இடுகைகள்

கழிவுநீர் சுத்திகரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா

படம்
IndiaSpend கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் ! சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது.  பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குடிநீர் கிடைக்குமா? இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல