இடுகைகள்

விவாகரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியமா? காதல் என்ற உறவு, திருமணம் என்ற இடத்தை எட்டும்போது சட்டப்பூர்வமாகிறது. நிலைத்து நிற்கும் உறவு என்பதை திருமணமே சாத்தியப்படுத்துகிறது என பலரும் கருதுகிறார்கள். அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, 57 சதவீதம் பேர் பதினைந்து வயது தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறியது. 44 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடிவருகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், வீட்டில் ஒற்றை மனிதராக தனியாக வாழ்வது என எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் உள்ளன. இவைதான் திருமணத்திற்கு தடையா? ஆண், பெண் என இருபாலினத்தவரும் ஒன்றாக வாழ திருமணம் மட்டும்தான் ஒரே வாய்ப்பாக உள்ளதா என்று கேட்டால் இல்லை. திருமணம் செய்துகொள்பவர்கள் இன்றுமே அதிகமாக உள்ளனர். அதற்கு கிராமம், நகரம் ஆகியவற்றில் நிலவி வரும் சமூக அழுத்தம் காரணமாக இருக்கலாம்.  திருமணம் தரும் பயன்கள் என்னென்ன? திருமண...

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான்.  திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...

விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி குடும்பம் என்றால் என்ன? பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.  அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது? இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது.  குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதா...

நவீன காலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்! - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஒருவரின் ஆரோக்கியத்தை என்னென்ன விஷயங்கள் பாதிக்கும்? ஒருவரின் வயது, பாலினம், வேலை, குடும்ப வரலாறு, குணம், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகிய அம்சங்கள் மாறுபாடாக அமைந்தால், குளறுபடியானால் உடல், மனம் என இரண்டுமே கெட்டுப்போகும். இதில் சில அம்சங்கள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவையாக இருக்கும். எப்போதும் இன்பத்தை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டு சோகமான துக்க கதைகளை பகிரும் நண்பர்களை விட்டு விலகுங்கள். சாதி, மதம், இனம் என பற்று கொண்ட ஆட்கள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்களோடு பேசுவது நேரத்திற்கு கேடு, உங்கள் மூளையிலும் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தினால், அதிலிருந்து விலகுங்கள். நாய், பூனையை வளர்க்க முயலுங்கள், குடும்பத்தினரோடு கிடைக்கும் நேரங்களில் வாயாடுங்கள். உங்கள் தன்னம்பிக்கை, அறிவு என இரண்டுமே வளரும். மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது? சுற்றியுள்ள சைக்கோ சாடிஸ்டுகள்தான் என இன்ஸ்டன்டாக காரணம் கூறலாம். இருந்தாலும் அறிவியலில் காரணம் தேடுவோம். அமெரிக்காவின் ...

விவாகரத்து வழக்குரைஞருக்கும் காதலர்களை சேர்த்து வைக்கும் பெண்ணுக்குமான மோதல் - பிளான் ஏ, பிளான் பி

படம்
  பிளான் ஏ, பிளான் பி நெட்பிளிக்ஸ் - இந்தி  திருமணமானவர்களுக்கு வேகமாக விவாகரத்து பெற்றுத்தரும் வழக்குரைஞருக்கும், காதலர்களை அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஒன்றாக சேர்த்து வைக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் மோதல் காதல் இன்னபிற சம்பவங்களே கதை.  ஷேர்ட் ஸ்பேஸ் எனும் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள், பொதுவான கிச்சன் என உள்ள இடத்திற்கு இருவர் வாடகைக்கு வருகிறார்கள். ஒருவர், சுக்லா எனும் விவாகரத்து பெற்றுத் தரும் வழக்குரைஞர் - ரிதேஷ் தேஷ்முக். இன்னொருவர் தமன்னா. இருவரின் கொள்கைகளே வேறுபாடனவை என்பதால், இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. சுக்லா அவரது மனைவியுடன் வாழாமல் தனியாக வாழ்கிறார். அவரது மனைவி அவரது முதலாளியுடன் பாலுறவு கொண்டுவிடுகிறார். இதை சுக்லா அறிந்துகொண்டுவிடுகிறார். இதனால் மனைவியை விட்டு பிரிந்துவிடுகிறார். ஆனால் மனைவிக்கு     குற்ற உணர்ச்சியை உருவாக்கும்படி    விவாகரத்து தருவதில்லை. இதேபோல தமன்னாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. ரிதேஷ், தமன்னா என இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்னை கடந்து எ...

