இடுகைகள்

பாம்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகின் நீளமான பாம்புகள்

படம்
  உலகின் நீளமான பாம்புகள்   ரெட்டிகுலேட்டட் பைத்தான் அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ் காணப்படும் இடம் -தெற்காசியா பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது. க்ரீன் அனகோண்டா அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ் கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி 8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது. அமேதிஸ்டைன் பைத்தான் மோரேலியா அமேதிஸ்டியானா இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் 8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும். ஆப்பிரிக்கன் ராக் பைத்தான் பைத்தான் செபே சப் சகாரா ஆப்பிரிக்கா 7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. பர்மீஸ் பைத்தான் பைத்தான் பைவிட்டாடஸ் தெற்காசியா, இந்தியா, சீனா 5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட உண்ணும்

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு செல்ல

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ! நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி? வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது.  விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது? உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிப

பாம்பிடமிருந்து தவளைக்கு பரிமாறப்படும் மரபணுக்கள்!

படம்
 பாம்பிடமிருந்து பரிமாறப்படும் மரபணு! பாம்பின் முக்கியமான உணவு,  தவளை. உணவாகும் அந்த தவளை பாம்பின் உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சித் தகவல் புதியது. தவளைகள் தங்களின் மரபணுக்களை, ஒட்டுண்ணி வழியாக  பாம்பிற்கு கடத்துகிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  பொதுவாக ஒரு உயிரினத்திடமிருந்து, அந்நிய உயிரினம் ஒன்றுக்கு (எடு.தாவரத்திலிருந்து விலங்கு, தவளையிலிருந்து பாம்பிற்கு) மரபணு பரிமாற்றம் ஏற்படுவது மிகவும் அரிது. இதற்கு ஹரிஜோன்டல் டிஎன்ஏ டிரான்ஸ்பர் (Horizontal gene transfer (HGT))என்று பெயர். பாக்டீரியாக்களிடம் இந்த முறையில் மரபணு பரிமாற்றம் நடைபெறுகிறது.  பசுக்களின் உடலில் உள்ள போவைன் பி (BovineB BovB) என்ற மரபணு, உண்மையில் பாம்பிடமிருந்து பரிமாற்றமாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது என மரபியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் உள்ள நகாஹாமா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அட்சுஷி குரபயாஷி , ஆய்வு உண்மை ஒன்றைக் கண்டறிந்தார். போவைன் பி மரபணு, மடகாஸ்கரிலுள்ள தவளைகளிடம்  காணப்பட்டது என்பதுதான் அது.

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

20 ஆயிரம் ரூபாயில் இபைக் தயாரித்துள்ள பாஸ்கரன்!

படம்
  நியூஸ் ஜங்க்ஷன்  20.7.2021 அபாரம்! இபைக்! தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவர் இயந்திர பொறியியல் படித்துள்ளவர், 20 ஆயிரத்தில் இ பைக்கை உருவாக்கியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் செல்லும் வாகனம் இது. ஓய்வுநேரத்தில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி, இ பைக்கிற்கு ஏற்பட 18 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை மாற்றினார். ”30 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த இபைக்கில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பெடல் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்” என்றார் பாஸ்கரன்.  https://www.newindianexpress.com/good-news/2021/jul/19/as-fuel-prices-rise-man-spends-rs-20k-makes-e-bike-that-goes-up-to-50-km-2332149.html போராட்டம்!  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல மாக்ரன் அறிவித்த நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள்! இடம் பிரான்ஸ், பாரீஸ் ஆஹா! கண்டுபிடிப்பு! கேரளத்தைச் சேர்ந்த இந்திரியம் பயாலஜிஸ்ட் நிறுவனம், பாம்பின் விஷத்தை கண்டுபிடிக்கும் சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. 52 நச்சுப்பாம்புக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் பாம்பு தீண்டுவதால், ஆண்டுதோறும் தோராயமாக 50 ஆயிரம் மரணங்களு

பாம்புகளால் இரையை மென்று தின்ன முடியாது? ஏன் தெரியுமா?

படம்
        பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ பாம்புகள் தாம் பிடிக்கும் இரையின் சுவை உணரமுடியுமா ? நிச்சயமாக . அவற்றின் வாசனை அறியும் திறன் அதிகம் . தனது நாக்கின் மூலம் பல்வேறு வாசனைகளை அறிந்துதான் இரையை வேட்டையாடுகிறது . நாக்கு மேலண்ணம் மூலம் கசப்பான சுவைகளை எளிதாக அறிய முடியும் . இந்த தன்மை கூட அவை நச்சு நிரம்பிய உயிரினங்களை வேட்டையாடி உண்டுவிடக்கூடாது என்பதற்காக இயற்கை தந்த கொடை . மற்றபடி அதன் முக்கியமான பலம் , வாசனையை அறிந்து இரையை வேட்டையாடுவது , தனக்கான இணையை அறிவது ஆகியவைதான் . பாம்புகள் சாப்பிடும்போது எப்படி சுவாசிக்கின்றன ? பாம்புகள் உணவை மென்று சாப்பிடுவதில்லை . அப்படியே விழுங்கிவிடுகின்றன . இச்சூழ்நிலையில் அவை மூக்கு , அல்லது வாய் மூலம் சுவாசிக்கின்றன . இரையை முழுமையாக விழு்ங்குவது என்பது நெடுநேரம் நடக்கும் செயல்முறை . வாய்க்கும் நாக்குக்கும் இடையில் உள்ள கிளாட்டிஸ் என்ற அமைப்பு வாய் மூலம் சுவாசிக்கி நகர்ந்து கொடுக்கிறது . பாம்புகளால் கடிக்க முடிந்தால் ஏன் இரையை மென்று தின்ன முடியாதுழ அதன் வாய் அமைப்பு அப்படி அமைந்துள்ளது . முன்புறம்

செக்ஸ் இன்பம் பாலூட்டிகளில் பெண்களுக்கு மட்டும்தானா?

படம்
SF ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி மனித இனத்தில் பெண்களுக்கு மட்டும் செக்ஸ் இன்பம் உண்டா? பெண் உயிரிகளுக்கு கிளிட்டோரிஸ் உண்டு. ஆனால் விலங்கினத்தில் உடலுறவு என்பது மிகுந்த வன்முறையானது. பெண்களுக்கு ஏற்படும் உடலுறவு இன்பம் என்பது நாம் ஆய்வு செய்து கண்டறிந்தது. நாம் பிற விலங்குகளில் இதனை குறைந்த அளவே ஆய்வுகள் செய்திருக்கிறோம்.  பாம்புகள், முதலைகள் போன்றவற்றின் செக்ஸ் முறைகள் வேறுவகையானது. பாலூட்டிகளில் பெரும்பாலான விலங்களின் கருமுட்டையில் விந்தணுக்களை சேர்க்கும் பணியை ஆண்கள் செய்கின்றன. ஆனால் இது மகிழ்ச்சியூட்டும் செயலா என்பது குறித்த ஆராய்ச்சிகள் குறைவு.  செக்ஸில் தசரதனாக, கிருஷ்ணனாக சாதிப்பவை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆன்டெக்னியஸ் ஸ்டூவர்டி. எலி சைசில் உள்ள இவை வயிற்றில் பை கொண்ட பாலூட்டி இனம். ஆண்டு முழுவதும் இருவாரங்களுக்கு ஒருமுறை குஷியாக செக்ஸூக்கு சூட்டிகையாக ரெடியாகி விடும் காதல் மன்னன் இது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்