இடுகைகள்

டாடா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்க

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

படம்
  இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.  இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை

தலித்துகளின் அரசியல் விடுதலை பற்றி பேசும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
                  புத்தக அறிமுகம் 1232 கி . மீ வினோத் காப்ரி ஹார்பர் கோலின்ஸ் ரூ .295 இந்த நூலில் மத்திய அரசு செய்த முட்டாள்தனத்தால் அதன் இடம்பெயர் குடிமக்கள் எப்படி சாலையில் நடந்து வரும் அவலம் நடைபெற்றது என்பதை துல்லியமாக விவரிக்கிறது . திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி இந்த நூலை எழுதியுள்ளார் . ரிச்சர் வைசர் ஹேப்பியர் வில்லியம் க்ரீன் ஹாச்செட் ரூ .599 அனைத்து நாடுகளிலும் பாராட்டப்படுபவர்களு்ம் , தூற்றப்படுபவர்களும் முதலீட்டாளர்கள்தான் . ஒருவகையில் சரியான முதலீட்டை செய்து லாபத்தை எடுத்துக்ளகொண்டு மாயமாகி பிற நாடுகளுக்கு ஓடும் இவர்கள் புத்திசாலிகள் . எழுத்தாளர் 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியவர் . இவர் தனது அனுபவங்களையும் , எந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் எழுதியுள்ளார் . டாடா ஸ்டோரிஸ் ஹரீஷ் பட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் டாடா குழுமத்தில் உள்ள தனிநபர்கள் , நிகழ்ச்சிகள் , இடங்கள் பற்றிய பல்வேறு சிறு கதைகளைக் கொண்ட நூல் இது . கெட் அவுட் ஆப் யுவர் ஓன் வே மார்க் கௌல்ஸ்டன் அண்ட் ப

தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்

படம்
                    நந்தினி பிரமள் எக்சிகியூட்டிவ் டைரக்டர் , பிரமள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது . இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம் . இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் . மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது . சாரிடான் , ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான் . அபோட் , கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார் . பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார் . இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார் . இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது . தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர் . அடுத்து மாஸ்க் , சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர் . நுவ்ருதி ராய் இந்தியத் தலைவர் , இன்டெல் நுவருதியை பல்வேறு சவால்கள

பெருந்தொற்று காலத்தில் தொழிலதிபர்கள் என்ன நிர்வாகத்திட்டங்களை பின்பற்றினார்கள்? - வணிக மந்திரம் - டாடா, டாபர், நெஸ்லே

படம்
                வணிக மந்திரம் சி.கே. வெங்கட்ராமன் தலைவர், தி டைட்டன் கம்பெனி எனக்கு இப்போதைக்கு இருக்கும் பிரச்னை, மக்கள் பெருந்தொற்று காலத்தில் எப்படி பண்டிகைகளை கொண்டாடுவார்கள். உடைகளை உடுத்துவார்கள் என்பதுதான். எங்களது விற்பனைக்குழு, புதிய வழியில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்று உணவகங்களுக்கு செல்வது, திருமண பார்ட்டிகள் ஆகியவை நடைபெறுவது அரிதாகிவிட்டது. இன்று வீட்டில் பணியாற்றும் மக்களுக்கு நாம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு யோசித்து வருகிறோம். அண்மையில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளுக்காக உணவகம் ஒன்றை உரு்வாக்கினர். இதில் மனைவி சர்வராகவும், கணவர் சமையற்கலைஞராகவும் இருந்தனர். ஹோட்டலுக்கு உண்டான அனைத்து விஷயங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. உண்மையில் இதுபோன்ற சூழலை நாம் வீட்டில் உருவாக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.  டிஜிட்டலுக்கு மாறுவோம்! suresh narayanan சுரேஷ் நாராயணன், தலைவர், நெஸ்லே இந்தியா பெருந்தொற்று காலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை பெருமளவு மாற்றியுள்ளது. இன்று மக்கள் நான்கு சு

இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

படம்
    சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா? இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப். சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை. இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும். இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லற

டாடா பொருட்களின் விற்பனையை ஏறுமுகமாக்கி சாதனை செய்த பெண்மணி! - ரிச்சா அரோரா, டாடா

படம்
    ரிச்சா அரோரா, டாடா ரிச்சா அரோரா டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்(பேக்கேஜ் புட்ஸ்), இயக்குநர். 2014ஆம் ஆண்டு டாடா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார் ரிச்சார். இவருக்கு விற்பனைத்துறையில் 30 ஆண்டு அனுபவம் உண்டு. இதற்கு முன்னர் பிரிட்டானியா, விப்ரோ, மெக்பான் புட்ஸ், பல்சாரா, எப்சிபி உல்கா ஆகிய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். பேக்கேஜில் வரும் பல்வேறு பொருட்களை உருவாக்குவது, விற்பனை உத்திகள், விற்பனை என அனைத்துமே ரிச்சாவின் திட்டமிடலில்தான் உள்ளது. இதன்காரணமாகவே டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்கள் சிறப்பாக விற்பனையாகின்றன. லண்டன் பொருளாதார பள்ளியில் படித்திருக்கிறார். அகமதாபாத்திலுள்ள ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தவர். பொருளாதார பட்டதாரி. இவற்றையெல்லம் விட சிறந்த புகைப்படக்காரர். இந்திய கலைக்கண்காட்சியில் ரிச்சா தான் எடுத்த புகைப்படங்களை தனியாகவே காட்சிக்கு வைத்திருந்தார்.   இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள், பிரிட்டானியா, விப்ரோ, பல்சாரா, எப்சிபி உல்கா