இடுகைகள்

குளோனிங்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த