இடுகைகள்

வலிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமுடி, தசைகள் பற்றி அறிவோம்!

படம்
  கார்குழல் அழகியே... அழகிகளைப் பற்றியல்ல. தலைமுடியைப் பற்றித்தான் இந்த குறுங்கட்டுரை. தலைமுடி, நகம் என இரண்டுமே கெராட்டின் என்ற வேதிப்பொருளால் உருவாகுபவை. அடிப்படையில், முடி, நகம் என இரண்டுமே அதன் வேர்ப்பகுதியில் மட்டும் உயிர்த்திசுக்களைக் கொண்டவை. எனவே,தான் முடியை வெட்டினாலோ, நகத்தை வெட்டினாலோ வலிப்பது கிடையாது.  தலையில் மயிர்கள் அடர்த்தியாக உள்ளன. எந்தளவுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் தலைமயிர்கள் வளருகின்றன. உடல் முழுக்கவும் உரோமங்கள் வளருகின்றன. சிலரின் குடும்ப பாராம்பரியம் காரணமாக கூடுதலாக, குறைவாக உரோமங்கள் இருக்கலாம்.  சாதாரண நீளமுடி, சுருட்டை முடி என்பது ஒருவகையில் ஒருவரையொருவர் ஈர்க்கிறது. சாதாரணமாக முடி உள்ளவர்கள், முடியை நவீன சலூன் சமாச்சாரங்கள் கருவிகளைப் பயன்படுத்தி அதை சுருட்டையாக மாற்றுகிறார்கள். சுருட்டை முடி குழுவினர், முடியை நீளமாக மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி இப்படி, இப்படி அப்படி முறைதான்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலையில் அரிப்பு ஏற்பட்டால், உடனே அங்கு என்ன பிரச்னை என பாருங்கள். ஈறும் பேனும் இருக்கலாம். அதை உடனே பேன் மருந்...

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

இந்திராகாந்தி சொன்னவை....

படம்
 இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள்.  4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும்.  6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...

அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

படம்
    அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன? ஒரு குழந்தையை தாதி ஒருவர் வளர்க்கிறார் என்றால், அக்குழந்தைக்கு பெற்ற தாயை விட தாதி மீது மாறாத ஈர்ப்பு, பிணைப்பு உருவாகும். இதை உளவியல் பள்ளிகளில் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். தொடக்க காலத்தில் இக்கொள்கையை ஏற்கவில்லை. தொடர்பு கொள்கை, ஒருவரின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையை உளவியலாளர் ஜான் பௌல்பை உருவாக்கினார். இதுதொடர்பாக அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் என்ற நூலை எழுதினார். இதை விரிவாக்கியவர் மேரி அன்ஸ்வொர்த். ஜான் பௌல்பையின் தொடர்பு கொள்கையை விளக்கி கூற முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயின் பாதுகாப்பு தொடக்க ஆண்டுகளில் தேவை. குழந்தை பயப்படும்போது, தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது பாதுகாப்பு உணர்வை இழக்கிறது. உடனே அழுது தாயின் அணைப்பை கதகதப்பை உணர துடிக்கிறது. இந்த சூழலில் தாய் இல்லை என்றால் குழந்தையின் மனநிலை சோகத்திற்குள்ளாகிறது. மன அழுத்தம் உருவாகிறது. மூன்று மாதம் தொடங்கி, ஓராண்டு வரை பாதுகாப்பு தொடர்பான உணர்வு தீவிரமாக இயங்குகிறது. எட்வர்ட் ஓ வில்சன் யார்? சோசியோபயாலஜி துறையை உருவாக்கிய தந்த...

முற்பிறப்பில் சகோதரனால் படுகொலையான தம்பி, தற்காப்புக்கலையால் வலிமை பெற்று வந்து பழிவாங்கும் கதை!

படம்
     ரெக்கார்ட்ஸ் ஆஃப் டீமன் பாத் ரிடர்ன் குன்மாங்கா.காம் 57 அத்தியாயங்கள் ---- இந்த மாங்கா காமிக்ஸ் கதையில், முழுக்க தீயசக்தி இனக்குழுவில் நடைபெறும் அதிகாரப்போட்டி, வாரிசு அரசியல், வஞ்சனை, துரோகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்கள். கதையின் தொடக்கத்தில் நூல்களை வாசித்துக்கொண்டிருக்கும் தீயசக்தி இனக்குழுவின் ஏழாவது இளவரசனுக்கு ஒருவர் விஷத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அவர் அதைக் குடித்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற வற்புறுத்துகிறார் ஒரு படையணித் தலைவர். இளவரசன் தன்னை வற்புறுத்துபவனைக் கொன்றுவிட்டு, அவனது படையணிகளை வெறியோடு கொல்கிறார். திடீரென பின்புறமிருந்து ஒருவன் அவனைத் தாக்கிக் கொல்கிறான். கொல்பவன்தான், தீயசக்தி இனக்குழுவின் தலைவன். நாயகனின் ஆறாவது சகோதரன், மியோன் காக். நாயகன் இறக்கு்ம்போது, அதிகாரம் இல்லாமல் இருப்பதால்தான் இப்படி அநீதியாக நாம் கொல்லப்பட்டோம் என நினைத்துக்கொண்டே சாகிறான். அவன் உயிர்மெல்ல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. ஆம் மற்றொரு மறுபிறப்பு பழிவாங்கல் கதைதான். அரசகுலத்தில் வாரிசு அரசியல் போட்டிதான் கதை. இக்கதையில் நாயகன் இருப்பதிலேயே பலவீனமானவ...

எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

படம்
    பிகினிங் ஆப்டர் தி எண்ட் மாங்கா காமிக்ஸ் 200 அத்தியாயங்கள். குன்மாங்கா.காம் இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏ...

சிந்தியா என்றால் என்ன? மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
        சீனர்களும் இந்தியர்களும் ஒன்றாக இணைந்தால், அவர்களை சிந்தியர்கள் என அழைக்கலாம். சிங்கப்பூரில் தம்பதிகளாக வாழும் சீன இந்தியர்களை சிந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகளைக் கூற தனி யூட்யூப் சேனல்களே உள்ளன. சீனாவும் இந்தியாவும் நட்புணர்வோடு இருந்தால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதை மழைப்பேச்சு பாட்காஸ்ட் உங்களுக்கு விவரிக்கிறது.காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ஆங்கில நூலை எழுதியிருக்கிறார்.  சீனாவின் ஆதரவாளர் என தூற்றப்பட்டாலும், அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் பல நூறு கி.மீ எல்லை நிலத்தை இழந்துவிட்டை அதைப்பற்றி பேசாமல் அமைதி காப்பது அயோக்கியத்தனம். அதை காசு வாங்கிய ஊடகங்கள் வாலைக் குழைத்துக்கொண்டு ஏதும் கூறாது. ஆனால், நட்புணர்வோடு இருந்தால் கிடைக்கும் பலாபலன்களைப் பற்றி பேசினால் உடனே தேசதுரோக பட்டம், இழிவு, அவதூறு கிடைக்கும். நூல், இந்தியா சீனாவுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை முன்வைக்கிறது.        https://open.substack.com/pub/anbarasushanmugam/p/0d5?r=396v6&utm_campaign=post&utm_medi...

ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

படம்
      நேர்காணல் பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி? அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும். கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமந...

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர்! - இந்தியா - சீனா அரசியல் கொள்கைகள் ஒப்பீடு

படம்
          சீனா, அமெரிக்காவை விலக்கி முதலிடத்தை அடையும் முயற்சியில் உள்ளது. அதன் ஒழுக்கம், கட்சி கட்டுப்பாடு, அர்ப்பணிப்பான உழைப்பு குலையாத பட்சத்தில் அதை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த மேற்கு நாடுகள் முயல்கின்றன. அவர்களின் உள்மன ஆசை அப்படி இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இருநாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம். சீனாவில் மக்கள் குடியரசு ஆட்சியில் உள்ளது. இதிலுள்ள அதிகாரிகள், பிரதமர், அதிபர் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கு ஒரே கட்சிதான் உள்ளது. அந்த கட்சிதான் அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கான நிர்வாக கமிட்டியில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு இடம் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கூறவேண்டுமெனில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக உள்ளது. இதன் தாய் சங்கமாக இந்து தீவிரவாத அமைப்பு, ஆர்எஸ்எஸ் உள்ளது. கலாசார அமைப்பு என பிரசாரம் செய்துகொள்ளும் இந்த அமைப்பே, இந்தியாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவரான மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. உறுப்பினர்கள் அடிப்ப...

ஜிம் பாடல்கள்!

  ஜிம் பாடல்கள் மோசமான மனிதர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேசும் அவதூறுகளை கேட்பதும் வாழ்க்கையை சலிப்படையச் செய்வன. ஆனால், நூல்களும், இசையும் வாழ்க்கையை வளமாக்கி பொலிவடையச் செய்வன. எனவே, இசையைக் கேட்போம். மேற்கத்திய சுதந்திரமான இசை பரிந்துரை. பாடல்களைப் பற்றிய விளக்கம் தேவையில்லை. கேளுங்கள். உங்களுக்கே புரிபடும். உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் மனத்தடைகள், தயக்கம் உடைந்து பயிற்சி முழுமையடைய இப்பாடல்கள் கொஞ்சமேனும் உதவக்கூடும்.  LA ROMANIA BAD BUUNY FEAT EL ALFA DANCE MONKEY POP BALLAD MOTIVATION NORMANI GOOD AS HELL LIZZO DONT START NOW  DUA LIPA VOSSI BOP STORMZY CON ALTURA ROSALIA, J BALVIN FEAT EL GUINCHO TILL I COLAPSE EMINEM WAKE ME UP AVICII EYE OF THE TIGER SURVIVOR

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் ...

ஜாலி திருவிழாக்கள்! - கால்களால் போட்டியாளரின் காலைத் தோற்கடித்தால் வின்னர்!

படம்
  வீடு, ஆபீஸ் என உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தருபவை திருவிழாக்கள்தான். உறவுகள்,நட்புகள் ஒன்றுசேர்வதோடு, ஆடியும் பாடியும் மகிழ்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது உடலுக்கும் மனதையும் உற்சாக டானிக்.  அப்படிப்பட்ட சில வினோத விழாக்களில் சில.   லா டொமாட்டினோ (ஸ்பெயின்) ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழாவை உலகமே இன்று கவனிக்கத் தொடங்கிவிட்டது. வாலென்சியா அருகிலுள்ள புனோல் கிராமத்தில் தக்காளி கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. உடனே பாய்ந்து தக்காளியைக் கையில் எடுக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதற்காகவே ஸ்பெயினில் குவிகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தொடங்கும் இவ்விழா பெரும் புகழ்பெற்றது.  பர்னிங் மேன் (அமெரிக்கா) அமெரிக்காவின் ரெனோ நகருக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பர்னிங் மேன் திருவிழா நடைபெறுகிறது. இருவாரங்கள் நடைபெறும் திருவிழாவுக்கு உலக நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  குவிகின்றனர்.  இதில் பல்வேறு கலைஞர்கள், புதுமையான கலைப் படைப்ப...