இடுகைகள்

பீட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

படம்
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் . அழகிரி ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே ? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது ..? ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014 இல்தான் . உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது . பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது . அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது . ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே ? இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன . 1960 இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை . ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை . கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை . இதற்கு காரணம் திமுக , மாநில அரசிடமிருந்து வந்த அழுத்தங்கள்த