இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருவேளை உணவுக்காக நான் ஏராளமான வேலைகளை செய்துள்ளேன்! - எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர், அரசியல்வாதி இமான் என்று வெளியாகியுள்ள நூல் நீங்கள் எழுதிய வரிசையில் 25ஆவது நூல்தானே? இல்லை 26 ஆவது நூல். வங்காளத்தில் இந்த நூலை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். சீரா சீரா ஜீபோன் என்பது அதன் பெயர். இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இமான் என்றாகியுள்ளது.  அருணாவா சின்காவின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்துள்ள அருணாவாவின் பணி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அவர் என்னுடைய தேர் ஈஸ் கன்பவுடர் இன் தி ஏர் என்ற நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை வாசித்தவர்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். நூலின் அடிப்படை உணர்ச்சிகளை உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறன் கொண்டவர்.  நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? நான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன்.  வங்காள மொழியில் மட்டும் முதலில் உங்கள் நூல்கள் வெளியாகின. இப்போது மொழிபெயர்ப்பு காரணமாக பிற மொழிகளிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருணாவா அவர்களுக்குத

நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? கோள்களின் எடையை எப்படி தீர்மானிக்கிறார்கள்? அறுபது கிலோ தாஜ்மகால் என்று பெண்களை தோராயமாக வர்ணிப்பது போல அல்ல. கோள்களின் எடையை அதன் ஈர்ப்புவிசை எந்தளவு வீரியமாக உள்ளதோ அதை வைத்தே தீர்மானிக்கிறார்கள். புதிதாக கண்டுபிடிக்கும் கோள்களை அதன் குறுக்களவு, அதிலுள்ள கனிமங்களின் அளவு வைத்து எடை இவ்வளவு இருக்கும் கண்டறிந்து கூறுகிறார்கள்.  ஒரு கோள் எந்தளவு ஈர்ப்புவிசையைக் கொண்டு பிற கோள்களை ஈர்க்கிறது என்பதே இதில் முக்கியம். இதற்கு நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கைகள் பயன்படுகின்றன. ஒருகோளின் எடையை தனியாக கண்டுபிடிப்பதை விட அதற்கு ஒரு துணைக்கோள் இருந்தால் வேலை எளிதாகிவிடும். செயற்கைக் கோள் மூலம் அதன் ஈர்ப்புவிசை பற்றிய விவரங்களைப் பெற்று எடையைக் கணக்கிட முடியும். கோள்களில் புதன், வெள்ளிக்கு நிலவுகள் கிடையாது. இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஈர்ப்பு விசை என்பது மிக குறைவு. இனிவரும் காலங்களில் நாம் விண்கலங்களைக் கொண்டு நேரடியாகவே கள ஆய்வுகளுக்கு சென்றுவிடலாம். இதனால் தோராய அளவுகளை கணிக்க வேண்டிய அவசியம் குறைவு.  நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் வாழும்? சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். இ

மாருதி 800 கார் உருவாக்கம் சஞ்சய் காந்தியின் கனவா? இந்தியா 75

படம்
  இந்திய அரசு, 1950களில் மக்களுக்கான சிறிய காரை உருவாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அப்போது நிறைய விதிமுறைகள் இருந்ததால் ஐடியாக்கள் காகிதங்களோடு அப்படியே மூடி வைக்கப்பட்டன. கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவேண்டும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றாக இணையவேண்டும் என்ற சூழல் இருந்தது.  அரசு, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து கார் தயாரிப்புக்கான உரிமங்களை தருகிறோம் என்று கூறியது. இதற்கு பதினெட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெல்கோ என்ற நிறுவனம் முக்கியமானது. இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அது.  ஆனால் சஞ்சய் காந்திக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தவரை கார்களின் தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தார். வெளிநாட்டில் இருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் படித்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்நிறுவனம், இயந்திர பொறியியலில் சஞ்சய்க்கு குறைந்த திறமையே இருந்தது. அவருக்கு அதைக் குறிப்பிட்டுத்தான் சான்றிதழ் வழங்கினோம் என்று கூறியது.  பழைய டெல்லி அருகே வாடகைக்கு காரேஜ் ஒன்றை சஞ்சய் வாங்கி வைத்திர

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

படம்
  இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது.  சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது.  ஹர்பால்சிங் தனது காருடன்.. கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ஆண்டில் டிசம்ப

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.  ஆ

நூலகங்களை புத்துயிர் பெறச்செய்வது எப்படி? கர்நாடகா வழிகாட்டுகிறது!

