இடுகைகள்

கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!

படம்
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல் பட்டியல்

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

பின்லாந்து கல்விமுறையில் என்ன சிறப்பு உள்ளது?

படம்
  டீச் லைக் ஃபின்லாந்து டிமோத்தி டி வாக்கர் கல்வி கட்டுரை நூல் அமெரிக்க ஆசிரியரான வாக்கர், பின்லாந்துக்கு பணிமாறி செல்கிறார். அங்கு ஹெல்சின்கி என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை வேலை என்பதில் ஓய்வே கிடையாது. மனிதனா, எந்திரமா என்று கேட்கும்படி உழைக்கவேண்டும் என பாடுபடுகிறார். இறுதியாகத்தான் தெரிகிறது. அப்படி பாடுபட்டு உழைக்கவேண்டியதில்லை. மாணவர்கள் உயருவதற்கு, கவனிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும் என புரிந்துகொள்கிறார். அதற்காக ஏராளமான நூல்களைப் படித்து பல்வேறு சோதனை முறைகளை செய்து பார்க்கிறார். அதைப்பற்றிய அனுபவங்களை பகிரும் நூல்தான் இது.  பின்லாந்தில் உள்ள கல்விமுறை, கல்வி ஆராய்ச்சி பற்றி வாக்கர் முதலில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அமெரிக்க முறையில் கல்வியை போதிக்கிறார். தன்னை சற்று நெகிழ்த்திக்கொள்வதில்லை இறுக்கமாகவே இருக்கிறார். அவர் மனம் எப்படி மெல்ல மாறுகிறது என்பதே நூல் விளக்குகிறது. நூலில் அதிகமுறை வரும் வார்த்தை, அமெரிக்காவில், அமெரிக்க கல்விமுறையில் என்பதுதான். பின்லாந்து எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின...

பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

படம்
  பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம்.  பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.  பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...

ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!

படம்
 ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக.... ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது. வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை.  அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தே...

விரைவில் .... மின்னூல் வெளியீடு

படம்
  ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ்வேர்ட்ஸ் தளங்களில் நூல் கிடைக்கும்....    

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...

கல்வி ஒருவற்கு... சீன கல்வி சீர்திருத்தங்கள் புதிய மின்னூல் வெளியீடு

படம்
    https://www.amazon.com/dp/B0FC2V9TT9

சீனாவிலுள்ள பள்ளி வகைகள்

படம்
  எலைட் பள்ளி இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும். நகர மேல்நிலைப்பள்ளிகள் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள். தொழில்பயிற்சிபள்ளிகள் கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அல...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!

படம்
    சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!

படம்
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல. சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்கள...

மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!

படம்
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...

உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!

படம்
  எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான். வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும...

சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்

சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது. மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை. சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது. மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திர...

முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...