராளமாக கிடைக்கும் சொத்துக்காக உத்தம் அல்லது பீனாதான் கொலைகளை செய்ய முயல்கிறார்கள் என நினைக்கிறார்கள் . ஆனால் அப்போது அமெரிக்காவிலிருந்து வரும் உத்தம் பீனாவின் உறவினர் ராஜேந்திரன் மீதும் சந்தேக நிழல் விழுகிறது . அவரை பின்தொடர்ந்து போகும்போது , ராஜேந்திரன் கொலையாகி லிப்டில் கிடக்கிறார் . உண்மையில் யார் கொலைகாரன் கணேஷ் அடிபட்டும் வசந்த் முதுகில் குத்துப்பட்டு கண்டுபிடிப்பதுதான் இறுதிக்காட்சி . கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சுஜாதாவின் நையாண்டி ரசிக்கவைக்கிறது . அதேநேரம் கொலையை யார் செய்திருப்பார்கள் என்று கணேஷை விட வாசகர்களை குழப்பிவிடுகிறார் . பிறருக்கு ஏற்ப

அபூர்வ வெள்ளாட்டின் கதை - பூனாச்சி - பெருமாள் முருகன்

படம்
அன்ஸ்ப்லாஸ் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை  பெருமாள் முருகன்  காலச்சுவடு  சமூகம் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லி படாதபாடு பட்ட பெருமாள் முருகனின் கதை. எளிமையாக மேய்ச்சல் நிலத்தில் மேயும் வெள்ளாட்டை வைத்தை கதையை எழுதிவிட்டார்.  இவர்களுக்கு அதிசயம் போல கிடைக்கும் கருப்பு மூடு ஆடுதான் பூனாச்சி, உருவ அளவில் பொசுக்கென இருக்கும் ஆட்டுக்குட்டியை வழிப்போக்கர் கிழவனுக்கு இலவசமாக கொடுத்துவிட்டு போகிறார். வீட்டுக்கு கொண்டு போனால் அது பூனைக்குட்டியா என்று கேட்கிறாள் கிழவி. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் ஏதோ புழு போலத்தான் அவர்களுக்கு தெரிகிறது. முழு கருப்பு நிறம் என்பதால் இருக்கும் ஆடுகளிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  இந்த ஆட்டுக்குட்டி எப்படி அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது, அதன் சிறப்பு என்ன என்பதை பின்னாளில் கிழவனும் கிழவியும் அறிகிறார்களா என்பதுதான் கதை.  நாவல் மொத்தம் 169 பக்கங்கள்தான். வேகமாக வாசிக்க முடியும் எளிமையான கதையும் கூட.  கதையின் முடிவு தொன்மைக் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மேய்ச்சல் நிலத்தில் வானம் பார்த்த பூமியில் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை இது. நாவல் முழுவது

லைட்டாக பிரச்னைகளை அணுகினால் - மேக்கிங் இந்தியா ஆசம்!

படம்
மேக்கிங் இந்தியா ஆசம் சேட்டன் பகத் ரூபா ரூ.160 இந்தியாவில் இல்லாத பிரச்னைகளே இல்லை. சாதி, மதம், இருக்கிறவன், இல்லாதவன், ரூபாய் சரிவு, விலைவாசி உயர்வு, சாலைவசதி, பெண்களின் கல்வியின்மை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமை, ஊர்களுக்கு இடையே தீண்டாமைச்சுவர் என பேசிக்கொண்டே போகலாம். சேட்டன் பகத் இந்த நூலில் எடுத்துக்கொண்டு பேசுவது அனைத்துமே ஆங்கில ஊடகங்களில் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து விவாதிப்பார்களே அந்த ரக மேட்டர்கள்தான். அதனால் மனம் பதறி பிபி எகிறி, வாசிக்க வேண்டியதில்லை. லைட்டாக வாசியுங்கள். அவ்வளவுதான். இதில் எப்போதும்போல அவர் இளைஞர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கும் ஊழல், லஞ்சம், வாக்குரிமை, அரசியல்வாதிகளின் போலி முகமூடித்தனம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இதில் இஸ்லாமியர்கள், மத அடிப்படை வாதம் பற்றி சேட்டன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவை புகழ்பாடும் கட்டுரைகளும் உண்டு. அதில் ஒன்றுதான், மோடி எப்படி தேர்தலில் வென்றார் என்ற கட்டுரை. அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உதவும்படி பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமின்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளார். மொ

"தேசபக்திக்கு அர்த்தம் மனிதர்களை வெறுப்பதல்ல"

படம்
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் கன்னையாகுமார் தமிழில்: வெ.ஜீவானந்தம். என்சிபிஹெச் வெளியீடு விலை ரூ.110 (4வது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA) பீகாரின் மஸ்னத்யூரில் பிறந்த கன்னையாகுமார் பாட்னாவில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து ஜவகர்லால்நேரு  பல்கலையில் மாணவர் தலைவனாக  மாறி அரசின் வெறுப்புக்கு இலக்காகி சிறை சென்று மீளும் கதை.  எளிய கல்விச்செலவுகளை சமாளிக்க முடியாத பீகார் குடும்பத்து சிறுவன், இந்தியாவிலுள்ள பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை எப்படி கவனித்து வளர்கிறான் என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. பள்ளியில் கற்பிக்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளிவந்தவுடன் அதேவிஷயங்களை சுற்றியுள்ள சமூகம் எப்படி உடைக்கிறது என்றும் தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் வழியாக சொல்லும்போது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே ஏற்படுகிறது.  வெ.ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில்  தேர்தல் சமயத்தில் அவர் ஆதரித்த கட்சி குறித்து எழுதும் இடங்களில் சில காப்பி பேஸ்ட் பிழைகள் தவிர்த்திருக்கலாம். மற்றபடி சுயவரலாறு நாவலின் சாகச அனுபவத்தோடு முதல