இடுகைகள்

தேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

காதலியைத் தேடுவதற்காக தண்ணீர் கேன் போடும் இதய அறுவைசிகிச்சை வல்லுநர்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

படம்
                    டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Written by: Park Jin-woo, Kim Joo Directed by: Jin Hyuk, Hong Jong-chan     தண்ணீர் கேன் விற்பனை செய்பவன் , குழந்தையின் உடைந்த விரலை சரி செய்கிறான் . குழந்தையின் அப்பாவுக்கு ஆபரேஷன் செ்ய்துவிட்டு மாயமாகிறான் . யார் அவன் என்பதை பார்வையாளர்கள் அறிந்தால் அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் . இந்த தொடர் வெறும் காதல் மட்டும் கொண்டது அல்ல . வடகொரியா , தென்கொரியா என இருநாட்டு அரசியலும் தீவிரமாக பேசப்படுகிறது . இதில் எதிர்மறையாக திடமாக காட்டப்படும் நாடு வடகொரியாதான் . இரு நாட்டு அரசியல்வாதிகளும் எப்படி மக்களை பயன்படுத்தி தங்கள் நலன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் , அதற்கு பலியாகும் மனிதர்கள் , அவர்களின் குடும்ப வாழ்க்கை என உணர்ச்சிகரமாக தொடரை எடுத்திருக்கிறார்கள் . பார்க் குவான் பள்ளி சென்று கொண்டிருக்கும் சிறுவன் . அவனது அப்பா , மியாங் சாங் மருத்துவமனையில் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரை வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வைக்க தென்கொரிய அரசியல்வாதி திட்டமிடுகிறார் . அப்படி அவர் அங்

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும்