இடுகைகள்

வின்சென்ட் காபோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவதாரம் - ஆளுமை பிறழ்வு ஓர் அறிமுகம் - புதிய மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ்

படம்
  இந்த நூலுக்கு முன்னதாக உடல் மனம் உள்ளே என்ற உளவியல் தொடர்பான நூலை ஆராபிரஸ் - கோமாளிமேடை வெளியிட்டுள்ளது. அந்த நூல் ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்தில் உள்ளது. அதில் உளவியல் குறைபாடு, அதன் அறிகுறி, அதற்கான சிகிச்சைகள் ஆகியவை குறிப்பிட்டப்பட்டுள்ளன. அந்த நூலை தரவிறக்கி படித்துவிட்டால் அவதாரம் என்ற சிறுநூலை படிக்க ஏதுவாக இருக்கும். இதில் ஆளுமை பிறழ்வுகள் அதை நோக்கி ஒருவரை செலுத்தும் காரணங்கள் ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. உளவியல் தன்மையில் அளிக்கும் சிகிச்சைகள் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தளவு மனிதர்களுக்குள் கசப்பும், அழுத்தமும் பெருகியுள்ளன. அதனை எப்படி சீர் செய்வது அடையாளங்களை கண்டறிவது என்பதோடு இதுதொடர்பான ஆராய்ச்சிகளையும் நாம் அவதாரம் நூலில் வாசித்து அறியலாம்.  இந்த மின்னூலை இன்னும் சில நாட்களில் நீங்கள் கூகுள் பிளே புக்ஸில் வாசிக்கலாம்....

அசுரகுலம் 2 - குற்றங்களின் முன்கதை - சீரியல் கொலைகாரர்களின் நதிமூலத்தை ஆராயும் நூல்!

படம்
        அசுரகுலம் முதல் பாகத்தில் குற்றவாளிகளைப் பற்றிய கதைகளைக் கூறியது. இரண்டாவது பாகமான குற்றங்களின் முன்கதையில் குற்றங்களை செய்தவர்களின் உளவியல் சிக்கல்கள், கொலை செய்த முறை, அவர்கள் பெற்ற தண்டனை, குற்றங்களைப் பற்றிய மக்களின் மனநிலை, இதனை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கிறது.  உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் பார்க்க பழகுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த நூல் உளவியல் சார்ந்த அறிகுறிகளை விளக்கி அதனை கவனமாக பார்க்கவேண்டும் வலியுறுத்துகிறது. உளவியல் குறைபாடுகளை சாதாரணமாக பார்க்க கூடாது என்பதை இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அசுரகுலம் நூலைப் படிக்காதவர்களும் இந்த நூலை வாசிக்கலாம். குற்றங்களைப் பற்றிய ஆவணப்படுத்துதல் மேற்குலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழில் இதுபோன்ற நூல்கள் குற்றங்களை குறைப்பதில் உதவும். அறிவியல் முறையில் குற்றங்களை எப்படி காவல்துறையினர் அணுகி சீரியல் கொலைகார ர்களை பிடிக்கிறார்கள் என்பதையும் நூல் பேசுகிறது. அமேசானில் வாசிக்க.... https://www.amazon.in/dp

புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்? புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா?

படம்
          பதில் சொல்லுங்க ப்ரோ வின்சென்ட் காபோ புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்? ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான தகுதிகளை வைத்து அதன் பாதை, பலம், சேதம் ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை யூகிக்கிறார்கள். அமெரிக்கா இதனை 1953 தொடங்கி அட்டவணைப்படுத்தி பெயர் வைத்து மக்களை எச்சரித்து வருகிறார்கள். உலக தட்பவெப்பநிலை அமைப்பு புயல்களுக்கான பெயர்களை வைக்கிறது. புயல்களுக்கான பெயர்ப்பட்டியல் மொத்தம் ஆறு உள்ளது. இதில் க்யூ, யூ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகள் மட்டும் இடம்பெறாது. மற்றபடி ஏ முதல் டபிள்யூ வரையிலான எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படையான நோக்கம் எளிதாக புயலில் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதுதான். இல்லையெனில் புயல் எச்சரிக்கையை அரசு மக்களுக்கு கூறுவது கடினமாகிவிடுமே. ஒரு பருவகாலத்தில் அதிகளவு புயல்கள் வந்தால் கிரேக்க எழுத்துகளிலிருந்து புயலுக்கான பெயர்களை எடுக்கிறார்கள். புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா? முதல் பிரிவு 119 153 மணிக்கு கி.மீ வேகம் வரை இது மிகவும் வேகம் குறைந்த புயல் பிரிவு, செல்போன் கோபுரங்கள் சாய்வது, கட்டிடங்கள் இடிவது ஆகியவை நடக்கும். மின்சார கம்பங்களை சரித்துவிடு

பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா?

படம்
pixabay  பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ பறவைகள் பொதுவாக குரல் கொடுப்பது இணையைக் கவர்வதற்கும், தனது பகுதியை கூறுவதற்கும்தான். பறவைகளுக்கு குரல் கொடுப்பதற்கென உள்ள உறுப்பின் பெயர் சைரின்க்ஸ். இது மனிதர்களின் குரல் அமைப்பான லாரினக்ஸ் என்பது போலத்தான். நுரையீரலிருந்து கிளம்பும் காற்று தசை, மற்றும் சைரின்க்ஸ் இழைகளின் வழியாக வெளிப்படுகிறது. சில பறவைகள் பறக்கும்போது கூட பாடுவது உண்டு. ஆனால் அப்படி செயல்படும் பறவைகளின் எண்ணிக்கை மிக குறைவு. ஸ்டார்லிங் எனும் பறவை தான் கேட்கும் ஒலியை அப்படியே நகல் செய்து ஒலிக்கும். உதாரணமாக காரின் ஹார்ன் ஒலி போலீஸ் வாகன சைரன் ஒலி, டெலிபோன் ரிங்டோன். அவை பாடும் இசையும் பிரமாதமாக இருக்கும். பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா? முதலில் அப்படி நினைத்து வந்தனர். ஆனால் இப்போது அறிவியல் வளர்ந்துவிட்டது. எனவே, ஆராய்ச்சி மூலம் பூனைகள் சில குறிப்பிட்ட நிறங்களை பார்க்கமுடியும் என்பதை உறுதிசெய்துள்ளனர். சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களை அவை அடையாளம் கண்டு கொள்கின்றன. மனிதர்களைப் போல பூனைகளுக்கு நிறம் அவ்வளவு துல்லியமாக தெரியாது. அப்ப

வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா?

படம்
      pxhere         பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா? மூன்றில் இருபங்கு பேர் புரிந்துகொள்வதாக கூறுகிறார்கள். இதனை தங்கள் பிள்ளைகளை புரிந்துகொள்வதாக கூறும் பெற்றோர்கள் அளவுடன் ஒப்பிட்டு சிலர் கிண்டல் செய்கின்றனர். நாய்கள் இயல்பாகவே பூனைகளை விட எஜமானவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்கின்றன. மேலும் அவை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விட உடல்மொழியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடந்துகொள்வதே அதிகம். அவற்றின் குரைப்பு, உடல்மொழி ஆகியவற்றை வைத்தும் அது என்ன சொல்லுகிறது என எஜமானர்கள் கூறுகிறார்கள். இந்த வகையில் பூனையின் உடல்மொழியை 50 சதவீதம் புரிந்துகொள்வதாக அதன் உரிமையாளர்கள் கூறுகி்ன்றனர். வளர்ப்பு பிராணிகள் பேசமுடியாது என்றாலும் குரல் மூலம் அவை தகவல்தொடர்பு கொள்கின்றன.   பாக்டீரியா எங்கெங்கு இருக்கும்?   பாக்டீரியா இல்லாத இடமே கிடையாது. காற்று, நீர், உணவு, நமது தோல், குடல் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதிக திறன் கொண்ட மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் கிடையாது. சூழலும் உண

எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
            எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்? ஒரு ஜூல் என்பது ஆற்றலின் ஒரு யூனிட் அளவு. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரஸ்காட் ஜூல் என்பவர் இதனை கண்டுபிடித்தார். நீரை வெப்பப்படுத்த தேவையான ஆற்றல் அளவை ஜூல் என கணக்கிடுகிறார்கள். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அளவு ஒரு ஜூல் எனலாம். மின்சார அளவில் ஒரு நொடியில் செலவாகும் ஒருவாட். ஆப்பிளை ஒரு மீட்டருக்கு உயர்த்தும் அளவு ஆற்றல், என  குறிப்பிடலாம். பத்து ஜூல் அளவு ஆற்றல்  ஒருமனிதரைக் கொல்ல போதுமானது என்று கூறுகிறார்கள். விமானநிலையம், பள்ளிகளில் இதயம் திடீரென நின்றுபோனால் அதனை துடிக்க வைக்க ஏஇடி எனும் கருவியைப் பயன்படுத்துவார்கள். இதில் 360 முதல் 400 ஜூல் மின்சாரம் உருவாகிறது. இவை முதலில் பயன்படுத்தியபோது நிறைய நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இதன் அளவு 120 ஜூல்களாக குறைக்கப்பட்டது.   image -pxhere

மேஜிக் கலைஞர்கள் பெண்களை இரு துண்டுகளாக வெட்டுவது எப்படி? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
       மேஜிக் கலைஞர்கள் எப்படி பெண்களை இரு துண்டுகளாக வெட்டியிருப்பதைப் போல காட்டுகிறார்கள்? மேஜிக் கலைஞர்களின் தந்திரங்களில் உங்களுக்குஆர்வமிருந்தால் நீங்கள் கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் என்ற ஆங்கிலப்படத்தைப் பார்க்கலாம். இதில் மாயாஜால கலைஞர்களின் தந்திரங்கள் சிலவற்றை உடைத்திருப்பார்கள். நீங்கள் கூறும் பெண்களை இரு துண்டாக காட்டும் ட்ரிக் உருவானது லண்டனில் 1920ஆம் ஆண்டு. ஹாரி பிளாக்ஸ்டோன், டக் ஹென்னிங், டேவிட் காப்பர்பீல்டு ஆகியோர் வெற்றிகரமாக உருவாக்கி சாதித்தனர். இதில் நிறைய வகைகள் உண்டு. நீங்கள் பார்ப்பது ஒரு மாயத்தோற்றத்தைத்தான். இக்கலைஞர்கள் பேசிக்கொண்டே மக்களின் கவனத்தை திசைதிருப்பியபடி வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் சாதாரணமானவை அல்ல. அவையும் பல்வேறு ட்ரிக்குகளுக்கு பயன்படும் விசேஷ வடிவமைப்பில் அமைந்தவை. பெண்கள் படுக்க வைக்கப்படும் பெட்டி சற்று அகலமானது. இரண்டாக வெட்டப்படும் பகுதியில் ஒருபகுதியில் பெண்கள் இருப்பார்கள். மறுபகுதி என்பது போலியான கால்கள் இருக்கும். எளிதாக பிரிக்கவும், இணைக்கவும் முடியும் பெட்டியாக இன்று உருவாகியுள்ளது. இதனை நவீன கலைஞர்கள்

மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
    பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது? மூளைச்சலவை என்பதை கருத்துகளை சீர்திருத்துவது, கருத்துக்களை கட்டுப்படுத்துவது என்று கூறலாம். காஷ்மீரிலுள்ள இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு பிடித்து அவர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டும் கருத்துகளை மனதில் திணித்து தீவிரவாதிகளாக மாற்றுகிறது. இதுபற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள். தன்னுடைய கருத்துக்கு எதிராக உள்ளவரை தன்னை நோக்கி, கருத்துகளை நோக்கி இசைவாக திருப்புவதுதான் மூளைச்சலவை. கூறப்படும் கருத்துகளைப் பொறுத்து விளைவுகள் நல்லதாக, அல்லதாக அமையும். கொரிய நாடுகளுக்கு இடையே போர் நடந்தபோது, பல நூறு அமெரிக்க வீரர்கள் இடதுசாரி கொரிய நாட்டு ராணுத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடதுசாரி சிந்தனைகளால் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் திரும்ப அமெரிக்காவுக்கு திரும்ப வரவில்லை என்று கூறிவிட்டனர். பேட்டி ஹியரஸ்ட் என்ற பதிப்புத்துறை சார்ந்த பெண்மணி 1974ஆம் ஆண்டு இடதுசாரி விடுதலைப்படையால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பின்னாளில் பேட்டி இடதுசாரி ராணுவத்துடன் இணைந்து வங்கியை கொள்ள

டார்க் எனர்ஜி என்றால் என்ன?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ டார்க் எனர்ஜி என்றால் என்ன? இதற்கு தீர்மானமான பதிலை யாருமே சொல்லமுடியாது என்பதே உண்மை. டார்க் எனர்ஜி என்பதை பால்வெளி விரிவடைகிற தன்மை அதிகரிக்கிற அம்சம் என்று சுருக்கமாக சொல்லலாம். சார்பியல் கோட்பாட்டு மாடல்கள் இதனை பல்வேறு விதமாக வரையறுக்கின்றன. காலியான வெற்றிடம், இதுவரை அறியப்படாத புதிய சக்தி, விண்வெளியிலுள்ள இடத்தை பிடித்துக்கொள்ளும் எதிர்மறை விளைவுகளை உள்ளடக்கிய ஆற்றல் என்று பலவாறாக குறிப்பிடுகிறார்கள். இறுதியான ஐன்ஸ்டீனின் புவிஈர்ப்பு சக்தி தவறு என்று கூறப்பட்டு புதிய கோட்பாடு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டார்க் எனர்ஜியை யார் விளக்கி மர்மத்தை தீர்த்தாலும் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம் உண்டு. பால்வெளி என்பது ஒன்று மறைந்ததும் மற்றொன்று தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதா? விண்வெளியில் நிறைய பால்வெளி மண்டலங்கள் உள்ளதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட சீரான கால இடைவெளியில் பெருவெடிப்பு நிகழ்வதாகவும் கூறுகிறார்கள். பால்வெளி மண்டலம் மெல்ல சுருங்கி வெடித்து மீண்டும் தொடங்கும் பிக் பவுன்ஸ், பால்வெளி விரிவடையும் செயல்பாடு தலைகீழாகி பு

போதைப்பொருட்களை மருத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        நியூரோமாடுலேஷன் என்றால் என்ன ? நியூரோமாடுலேஷன் என்பதில் நிறைய பிரிவுகள் உண்டு . புரியும்படி சொன்னால் , தேவையான நினைவுகளை வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை மூளையில் இருந்து அகற்றுவது என கூறலாம் . எம்ஐபி படத்தில் மக்களின் நினைவிலிருந்து நினைவுகளை வில் ஸ்மித் சிம்பிளாக ஒரே ஃபிளாஷில் நீக்குவாரில்லையா ? அதேதான் . டிரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் எனும் முறையில் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி , மூளையில் நடைபெறும் நியூரான் தகவல்தொடர்பை மாற்றி நினைவுகளை அழிப்பதுதான் இதன் நுட்பம் . பொதுவாக இதன்மூலம் நினைவுகளை அழிப்பது மட்டுமன்றி , மூளையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை கட்டுக்குள் கொண்டுவரலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன . மேலும் , மூளைக்கு அதிக திறனில்லாத மின்சாரத்தை பயன்படுத்தி , செல்களை ஊக்கப்படுத்தும் ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன . இதனால் எதிர்காலத்தில் கிரியேட்டிவிட்டி இப்படியும் தூண்டிவிடப்படலாம் . மருத்துவத்திற்கு பயன்படும் போதைப்பொருட்கள் உள்ளனவா ? சட்டவிரோதமாக விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் மருத்துவத்தில்பயன்படுத்தப்படுபவைதான் . அதில் சிலவற்ற

