இடுகைகள்

ஓமர் அப்துல்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம