காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?
காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்! டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார். காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான். காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு விஷயங்