நினைவுத்திறனை கூட்ட என்ன செய்யலாம்? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        memory       பதில் சொல்லுங்க ப்ரோ வின்சென்ட் காபோ விலங்குகளுக்கு மதம் உண்டா ? எந்த நாயும் இறைவனைத் தொழுவதில்லை . பிரார்தனை செய்வதில்லை . அதற்கு பதிலாக அவை மனிதர்களைத் தான் பார்க்கி்ன்றன . அன்பைக் கொடுத்தே அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றன . இறந்த யானைகளுக்கு யானைகள் மரியாதை செலுத்துவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் . தங்களுக்கு பிடித்தமாதிரி விஷயங்கள் நடக்கும்போது சிம்பன்சிகள் கூட மகிழ்ச்சி கூத்தாடுவது நடந்திருக்கிறது . ஆனால் அதனை சமயரீதியான சடங்கு என்று கூறமுடியாது . குழுவாக வாழும் அறிவில் சற்று கூடுதல் சமாச்சாரங்கள் கொண்டவை சில குறிப்பிட்ட செயல்களை தொடர்ச்சியாக மரபுரீதியாக செய்கின்றன . நினைவுத்திறனைக் கூட்ட என்ன செய்யலாம் ? வைட்டமின் பி சத்துகளை நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணலாம் . தானியங்கள் , விதைகள் , பீன்ஸ் ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் , உங்களுக்கு உள்ள நினைவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை பாதியாக குறைக்கலாம் . தகவல்களை வாக்கியங்களாக கொண்டு பேசிப்பழகலாம் . கிட்டப்பார்வை , தூரப்பார்வைக்கு என்ன வகை கண்ணாடி என்பதை கிட்ட குழி தோண்டி தூர

பாம்புகளால் இரையை மென்று தின்ன முடியாது? ஏன் தெரியுமா?

படம்
        பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ பாம்புகள் தாம் பிடிக்கும் இரையின் சுவை உணரமுடியுமா ? நிச்சயமாக . அவற்றின் வாசனை அறியும் திறன் அதிகம் . தனது நாக்கின் மூலம் பல்வேறு வாசனைகளை அறிந்துதான் இரையை வேட்டையாடுகிறது . நாக்கு மேலண்ணம் மூலம் கசப்பான சுவைகளை எளிதாக அறிய முடியும் . இந்த தன்மை கூட அவை நச்சு நிரம்பிய உயிரினங்களை வேட்டையாடி உண்டுவிடக்கூடாது என்பதற்காக இயற்கை தந்த கொடை . மற்றபடி அதன் முக்கியமான பலம் , வாசனையை அறிந்து இரையை வேட்டையாடுவது , தனக்கான இணையை அறிவது ஆகியவைதான் . பாம்புகள் சாப்பிடும்போது எப்படி சுவாசிக்கின்றன ? பாம்புகள் உணவை மென்று சாப்பிடுவதில்லை . அப்படியே விழுங்கிவிடுகின்றன . இச்சூழ்நிலையில் அவை மூக்கு , அல்லது வாய் மூலம் சுவாசிக்கின்றன . இரையை முழுமையாக விழு்ங்குவது என்பது நெடுநேரம் நடக்கும் செயல்முறை . வாய்க்கும் நாக்குக்கும் இடையில் உள்ள கிளாட்டிஸ் என்ற அமைப்பு வாய் மூலம் சுவாசிக்கி நகர்ந்து கொடுக்கிறது . பாம்புகளால் கடிக்க முடிந்தால் ஏன் இரையை மென்று தின்ன முடியாதுழ அதன் வாய் அமைப்பு அப்படி அமைந்துள்ளது . முன்புறம்

தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

படம்
            நம் உணர்வுகளில் முதலில் உருவானது எது? சுவையுணர்வு அடிப்படையானது. அதுவே முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். இதில் முடிவான தீர்வு என்பதை கூற முடியாது. காதுகளில் ஒலியைக் கேட்பது பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை. 275 மில்லியன் ஆண்டுகளாக அத்தன்மை அப்படியேதான் உள்ளது. 2015ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லங்ஃபிஷ் சிறப்பாக காது கேட்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர். 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மீன்கள், தங்கள் துடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் நடந்து சென்று வெவ்வேறு நீர்நிலைகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறன்கொண்டவை என இந்த மீன்களைக் குறிப்பிடுகின்றனர். தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்? மனிதர்கள் இயல்பாகவே புத்துணர்ச்சியாக காற்று, உடற்பயிற்சி, சூரிய வெளிச்சம் ஆகியவற்றை தவிர்க்க முடியாத தன்மை கொண்டவர்கள். சூழல் நெருக்கடியால் அப்படி நேரும்போது அதனை மனதளவில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த மன நெருக்கடியை பதற்றம் எனலாம். இதனை சமாளிக்க சூழலை மெல்ல பழ

சவுண்ட் பாரில் 3டி சவுண்ட் எப்படி உருவாகிறது?

படம்
      பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ ஆம்பிளிஃபையர் எப்படி வேலை செய்கிறது? லேப்டாப் அல்லது நேரடியான மைக்ரோபோன் ஆகியவற்றிலிருந்து ஒலியைப் பெற்று அதனை பெரிதாக்கி நகல் போல எடுத்து ஸ்பீக்கர்களுக்கு அனுப்புகிறது. ஒலியின் அளவு என்பது கிடைக்கும் அசல் ஒலியைப் பொறுத்து மாறுபாடுகள் ஏற்படும். ஆனால் மின்சாரத்தின் சக்தியைப் பெற்று ஒலியின் அளவை பெரிதாக்கும் பணியை செய்கிறது. இப்படி மாற்றப்படும் ஒலி ஸ்பீக்கரில் சரியாக கேட்கவும் மின்சாரம் அதற்கு செல்லும் அளவு முக்கியமானது. ப்ளூடூத், குரோம்காஸ்ட், ஏர்பிளே, எது பெஸ்ட்? ப்ளூடூத்தை நீங்கள் வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் இணைத்து பாடல்களை எளிதாக கேட்கலாம். ஆனால் குரோம்காஸ்ட் ஆப்பிள் ஏர்பிளே என்பது இயங்குவதற்கு வைஃப் இணைப்பு அவசியம். இதன்மூலமும் நீங்கள் பாடல்களை கேட்கலாம். இடைமுகமாக வைஃபை இருக்கும். தரமான இசையைக் கேட்க ப்ளூடுத் முறை சரிபட்டு வராது. இதற்கு நீங்கள் குரோம்காஸ்ட் உடன் இணைந்த வைஃபை ஸ்பீக்கர்களே சிறப்பாக இருக்கும். ப்ளூடூத்தை விட வைஃப் முறையில் ஸ்பீக்கர்களை வாங்கினால் பாடல்களை வெவ்வேறு ஸ்பீக்கர்களில் துள்ளலுடன் கேட்க முடியும். சவுண்ட் பாரில் 3டி சவு

கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ?   வின்சென்ட் காபோ     கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன? அவை சூரியனின் இடத்தை மையமாக கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாசனை நுகர்வுத்திறனும் அதிகம். இதனால் அவற்றால் அவை பிறந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து, இணை சேர்ந்து குஞ்சுகளை மணலில் பிறக்க ஏதுவான நிலையில் விட்டுவிட்டு செல்கின்றன. அப்படி பிறக்கும் குஞ்சுகள் பாதுகாப்பாக பிறந்த இடம் நினைவில் நிற்கும். எனவே, அவையும் அதே கடற்கரைக்கு முழு வளர்ச்சியடைந்த பிறகு வரும். இப்போது மின் விளக்குகளை அதிகம் எரிப்பதால், ஆமைகள் தடுமாறி வருகின்றன. இவற்றை காப்பாற்றவும் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆமைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் புவிஈர்ப்பு விசையை அறியும் தன்மை. மேக்னடோரிசப்ஷென் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதன்மூலம் சரியான இடத்தை ஆமைகள் சென்று சேர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தூக்கம் நமக்குத் தேவையா? நேரு நான்கு மணிநேரம்தான் தூங்கினார் என சிலர் ஊக்கமாக பேசுவார்கள். ஆழமான தூக்கம் வரும் நேரத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அந்த நேரம் மட்டுமே கூட தூங்கினால் போதும். ஆனால் அனைவ