இடுகைகள்

அறவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிப்கோ இயக்கதில் பங்கு பெற்றதுதான் சூழல் பற்றிய எனது முதல் அனுபவம்! - சுனிதா நரைன், சூழலியலாளர்

படம்
          சுனிதா நரைன்       சுனிதா நரைன் சூழல் மற்றும் அறிவியல் மையத்தைச் சேர்ந்த சுனிதா நரைன் , பூச்சிக்கொல்லிகள் , தேன் கலப்படம் என பல்வேறு விஷயங்களுக்கு எதிராக போராடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார் . 2002 ஆம்ஆண்டு அனில் அகர்வால் இறந்தபிறகு , அவர் தொடங்கிய நிறுவனத்தை ஆராய்ச்சி மற்றும் போராட்டங்களில் பங்கேற்க கூடியதாக சுனிதா மாற்றியிருக்கிறார் . இவருக்கு சூழல் மீது ஆர்வம் கொள்வதற்கான சூழல் தற்செயலாக ஏற்பட்டது . 1979 ஆம்ஆண்டு பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார் . அப்போது சூழல் தொடர்பான பயிற்சி பட்டறையை காந்தி அமைதி அறக்கட்டளை நடத்தியது . அதில் பங்கேற்றவருக்கு சிப்கோ இயக்கம் பற்றி தெரிய வந்தது . 1973 இல் உத்தர்காண்டில் தொடங்கிய இயக்கம் அது . இதனை உருவாக்கியவர் சுந்தர்லால் பகுகுணா . கார்த்திகேய சாராபாயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் . இவர்கள் அகமதாபாத்தில் உருவாக்கிய விக்ரம் சாராபாய் டெவலப்மெண்ட் இன்ட்ராக்சன் என்ற நிறுவனம் உலகளவில் முக்கியமானது . 1981 இல் அனில் அகர்வாலை சுனிதா சந்தித்தார் . பினாங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மலேசியா அரசுக்கு சூழல் தொடர்