இடுகைகள்

வலிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையை

ஜாலி திருவிழாக்கள்! - கால்களால் போட்டியாளரின் காலைத் தோற்கடித்தால் வின்னர்!

படம்
  வீடு, ஆபீஸ் என உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தருபவை திருவிழாக்கள்தான். உறவுகள்,நட்புகள் ஒன்றுசேர்வதோடு, ஆடியும் பாடியும் மகிழ்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது உடலுக்கும் மனதையும் உற்சாக டானிக்.  அப்படிப்பட்ட சில வினோத விழாக்களில் சில.   லா டொமாட்டினோ (ஸ்பெயின்) ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழாவை உலகமே இன்று கவனிக்கத் தொடங்கிவிட்டது. வாலென்சியா அருகிலுள்ள புனோல் கிராமத்தில் தக்காளி கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. உடனே பாய்ந்து தக்காளியைக் கையில் எடுக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதற்காகவே ஸ்பெயினில் குவிகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தொடங்கும் இவ்விழா பெரும் புகழ்பெற்றது.  பர்னிங் மேன் (அமெரிக்கா) அமெரிக்காவின் ரெனோ நகருக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பர்னிங் மேன் திருவிழா நடைபெறுகிறது. இருவாரங்கள் நடைபெறும் திருவிழாவுக்கு உலக நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  குவிகின்றனர்.  இதில் பல்வேறு கலைஞர்கள், புதுமையான கலைப் படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைக்கின்