இடுகைகள்

ஓய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

படம்
  மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்? மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம்.  சமூகவலைத்தள போதை வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.  உண்மையான நண்பன்  சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களாக  இருந்தால் அவர்களோடு ந

திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

படம்
  ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நேர்காணல் இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்? முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி… முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன். அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்கிறா

சைக்கிள் கற்பது எப்போதும் மறப்பதில்லை, என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? சைக்கிள் கற்பது எளிதில் மறப்பது இல்லை ஏன் ? சைக்கிளை குரங்கு பெடல் போட்டு பலரின் இடுப்பின் மீது விட்டு கற்றவர்களுக்கு அது எப்படி எளிதில் மறக்கும் ? பலருக்கும் சைக்கிளை பழகி பல்லாண்டுகள் ஆனபிறகும் சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது மறப்பது இல்லை . சைக்கிள் ஓட்டுவது பெரிய விஷயமாக பலருக்கும் தெரியாது . ஆனால் இதில் முழு உடலும் அலர்ட்டாக இருப்பது முக்கியம் . அப்போதுதான் மூளை நினைத்த விஷயங்களை உடல் செயல்படுத்த முடியும் . உடலின் மோட்டார் அமைப்பின் செயல்பாடு , தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை நீங்கள் பெடல் போடும்போது சரியாக அமையவேண்டும் . இல்லையெனில் சைக்கிள் எங்காவது மோதி சரிந்துவிடும் . விளைவாக உங்கள் முட்டி பெயர்ந்து விடும் . மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் ஜூர்ஜென் கான்சாக் செரிபிரல் ஒருங்கிணைவு சைக்கிள் ஓட்டுதலை சாத்தியமாக்குகிறது என்று கூறுகிறார் . சைக்கிள் ஓட்டுவது மட்டுமல்லாது நடனம் , விளையாடுவது , நடப்பது ஆகியவை செய்யும்போதும் அவசியமாகிறது . இவை சரியாக இல்லாதபோது இந்த செயல்பாடு நடைபெறாது . வாழ்க்கை மு

தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது? கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள்.  உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது.  பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது.  சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. இதன் பின்னர் விஷயங்