கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

 






தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன. 

அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம். 



கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது. 

சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது. 

அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும். 

அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்தை முதலீடு செய்கிறார் என்று மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பு அதிகம். மேலும் இந்த நிறுவனங்கள் இப்போது கட்டணம் வசூலிக்காவிட்டாலும் பின்னாளில் குறிப்பிட்ட கட்டணத்தை சேவைக்காக  வசூலிப்பார்கள் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

bs

கருத்துகள்