இடுகைகள்

நிகாங்குகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

படம்
  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது.  நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம்.  பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குத