வலியைத் தாங்குவதில் யார் பெஸ்ட் - ஆணா, பெண்ணா? உண்மையா? உடான்ஸா?
கீமோதெரபி தலையில் வளரும் முடியில் மாற்றம் ஏற்படுத்துகிறது! உண்மை. புற்றுநோயாளிகளுக்கு நோய் பாதிப்பைக் குறைக்க கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் முடிகொட்டும். இதை தவிர்க்க நோயாளிகளுக்கு முடியை மொட்டையடித்துவிடுகிறார்கள். இதற்குப் பிறகு முளைக்கும் முடியின் நிறமும், அதன் வடிவமும் சற்றே மாறியிருக்கும். தலைமுடியின் உரோமக்கால்கள் கீமோதெரபியால் மாற்றம் பெறும். இதன் விளைவாகவே முடியின் வடிவம், நிறம் மாறுகிறது. ஆனால் இது நிரந்தரமான மாற்றம் அல்ல. ஓராண்டிற்குள் முடியின் வடிவமும் நிறமும் இயல்பானபடி மாறிவிடும். ஆண்களை விட பெண்களால் அதிகளவு வலியைத் தாங்கமுடியும்! உண்மை. குழந்தையை பிரசவிக்கும் பெண்களைப் பார்த்து இதனை எளிதாக யூகித்துவிடலாம். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் காலத்தில் பெண்களின் உடலில் வலியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவு முக்கியக் காரணம். பொதுவாக வலியைத் தாங்கும் திறன் பற்றி ஆராய்ந்தால், அதற்கு ஒருவரின் வயது, சாப்பிடும் உணவு, செய்யும் வேலை ஆகியவற்றைப் பற்றியும் கவனம்