இடுகைகள்

மரணம். மனிதநேயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என் அப்பாவின் வாழ்கையிலிருந்துதான் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! - டெரி வெய்ட், மனிதநேய செயல்பாட்டாளர்

படம்
  டெரி வெய்ட் 1987-1991 காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் டெரி வெய்ட் உலகின் கவனத்தை ஈர்த்தார் . ஹிஸ்புல்லா இயக்கத்தினரால் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இவர் . லெபனானில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவருக்கு இன்று வயது 81 ஆகிறது . உங்கள் சிறுவயது எப்படி தொடங்கியது ? நான் செஷையர் பகுதியில் பிறந்தேன் . நூற்பு ஆலை அருகே இருந்த ஸ்டைல் என்ற கிராமத்தில் வளர்ந்தேன் . அது தொழில்நுட்ப புரட்சியின் தொடக்க காலம் . சாமுவேல் கிரெக் ஊரக தொழில்துறையை உருவாக்கி வந்தார் . பின்னர் அந்த தொழிற்சாலைகள் கைவிடப்பட்டன . இன்று அது அருங்காட்சியமாகி உள்ளது . உங்கள் அப்பா காவல்துறை அதிகாரி அல்லவா ? அவரது சம்பளத்திற்கு நாங்கள் நல்ல வீட்டில்தான் வாழ்ந்தோம் . அப்பாவின் குறைவான சம்பளத்தில் பெரிய வீடுதான் அது . அங்கேயே தோட்டமும் இருந்தது . நாங்கள் எங்கள் வீட்டிற்கான பழங்கள் , காய்கறிகளை விளைவித்துக்கொண்டோம் . சில சமயங்களில் குற்றவாளிகளை விசாரணை செய்யவும் வீட்டின் அறைகளைப் பயன்படுத்துவார் . முடிந்தவரை அங்கு அமைதி நிலவுமாறு