நீண்டகால நோய்களுக்கு தீர்வு!
மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதியின் மருந்து வீரியமுறை சற்று சிக்கலானது. இதில் இடம்பெறும் மூலிகைகள் அனைத்தும் பச்சையாக இருக்கும்போது அரைத்து சாறு எடுக்கப்பட்டு அதை சர்க்கரை அல்லது சாராயத்தில் கலக்கிறார்கள். ஓமியோபதி மருந்துகள் பலவும் சர்க்கரை அல்லது சாராயத்தில் கரைக்கப்பட்டவையாகவே இருக்கும். சில மருந்துகளை கொடுக்கும்போது சாராயத்தில் நனைத்துக் கொடுப்பார்கள். மருந்தை வீரியமாக்கவே இந்த முயற்சி. சர்க்கரை, சாராயம் என இரண்டுமே மருந்துகள் வீரியமிழப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மூலிகைகள் பச்சையாக இருக்கும்போது சாறு எடுக்கப்படுவதற்கு, காரணம் அதில்தான் சாரம் இருக்கும். வலிமை இருக்கும் என்பதே. காய்ந்த மூலிகையில் வலிமை கிடையாது. அது பொடியாக இருந்தாலும் அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி. மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி தாய் திராவகம் தயாரிக்கிறார்கள். சாராயத்தில் உள்ள மூலிகைச் சாறின் அளவு நீர்த்துப்போன அளவு கூடும்போது குறையும். 0 எனும்போது உள்ள மூலிகைச்சாறு மூலக்கூறு அளவு, 30சி, 200சி எனும்போது இருக்காது. இப்படி இருக்கும்போது கொடுக்கப்படும் மருந்து நோயைத் தீர...