இடுகைகள்

தஞ்சை ப்ரகாஷ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ்.  தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியப