இடுகைகள்

மழைநீர் சேகரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைநீர் சேகரிப்பாளர் இந்திரகுமார்! - மாமனிதர் போற்றுதும்!

படம்
மழைநீர் சேகரிப்பு  மாமனிதர்! ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்னையில் குடங்களைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலையத் தொடங்கிவிடுகின்றனர். காரணம், சென்னை பெருநகரம் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளை மட்டுமே குடிநீர் தேவைக்கு நம்பியுள்ளது. வீட்டைச் சுற்றிலும் கசிவுநீர்க்குட்டைகள், மழைநீர்  சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகிறார் மழைநீர் சேகரிப்பாளரான இந்திரக்குமார். "எங்க வீட்டிலுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை, எக்ஸ்னோரா அமைப்பின் நிமல் சார்தான் அமைச்சுக் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டில்தான்  நிலத்தடிநீர் சேகரிப்பைத் தொடங்கினேன்.  இதுவரை நாங்க தண்ணீர் பஞ்சத்திற்காக அலையும் நிலை வரலை" என்று பேசத் தொடங்கினார். இவர் தன் வீட்டில் மழைநீர் தேங்கும்படியான கொல்லைப்புறத்தை தாழ்த்தியும், வாசல்புறத்தை உயர்த்தியும் கட்டியுள்ளார். வாசல் வழியாக வரும் நீரை, கசிவுநீர்க்குட்டைகள் மூலமாக நிலத்தடி நீராக சேமிக்கிறார். கூடுதலாக அருகிலேயே மரங்கள் வளர்ப்பதால், மண்ணரிப்பு பிரச்னையின்றி நீர் சேகரமாவதோடு, கோடையிலும் சில்லென காற்று வீசுகிறது.  ”எங்க வீட

கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா

படம்
IndiaSpend கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் ! சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது.  பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குடிநீர் கிடைக்குமா? இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல