இடுகைகள்

அணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவீன இந்தியாவின் சிற்பி நேரு! - கடிதங்கள்

படம்
இந்தியாவின் நவீன சிற்பி நேரு  அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? பேஸ்புக்கில் நேரு 171 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பக்ராநங்கல்  அணையைக் கட்டியதைப் பகிர்ந்திருந்தீர்கள். படிக்கவே ஆச்சரியமாக இருந்தது. நவீனத்துவ இந்தியாவின் அடிப்படை தேவையை நேரு அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் முக்கியமான கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகளை கட்டியமைக்க முடிந்தது. நேருவின் சொற்பொழிவுகளை படிக்கும்போது இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளின் மீது எப்படி கவனம் செலுத்தினார் என்பதை உணர முடிகிறது.  நேருவின் போராட்டக்கால சிந்தனைகள் நூலை சென்னையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். பிரச்னையில் தனது பார்வைக் கோணத்தை தவறு என்றால் மாற்றிக்கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மை நேருவுக்கு இருந்தது. இந்த அம்சம் இன்று, ஆட்சித்தலைவர்களுக்கு இல்லை. டொமினிக் ஜீவாவின் அனுபவப் பயணம் என்ற நூலை படித்தேன். மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்த எழுத்தாளரின் சுயசரிதை இது. மதுரை புராஜெக்ட் வலைத்தளத்தில் தரவிறக்கினேன். நூலகம் என்ற வலைத்தளத்தில் சில நூல்களை படிக்க தரவிறக்கியுள்ளேன். படித்துவிட்டு பகிர்வேன்.  நன்

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள