இடுகைகள்

கே செல்வேந்திரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினசரி வாழ்க்கையின் அங்கதத்தை விவரிக்கும் கட்டுரைகள்!

படம்
      நகுமோ லேய் பயலே செல்வேந்திரன் கட்டுரை நூல் எழுத்தாளர் செல்வேந்திரன், இலக்கிய வட்டாரங்களில் புகழ்பெற்றவர். வாசிப்பது பற்றிய நூலை எழுதி தொடக்கநிலை வாசகர்களிடையே கவனம் பெற்றவர். நகுமோ லேய் பயலே என்ற நூல், முழுக்க அவரது தினசரி வாழ்க்கை அனுபவத்தில் அடையாளம் கண்ட நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள் உள்ளன. அவற்றில் தீவிர இலக்கியம் சாராத கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை அனைவருக்குமானது. இலக்கிய வட்டார அங்கதம் என்பது அங்குள்ள கிசுகிசு, வயிற்றெரிச்சல், பொறாமை, இன்பம், துன்பம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அரசியல் காமெடியை, அதிலுள்ள குத்தல், பகடி புரியாமல் பார்ப்பவருக்கு அதை விளக்கி சொன்னால் நன்றாக இருக்காது அல்லவா? எனவே, மேற்படி இலக்கிய அங்கதத்தை இலக்கியம் படைப்போருக்கு விட்டுவிடலாம். சாதாரணமாக படித்தாலே உங்களுக்கு அதிலுள்ள நகைச்சுவை புரிபட்டுவிடும். தனிப்பட்ட இலக்கியவாதிகளின் உடல், மனம், குணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு சிரிப்பவர்கள் சிரிக்கலாம். அல்லாவிட்டாலும் புன்னகைக்க ரசித்துப் படிக்க நிறைய இடங்கள் உண்டு. முதல் கட்டுரையிலிருந்...