படம்
  நூலகங்கள் மட்டும்தான் அனைத்து குழந்தைகளும் உள்ளே வந்து படிக்கும் வாய்ப்பை அனைத்து பிரிவினருக்கும் வழங்குகின்றன. இங்குதான் ஏராளமான வார, மாத, நாளிதழ்கள் எளிதாக கிடைக்கும். நீங்கள் இருக்கும் பகுதியைப் பொறுத்து அங்கு ஊர்ப்புற, பகுதிநே, கிளைநூலகம் இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் சிரத்தை எடுத்து வேலை செய்யும் நூலகமும், கொஞ்சமேனும் துடிப்புள்ள தன்னார்வலர்கள் இருந்தால் சிறப்பு. இல்லையெனில் தூசி துடைக்கப்படாத மேசையும், குப்பைகளாக போடப்பட்ட நூல்களும்தான் நூலகத்தின் அடையாளமாக இருக்கும்.  கர்நாடக மாநிலத்தில் 5600 கிராம நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராம பஞ்சாயத்துகளின் கீழ் செயல்படும் இந்த நூலகங்கள், பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவின. ஒடுவா பெலகு எனும் திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தி நூலகங்களை மீட்டெடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த நூலகங்களில் இலவசமாக கட்டணமின்றி இணைந்துகொள்ளலாம்.  நூலகங்களில் உள்ள நூல்களை வீட்டுக்கே எடுத்துச்சென்று படித்துவிட்டு பிறகு குறிப்பிட்ட நாள் தவணையில் கொடுத்தால் போதுமானது. இவர்களுக்கென மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுக்கிறார்கள். இப

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

சைக்கோ டைரி நூல் வெளியீடு- தரவிறக்கும் முகவரி இதோ!

படம்
  பொதுவாக குற்றங்களை பற்றிய நூல்கள் தமிழில் குறைவு. உளவியல் சார்ந்த கோணத்தில் குற்றங்களை பார்ப்பது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில நூல்கள், நாளிதழ் செய்திகள் ஆகியவற்றை தழுவியே நூல் எழுதப்பட்டுள்ளது. குற்றம், அதுதொடர்பான உணர்ச்சிகள், பின்விளைவுகள் ஆகியவற்றை பற்றிய மனதிற்குள் எழும் ஏராளமான கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கும் என நம்புகிறோம். நூலை தரவிறக்கி வாசியுங்கள்.  நூல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது. இதனை வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. மற்றபடி நூலை படிக்கலாம் பகிரலாம் பரவசமாகலாம்.  சைக்கோ டைரி நூலின் பிடிஎப் முகவரி https://www.mediafire.com/file/83wrallx78g3ipc/psycho_diary_boo k_pdf.pdf/file மொபி கோப்பை தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/v1qrnxr9shsk5ol/psycho_diary.mobi/file இபப் கோப்பைத் தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/7o6kxokcqvxgl15/psycho_diary.epub/file கோமாளிமேடை டீம் 

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்

இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

படம்
  பமீலா டி மெக் எல்வீ பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன? பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா? நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல குறைந்து

சாதி, பாலியல் சீண்டல் ஆகியவற்றை சமாளித்து காதலிக்கும் காதலர்களின் கதை! லவ் ஸ்டோரி -தெலுங்கு

படம்
  லவ் ஸ்டோரி தெலுங்கு  இயக்கம் சேகர் கம்முலா இசை பவன் சிஹெச் சாதி, குழந்தை மீதான பாலியல் சீண்டல் என இரண்டு விஷயங்களையும் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். நாயகனுக்கு சாதி, நாயகிக்கு பாலியல் சீண்டல் என இரண்டு பிரச்னைகளை சொல்ல முயன்றதில் படமா, பாடமா, சீரியலா என இழுத்துவிட்டது.  ஆஹா தலைப்பு லவ் ஸ்டோரி. அதற்காக கிரியேட்டிவிட்டியாக காதல் எல்லாம் கிடையாது. டான்ஸ் அதையொட்டி வரும் காதல்தான் உள்ளே இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ரேவந்த், மௌனிகா என்ற பாத்திரங்களில் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவருமே எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு இசை கொடுத்திருக்கிறார் பவன் சி.ஹெச். ரேவந்திற்கும், அவரது அம்மாவிற்கும் உள்ள உறவு இயல்பானதாக இருக்கிறது. படத்தின் உயிர்த்தன்மையே எதார்த்தம் குறையாத சில விஷயங்கள்தான்.  ஐயையோ சாதி, பாலியல் சீண்டல் என்ற இரு விஷயங்களுமே தனித்தனியே பார்க்கும்போது தீவிரமானவை. இதனை தனியாகவே படம் எடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டு வரும்போது சிக்கலாகிறது.  ரேவந்த் பாத்திரம் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். முடிவெட்டக்கூட அவருக்கு ஊரில் அனுமதி

