மொழிச்சோதனைகளை தொடர்ச்சியாக செய்த நாவலாசிரியர்! - ஜேம்ஸ் ஜாய்ஸ்

 







இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். 1941ஆம் ஆண்டு குடல் புண் காரணமாக மறைந்தார்.  ஐரிஷ் நாட்டு நாவல் ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ், நாவலை வழக்கமான முறையில் அல்லாமல் பல்வேறு பரிசோதனை பயன்படுத்தி எழுதுவதற்கு பிரபலமானவர். 

இவரின் மிகச்சிறந்த படைப்பு உலிசஸ். படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படியான அங்கத நடை கொண்ட படைப்பு இது. ஒருநாளில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதை. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. 1914ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் என்ற தலைப்பில்  சிறுகதைகளை எழுதினார். 

1916ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நாவல் உள்ளது. அதன் பெயர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஏஸ் எ யங் மேன். ஜாய்ஸ் எழுதிய கடைசி நாவல்,  ஃபின்னகென்ஸ் வேக். 1939ஆம் ஆண்டு வெளியான இந்த நூலும் கூட மொழிச்சோதனைகள் நிறைய கொண்டதுதான். எழுதியவருக்கு அல்லது படிப்பவருக்கா யாருக்கு அதிக சோதனைகள் இருக்கும் என்று கேட்க கூடாது. 

இப்படி எழுதியவருக்கு தொடக்க கல்வி என்பது சிறப்பாக அமையவில்லை. பொருளாதார பிரச்னைகளால் பத்து வயதில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. கல்லூரிக்கு செல்வதைக் கூட ஓராண்டு ஒத்திவைத்தார். அதற்கு காரணமும் காசுதான். பாதிரியார் ஒருவர் இவருக்கு பணம் கட்டியபிறகே படித்தார். தாமதமாக தொடங்கி படித்தாலும் கூட படிப்பில் கெட்டிதான். ஆங்கிலத்தில் எழுதுவதும் யாரும் அடிச்சிக்கவே முடியாது என்றபடி படித்தார். 1898ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இவர் பிறந்த ஆண்டு 1882 பிப்ரவரி 2. எனவே வாய்ப்பு கிடைத்தால் இவரது படைப்புகளை வாசியுங்கள். 

டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்