இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

படம்
  ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார்.  ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார்.  பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார்.  திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறார்.  வி

வைரலாகும் வார்த்தை விளையாட்டு !

படம்
  ட்விட்டரில் இப்போது வேர்டில் என்ற வார்த்தை விளையாட்டு பிரபலமாகி பரவி வருகிறது. அந்தந்த பிராந்திய மொழிகளில் இதனை பல்வேறு மென்பொருள் திறமைசாலிகள் மேம்படுத்தி வருகிறார்கள். ஐடியா ஒன்றுதான். அதனை மொழிகளை மாற்றி சில மாறுதல்களை செய்கிறார்கள். குறிப்பிட்ட மொழிகளுக்கு மாற்றும்போது அதற்கான நிறைய சவால்கள் உண்டு.  வேர்டில் என்ற விளையாட்டி ஒரு நாளுக்கு ஒருமுறை தான் விளையாட முடியும். மேலும் இதில் சரியான வார்த்தைகளை நிரப்புவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். புதிய சொற்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சுவாரசியமான சவால்.  லியூடில் இது முழுக்க காதல் போதை நிரம்பியவர்களுக்கானது.நான்கு எழுத்து வார்த்தைகளை கண்டுபிடிக்கவேண்டும் வயது வந்தவர்களுக்கானது என்பதால் அதற்கேற்ப யோசியுங்கள். வேர்டில் விளையாட்டு போலத்தான். ஆனால் இதில் காம மோகமாக யோசித்தாலும் பிழையில்லை.  அப்சுர்டில் இதுவும் வேர்டில் போலத்தான். இதில் நீங்கள் நிரப்பும் வார்த்தைகள் பற்றி அதிக தகவல்களை தருவதில்லை. எனவே நீங்கள்தான் வார்த்தைகளை சரியாக நிரப்ப வேண்டும். விளையாட்டின் நடுவிலும் கூட யோசித்து குறிப்பிட்ட வார்த்தையை கண்டுபிடித்து

155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!

படம்
சூயஸ் கால்வாய்  சூயஸ் கால்வாய் உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.  ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது.  மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது. 1859 - 1869  என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.  இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ஆகும் தோராய நேரம் 15 மணி

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா

விவசாய கருவிகளை புதுமையாக வடிவமைத்த டெக் விவசாயி! - செல்வராஜ்

படம்
  கண்டுபிடிப்புகள் என்பது அந்நியச் சொல் அல்ல! கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, எம் செல்வராஜ். இரண்டே முக்கால் நிலத்தை வைத்து விவசாயம் செய்கிறார். விவசாயம் செய்வதோடு, அதனை எளிமையாக செய்வதற்கான பல்வேறு கருவிகளை, சாதனங்களை கண்டுபிடித்து வருகிறார். 58 வயதான செல்வராஜ் அதனால்தான் இப்பகுதியில் சாதனையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது சேசுராஜபுரம். இங்குதான், இவரது விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் நிலக்கடலை, தக்காளி, சிறு தானியங்களை விளைவித்து வருகிறார்.  இளைஞராக இருக்கும்போதிலிருந்து விவசாய பணிகளை செய்துவருகிறார். அப்போதிலிருந்து பல்வேறு சோதனை முயற்சிகளை நிலத்தில் செய்து பார்த்து வந்தார். சோதனை மற்றும் தவறுகள் என ஏற்க பழகியவர், வீட்டிலுள்ள பல்வேறு இரும்பு பொருட்களை வைத்து விவசாய பொருட்களை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சைக்கிள் டயர்கள், மரத்துண்டுகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து 500 ரூபாயில் கருவி ஒன்றை உருவாக்கினார். விதைப்பது, களை பறிப்பது ஆகியவற்றை இப்படி கருவிகளை வைத்தே செய்கிறார்.  விதைகளை விதைப்பதற்கு முன்னர் மட்டும் ரோட

அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

படம்
  காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்! மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார்.  மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை.

காந்திய அணுகுமுறையில் சமூகத்தை மாற்றியமைத்த மூன்று அமைப்புகள்! - தன்னார்வ செயல்பாடும், காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா

படம்
தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புது டில்லி ரூ.22 பக்கம் 89 இன்று காந்திய அணுகுமுறை என்பது குறைந்துவிட்டது. காந்தி என்றாலே கோழைத்தனமானவர், தந்திரமானவர் என்று எண்ணும்படி செய்திகளை மதவாத கூட்டம் வெளியிடுகிறது. எளிமையாகவும், உண்மையாகவும் இருப்பது தவறு என எண்ணும் சமூக கலாசாரம் வளர்ந்த பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம்.  அண்மையில் நடந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் காந்திய வழிமுறையைப் பின்பற்றி நடந்து வெற்றிபெற்றது. ஆங்கில ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என பாகுபாடின்றி விவசாயிகளை வசைபாடினர். இதற்கு அவர்கள் தங்கள் மனசாட்சியை விற்று பெற்ற பணம்தான் காரணம். யார் கொடுத்தார்கள் என்று கேட்காதீர்கள். ஊபா சட்டம் உடனே பாயும். தேச வளர்ச்சிக்காக என்று சொல்லி சுயநலத்திற்காக இந்தியாவை விற்க  பாடுபடுபவர்கள்தான் இதற்கு காரணம்.  இந்த காலகட்டத்தில்தான் டி.கே. ஓசா எழுதிய   இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தொண்ணூறுகளில் வெளியான நூல் இது. அப்போதே மறுசுழற்சிக்கான காகிதத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். நூலில் பேசப்படும் விஷயமும் அந்தள

பார்வையற்றவர்களுக்கு கௌரவமான வாழ்க்கைதான் முக்கியம்! - முன்னாள் பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர் மகன்டேஷ்

படம்
  பார்வை இல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஆசை இருந்தால் என்ன செய்வது?  கர்நாடகத்தின் பெல்காமில் கிராமத்தில் பிறந்த மகன்டேஷ் ஜி கிவாடாசன்னாவர், நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பிறந்து ஆறு மாதம் ஆனபோது, டைபாய்டு காய்ச்சல் வந்தது. அப்போது கண்பார்வை போய்விட்டது. அதற்கும் மேல் கிராமத்தில் இருந்தால் மருத்துவ வசதி போதாது. கல்வியும் வேறு பயிற்சிகளும் வழங்க முடியாது என மகன்டேஷை பெங்களூரு நகருக்கு அழைத்து வந்தனர் அவரது பெற்றோர்.  உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கௌன்சிலின் தலைவராக 2011ஆம் ஆண்டு மகன்டேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். மாற்றுத் திறனாளிகளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத்தருவதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் மகன்டேஷ்.  2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் 70 மில்லியன் பேர் இப்படி மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பதே மகன்டேஷின் முக்கியமான பணி.  பள்ளியில் படிக்

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பது

ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

படம்
  1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை.  மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.   மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர

பத்து வளையங்களின் சக்தி கொண்ட அப்பாவை எதிர்க்கும் மகன்! சாங் சி- மார்வெல்

படம்
  சாங் சி மார்வெல் அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்து வரும் வேலையை நாயகனும் நாயகியும் செய்து வருகிறார்கள். இதில் நாயகனுக்கு கடந்த காலம் ஒன்றுண்டு. அதனை அவன் தனது தோழி பிளஸ் காதலியிடமும் சொல்லவில்லை. பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது நடைபெறும் மோதல், அவனை யாரென்று காதலிக்கு புரிய வைக்கிறது. நாயகனின் கழுத்தில் உள்ள டாலரை மட்டும் அந்த கும்பல் பிடிங்கிக்கொண்டு செல்கிறது. அதனைத் திரும்ப பெறுவதோடு, தனது தங்கையையும் காப்பாற்ற சாங் சி சீனா செல்கிறான். அங்கு என்ன நடந்தது? தங்கையின் உயிருக்கு வந்த ஆபத்தை தவிர்க்க முடிந்ததா? கொள்ளையடித்த கும்பலின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.  ஆசிய கலாசாரம், குடும்ப உறவு என ஹாலிவுட் திரும்பிவிட்டது படத்தில் தெரிகிறது. படம் நெடுக குடும்ப உறவுகள், கலாசாரம், தனது வேர் என்ன என்பதை நோக்கியே படம் செல்லுகிறது.  சாங் சியின் அப்பா, சாங் சியின் காதலியிடம் அவளது குடும்பம் மற்றும் சீனப் பெயரைக் கேட்கும் காட்சி இதற்கு உதாரணம். பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் கதைக்கான முக்கியமான திருப்புமுனை.

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே

எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் 2 தேவன் அல்லயன்ஸ்  மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம்.  முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.  தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.  தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால்,  சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான

முதியவர்களைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனை தொடங்கிய மருத்துவர்! - மருத்துவர் மகாலஷ்மி

படம்
மருத்துவர் மகாலஷ்மி  மகாலஷ்மிக்கு அப்போது 30 வயது. அந்த நேரத்தில்தான் தனது பெற்றோரை இழந்தார். அவர்களது இறப்பிற்கு பிறகு, சிறிது காலத்தில் அவரது மாமனார், மாமியார் ஆகியோரையும் இழந்தார். இதெல்லாம் அவரை அடுத்து செய்யவிருந்த மருத்துவமனை பணிகளைத் தடுக்கவில்லை.  அதுவரை சம்பாதித்த பணத்தையும், வங்கி கடன்களையும் இணைத்து பாலாஜி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். இதுகூட வயதானவர்களை வேலை காரணமாக சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை. வயதான காலத்தில் நோயும் சேர்ந்துகொள்ள அவர்களை பார்த்துக்கொள்ள மருத்துவமனை உதவியாக இருக்கும் என்றே மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.  மருத்துவர் மகாலஷ்மி, பாலாஜி ஹெல்த்கேர் நாம் எல்லோரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலைக்கு போகிறோம், திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுகிறோம். நான் இதைத் தாண்டி ஏதேனும் ஒன்றை செய்ய நினைத்தேன் என தனது செயல்பாட்டை விளக்குகிறார் மகாலஷ்மி. 2011 ஆம் ஆண்டு மும்பைக்கு வெளியே பாட்ஷா ஆற்றுப் புறத்தில் தொடங்கிய மருத்துவமனையில் முதலில் நான்கு பேர் நோயாளிகளாக இருந்தனர். இப்போது 74 பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷிசோபெரேனியா, டிமென்

அசாதாரண இந்தியர்கள்! - முதியோர்களைக் காப்பாற்ற முன்வந்த முன்னாள் குற்றவாளி ஆட்டோ ராஜா

படம்
  தாமஸ் ராஜா - நியூ ஆர்க் மிஷன் இந்தியா தாமஸ் எனும் ஆட்டோ ராஜாவுக்கு இப்போது வயது 54 ஆகிறது. அவருக்கு வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி எதையும் நினைவுகூர நேரம் இல்லை. தெருவில் ஆதரவில்லாமல் கிடப்பவர்கள் தூக்கிக்கொண்டு போய் தனது ஆர்க் மிஷன் இல்லத்தில் சேர்த்து பாதுகாப்பதைத்தான் செய்து வருகிறார்.  பள்ளியில் படிக்கும்போது பிற மாணவர்களை கடுமையாக கேலி, கிண்டல் செய்து வந்தார். மாணவர்களின் பணத்தைக் கூட அடித்துப் பிடிங்கிக்கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் என்ன செய்தார்கள் என்று இங்கு கேள்வி வருகிறதல்லவா? அவர்களிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை என்பதுதான் தாமஸை இப்படி செயல்பட வைத்திருக்கிறது. இதன் போக்கிலேயே தான் ஒருநாள் பெங்களூருவில் பெரிய டான் ஆகவேண்டும் என லட்சியத்தை வளர்த்துக்கொண்டார்.  இந்த லட்சியத்தை நோக்கி கர்ம சிரத்தையாக தினந்தோறும் முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது, பீதியானவர்கள் பள்ளி நிர்வாகம்தான். உடனே தாமஸை பள்ளியிலிருந்து நீக்கினர். பிறகு பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். தாமஸின் வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் பலரையும் அடித்து வெளுத்திருந்ததால் அவர் மீது சொன்ன குற்

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ

தனித்தமிழை வளர்க்க தன்னை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்! - மறைமலையடிகள் கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் படம் - புதிய தலைமுறை மறைமலையடிகளின் கடிதங்கள் தமிழ் மின்னணு நூலகம் மறைமலையடிகள், தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தனித்தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்.  அவர் இந்த நூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் அவரே முந்தைய பக்கங்களில் குறிப்பொன்றை குறிப்பிடுகிறார். அஞ்சலட்டையில் ஆங்கிலத்திலும், இன்லேண்ட் தாளில் தமிழிலும் எழுதுவேன் என்று. எதற்காக இந்த விதி என்று புரியவில்லை.  அவரது காலத்தில் அவருக்கான சில நெறிமுறைகளோடு வாழ்ந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  1920 தொடங்கி 1950 ஆம் ஆண்டு வரையில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை முறையாக ஆண்டு கணக்கில் தொகுக்கப்படவில்லை. எனவே நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என்பதால் வாசகர்களே மனதில் தொகுத்துப் பார்த்து புரிந்துகொண்டு சிவனை  மனதில் நினைத்து வாசிக்க வேண்டியதுதான்.  கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்படுபவைதான். அதனை நூலாக தொகுக்கும்போது குறிப்பிட்ட நபரின் பெயரைக்கூட எடுத்துவிட்டால் அதனை வாசிப்பவர்கள் எப்படி பொருந்திப் பார்ப்பார்கள் என்று புரியவில்லை. இந்த

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று