இடுகைகள்

ஒரே உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலியுடன் அறம் பேசும் உண்மை மனிதர்களின் கதை! அறம் - ஜெயமோகன்- வம்சி

படம்
  அறம் ஜெயமோகன் வம்சி பதிப்பகம்   நூலில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான்.   வாசிப்பவர்களுக்கு அவை சிறப்பான அனுபவங்களை தருகின்றன. நான் இங்கு குறிப்பிடவிருப்பது சில கதைகளை மட்டுமே. கோட்டி   சிறுகதை, இன்றைய நவீன அரசியலை கேலி செய்யும் காந்தியவாதியின்   கதையைக் கூறுகிறது. குறைகளை சொன்னாலும் கூட அனைத்து ஊர்களிலும் இப்படி தன் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்த மனிதர்கள் உண்டு. இவர்கள் போன்றவர்களால்தான் ஊரிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்படும். கதையில் வரும் பூமேடை அப்படிப்பட்டவர். அவர் நோட்டீஸ் ஒட்டும் இடமும், ஏன் ஒட்டுகிறீர்கள் என கேட்கும்போது சொல்லும் பதிலும் அட்டகாசமாக அவரது மனதை வெளிக்காட்டுகிறது.   பிறரது சந்தர்ப்பவாதங்களை அனைத்து இடங்களிலும் உரித்துக்காட்டும் மனிதராக முகத்தை உள்ளபடியே காட்டும் மனிதராக பூமேடை இருக்கிறார். இதனால் அவரை கோட்டி என ஊரே சற்று தள்ளி நின்று பார்க்கிறது. அவர் தலித் மக்களுக்கான தோட்டி வேலை பற்றி ஆவேசமாக பேசும் காட்சி எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது. பெண் பார்க்க செல்லும் வழக்குரைஞரின் நிலையில்தான் நாம் பூமேடையை பார்க்கிறோம