திருமண உறவுகளைக் காப்பாற்ற பேச வேண்டிய காதலின் மொழிகள் !

படம்
  காதல் மொழிகள் ஐந்து  கிரேக் சேப்மன்  தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல் ஒருவர் திருமண வாழ்க்கை, நட்பு, உறவுகளைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமென கிரேக் சேப்மன் சொல்லித் தருகிறார். முக்கியமாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை. பரிசு, பாராட்டு, பிரத்யேக நேரம், ஸ்பரிசம், பணிவிடை ஆகியவற்றை முதல் அத்தியாயத்தில் எழுத்தாளர் சொல்லிவிடுகிறார்.  அடுத்து வரும் அத்தியாயங்களில் இந்த ஐந்து விஷயங்களுக்குமான எடுத்துக்காட்டுக்களை சொல்லி விளக்குகிறார். பெரும்பாலும் எழுத்தாளர் வாழ்க்கை பயிற்சிக்கான பயிலரங்கு நடத்துபவர் என்பதால் அதில் கண்ட அனுபவங்களைத்தான் பகிர்கிறார்.  இதில் சில அனுபவங்களை அவர் பார்த்து, அதன் காரணம் என்ன என்பதை அறிகிறார். குறிப்பாக, அதிசயம் என யாராவது ஒரு தம்பதியினர் சொல்லிவிட்டால், அந்த அதிசயத்தை அறியாமல் சேப்மன் விடமாட்டார். அதை வைத்து பயிலரங்கு நடத்தலாமே? பிறகு அனுபவங்களைத் திரட்டி நூலாகவும் எழுதி விற்கலாம்.  மனித உறவுகள் எளிதாக உடையும் இயல்பு கொண்டவை. அதை எப்படி காப்பாற்றுவது என்பதற்கு தனது சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் எழுத்தாளர் சொல்லுகிறார்...

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்...

குடும்ப வாழ்க்கை சோகத்தால், காதலியின் காதலுக்கு நோ சொல்லும் எழுத்தாளக் காதலன் - T&F

படம்
              ட்யூஸ்டேஸ் அண்ட் ஃப்ரைடேஸ் தரன்வீர் சிங் வாரத்தில் இரு நாட்கள் டேட்டிங் செல்லும் எழுத்தாளரும், வழக்குரைஞரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காதலை உணர்ந்தார்களா என்பதுதான் கதை.  இந்த கதையை முக்கியமானதாக கருதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. பெண்கள்தான் காதலை இதில் முதலில் ஏற்றுக்கொண்டு அதனை ஆண்களிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆண்கள் பெண்களை தங்களுடைய வீட்டிற்கு வரவேற்கவில்லை. பெண்களின் இடத்திற்கே வந்து வசிக்கிறார்கள். மும்பையில் வசிக்கும் சியா வழக்குரைஞர். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது நிறுவனத்தில் வாடிக்கையாளரான நடிகருடன் கூட டேட்டிங் செல்கிறார். ஆனாலும் கூட இதயத்திற்கு நெருக்கமாக அந்த உறவு அமையவில்லை. அனைத்து உறவுகளிலும் கறாரான விதிமுறைகளை கையாளும் பழக்கம் கொண்டவர். அதன்மூலம் தான் காயப்படக்கூடாது என்பதாக நினைக்கிறார்.  நடிகருடனான பிரேக் நடந்த பிறகு அடுத்த காதலை நிச்சயம் தான் சந்திக்கும் பிற ஆண்களுடன் வைத்துக்கொள்ளலாம். நிறுவன வாடிக்கையாளர்களுடன் செய்யக்கூடாது என உறுதியாக நினைக்கிறார். ஆனால் சியாவிற்கு அடுத்த க...