இடுகைகள்

தன்மானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது அப்பா செய்த தவறை காதலால் சரிசெய்யும் ஆனந்த்!

படம்
  ஆனந்த் ராஜா, கமாலினி முகர்ஜி இயக்கம் சேகர் கம்முலா   தெலுங்கில் இயக்குநர் மணிரத்னம் போல படம் இயக்க முயற்சிக்கும் ஆள்தான் சேகர் கம்முலா. இவரது பட கதாபாத்திரங்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் . பிறகுதான் காதலிப்பார்கள். அதில் வரும் பிரச்னைகள்   என கதை நகரும். ஆனால் இந்தப்படம் அந்த ரகத்தில் வராது படத்தில் ரூபாவுக்கு பெற்றோர்கள் சிறுவயதில் விபத்தில் இறந்துவிட, தனியாளாகவே வளர்கிறாள். அவளுக்கு துணையாக தோழி ஒருத்தி அருகில் இருக்கிறாள். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மார்வாடி பையன் ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிறாள். கல்யாணச்செலவு கூட அவள்தான் செய்கிறாள். ஆனால், பையன் அம்மா பிள்ளை. எனவே அம்மா சொன்னதைக் கேட்டு ரூபாவை மணம் செய்கிறான். ஏறத்தாழ ரூபாவை வீட்டுக்கு வேலைக்காரி போலத்த்தான் மாற்றிக்கொள்ள கல்யாண சடங்கு. இந்த நேரத்தில் உண்மை தெரிய வந்து ரூபா, கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி நிறுத்துகிறாள். தன்மானம், சுதந்திரம் என்ற காரணத்திற்காகவே கல்யாணத்தை நிறுத்துகிறாள். பிறகு தான் வேலை செய்த பழைய ஆபீசுக்கே மீண்டும் பணிக்குச் செல்கிறாள். ராகுல் என்ற முன்னாள் காதலனை மட்டும் மீண்டும் தவிர்க்கி

குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

படம்
  ரா கி ரங்கராஜன், எழுத்தாளர் க்ரைம் ரா கி ரங்கராஜன் அல்லயன்ஸ் பதிப்பகம்   ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம். பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.   கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற்றவாளிகளை யார்