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! கோமாளிமேடை டீம் 

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ

குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

படம்
  மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.  இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று அப்பொற

வீட்டை கொலைசெய்த பெண்களின் உடல் உறுப்புகளால் அலங்கரித்த கொலைகாரர்

படம்
  மோசமான கொலைகாரர் ஜெப்ரி டாமரை இப்படி கூறலாம். இவரைப் பார்க்கும் யாரும் கொலைகளை இந்தளவு கொடூரமாக செய்திருப்பாரா என்று கூறவே முடியாது. ஒருவரைக் கொன்று பிறகு அவர்களோடு உடலுறவு செய்வது இவரது வழக்கம். கூடுதலாக உடல் உறுப்புகளை வெட்டி சாப்பிடுவது, அதனை குறிப்பிட்ட வகையில் ஜி.வெங்கட்ராம் புகைப்படம் போல அழகுபடுத்தி வைப்பது ஆகியவற்றை செய்திருக்கிறார்.  இவருக்கு அடுத்து இன்னொருவரைக் கூறலாம் என்றால் நேராக ஜப்பானுக்கு போக வேண்டும். அங்கு வாழ்ந்த இசெய் சகவா முக்கியமான கொலைகார ர். இவர் பிரெஞ்சு பெண்ணை கொலை செய்து அவரது முழு உடலையும் மெல்ல உணவாக்கி சாப்பிட்டார். பிறகு சாப்பிட்ட அனுபவத்தை நூலாக எழுதி மக்களுக்கு கொடுத்தார். எதற்கு.. யான் பெற்ற இன்பத்தை... அதேதான். இதற்காக அரசு இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. வெளியே வந்தவர் ஏதாவது குற்றங்கள் செய்தாரா என்பது தெரியவில்லை.  வெறுக்க கூடிய கொலைகாரர் கார்ல் பன்ஸ்ராம். இவர் நான் கொலை செய்ய நினைப்பவர்களை கொல்வதுதான் திருப்தி தருகிறது. ஒட்டுமொத்த மனித இனத்தையே நான் வெறுக்கிறேன். கொள்ளை, கொலை, அழிப்பது, கொல்வது என்பதை நான் செய்ய நினைக்கிறேன். நான

குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?

படம்
குற்றங்களை ஆவணப்படுத்துதல் குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.   ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன்

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

குற்றங்களை எப்படி தடுப்பது?

படம்
  பெண்கள் குற்றங்களை ஆவணப்படுத்துபவராக செயல்பட முடியுமா? ஏன் முடியாது. செய்யும் வேலை என்னவென்று ஒருவருக்கு தெரிந்துவிட்டால் போதுமானது. இதில் ஆண், பெண் என தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. முதலிலேயே கூறியதுபோல இது குற்றம் தொடர்பான வேலை. இங்கு தனிப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை கவனித்து அடிப்படையான மனிதர்களின் குணங்களை பார்ப்பது முக்கியமானது.  குற்றவாளிகளுக்கு நெருக்கமாக... குற்றங்களை ஆவணப்படுத்துபவர் சிறைக்கு சென்று குற்றவாளிகளை நேர்காணல் செய்பவர். இப்படி பலமுறை அவர் குற்றவாளிகளை சந்தித்ததால், அவர் அவர்களின் நண்பராகிவிடுவாரா என்ன? உடனே மயிலை பிரியாணியில் பிரியாணியும், அஸ்மா மெஸ்சில் பத்து ரூபாய் பிரிஞ்சியும் சாப்பிட்டு நெருக்கமாகி பீச்சுக்கு கால்நடையாக நடந்துசெல்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.  இருவரும் சந்திக்கும்போது சிறைக்கம்பிகள் இருப்பது போலவே, நேரில் சந்தித்தாலும் இடைவெளி இருக்கும். குற்றவாளியின் மனநிலை, அவர் அடுத்து என்ன செய்வார், எப்படி யோசிப்பார் என்பது வரையிலான விஷயங்களை குற்றங்களை ஆவணப்படுத்துபவர்

ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது.  ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா அப்படி ஒரு சக்தியை குற்றங்களை ஆவ

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ

மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!

படம்
  மாசுபாடுகளின் தலைமகன்!   மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.  பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.  காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுத

பசுமைப்பாதையில் பயணிக்கத் தொடங்கும் இந்திய ரயில்வே!

படம்
  பசுமைமயமாகும் ரயில்துறை! இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.  இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு முதல் ரயில்வே த