இடுகைகள்

இங்கிலாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சி சார்ந்த அக்கறை கூடியிருக்கிறது - ஜோ ரூட், கிரிக்கெட் வீரர்

படம்
  ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? நான் ஜிம்மில் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. வேகம், ஆற்றல் என இரண்டு விஷயங்களுக்காக அங்கு நாற்பது நிமிடங்களை செலவழிப்பேன். அவ்வளவுதான். அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவழிப்பது எனக்கு பிடிக்காது. இளம் வயதில் முதுகில் சில பிரச்னைகள் இருந்ததால், எடைகளை தூக்குவதில் சில தடுமாற்றங்கள் இருந்தன. குறைவான எடைகளை தூக்கி மெதுவாகவே எனது உடலை மெல்ல மேம்படுத்த தொடங்கினேன். நான் கடைபிடித்த நுட்பங்கள் போதுமான நம்பிக்கை தந்தது என்று கூற முடியாது. போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை செய்தீர்களா? முதலில் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் நான் அக்கறைப்ப்படவில்லை. கிரிக்கெட் என்பது திறன் சார்ந்த விளையாட்டு. அங்கு அதிக ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்கவேண்டும். அவ்வளவுதான். இப்படித்தான் தொடர்களில் அதிக ரன்களை எடுத்தேன். ஆனால் இடையில் திடீரென ரன்களை அடிக்க முடியாமல் போய்விடும். பிறகுதான் பயிற்சியோடு ஊட்டச்சத்துகள் பற்றியும் அக்கறை செலுத்த தொடங்கினேன். அந்த வகையில் எங்கள் அணியில் உள்ள ஊட்டச்சத

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்கு, 2.4 பில்லி

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர

ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகியதைப்பற்றி டயானா கவலைப்பட்டிருப்பார்! - டினா ப்ரௌன், பத்திரிகையாளர்

படம்
               டினா ப்ரௌன் ஆங்கில அமெரிக்க பத்திரிகையாளர் டினா, டாட்லர், வேனிடி ஃபேர், தி நியூயார்க்கர், நியூஸ்வீக், தி டெய்லி பீஸ்ட் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 68 ஆகிறது. இவரது கணவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான சர் ஹெரால்ட் ஈவன்ஸ்.  2007ஆம் ஆண்டு தி டயானா க்ரானிக்கல்ஸ் என்ற நூலை எழுதினார். தற்போது அதன் தொடர்ச்சியாக தி பேலஸ் பேப்பர் என்ற நூலை எழுதியுள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா இறந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவுகிறது. அவரிடம் பேசினோம். இப்போது டயானா உயிரோடு இருந்தால் அவர் எந்த மாதிரி செயல்பட்டிருப்பார்? அவர் அரசகுடும்பத்தில் இணைந்துதான் இருப்பார் என நினைக்கிறேன். ஹாரி, மேகன் போல பிரிந்திருக்க மாட்டார். அரச குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பார். பிரிந்துசெல்லாமல் ஒன்றாக இருக்க முயல்வார். தனது அடையாளத்தை கைவிட்டு கென்சிங்கன் மாளிகையை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். டயானாவுக்கு அவரது மருமகள் கேட்டிற்கும் நல்ல உறவு இருந்திருக்கும் என பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இதில் நான் முரண்படுகிறேன். அவர் பிறரோடு போட்டிபோடு

இங்கிலாந்தில் அழிந்துவரும் ஹாசல் டோர்மவுசைக் காப்பாற்ற முயலும் ஆராய்ச்சியாளர்!

படம்
  இயான் வொய்ட் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்  இயான் வொய்ட்  இங்கிலாந்தில் உள்ள டோர்மைஸ் என்ற சிறு விலங்கு அழிவின் விளிம்பில் உள்ளது. ஏற்கெனவே அங்குள்ள 17 கவுண்டியில் இந்த விலங்கு அழிந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு இயான் வொய்டின் பீப்புள் ட்ரஸ்ட் ஃபார் என்டேஞ்சர்ட் ஸ்பீசிஸ் என்ற அமைப்பு, டோர்மைஸைக் காப்பாற்ற முயன்று வருகிறது.  டோர்மைஸ் சிறு விலங்கினத்தை காப்பாற்ற என்ன செய்து வருகிறீர்கள்? தேசிய டோர்மவுஸ் கண்காணிப்பு நிகழ்ச்சியை  நான் உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறேன். இந்த சிறு விலங்கின் சூழல், இயற்கையில் இதன் பங்கு, இனப்பெருக்கம் பற்றியும் ஆராய்ந்து வருகிறேன்.  பிறர் டோர்மவுசைப் பாதுகாக்க ஒத்துழைக்கிறார்களா? அது சோகமான விஷயம்தான். இப்படி எலியை ஒத்த விலங்கு அழிந்து வருகிறது என்றால் பலரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2000ஆம் ஆண்டு ஹாசல் டோர்மவுஸ் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துவிட்டது. பிறகுதான் அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிறு விலங்கினத்தை பாதுகாக்க முனைந்தன.  என்ன சவால்களை சந்தித்தீர்கள்? வாழிடங்களே மிகவும் குறைந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் சாலைகள், ரயில் நிலையங்கள

வெப்பநிலை அதிகரித்தால் அதற்கேற்ப வாழ்வை திட்டமிடவேண்டும் - ஃபிரீடெரிக் ஓட்டோ

படம்
 ஃபிரீடெரிக் ஓட்டோ சூழல் அறிவியலாளர், இம்பீரியல் கல்லூரி (காலநிலை மாற்றம் - சூழல்) நீங்கள் செய்து வரும் ஆராய்ச்சியின் அடிப்படை என்ன? உலகம் முழுக்க உள்ள இயற்கைச்சூழலை மனிதர்கள் செய்யும் செயல்பாடுகள் எப்படி மாற்றுகின்றன என்பதைத்தான் நான் ஆராய்ந்து வருகிறேன்.  இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சிஸயசை தாண்டியுள்ளதை செய்தியில் அறிந்திருப்பீர்கள். இங்குள்ள சாலை, ரயில்பாதை அனைத்துமே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாண்டாதபடி திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படி இருக்க முடியாது. அதற்கேற்ப நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடலாம்.  வெப்பஅலை பற்றி உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது? உலகம் முழுக்க நாங்கள் வெப்ப அலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். வெப்ப அலை இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இதில் மனிதர்களின் தூண்டுதல் அதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. குறிப்பாக கரிம எரிபொருட்களை நாம் பயன்படுத்தி வருவது வெப்ப அலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டத்தில் அதிகரிக்க முக்கியமான க

புதைப்படிவ பொருட்களை அகழ்ந்து எடுத்தும் அங்கீகாரம் கிடைக்காத பெண்மணி!

படம்
  மேரி அன்னிங் அங்கீகரிக்கப்படாத புதைப்படிம சேகரிப்பாளர்! மேரி அன்னிங், இங்கிலாந்தைச் சேர்ந்த புதைப்படிம சேகரிப்பாளர். விற்பனைக்காக, கடல் சார்ந்த ஆயிரக்கணக்கான அரிய உயிரினங்களின் புதைப்படிமங்களைக் கண்டறிந்தார். முறையான கல்வி இல்லாதபோதும், சுய ஆர்வத்தால் புதைப்படிம அறிவை வளர்த்துக்கொண்டார். மேரியின் பல்வேறு புதைப்படிம கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், அவர் வாழும் காலத்தில் கிடைக்கவில்லை.  1799  இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லைம் ரெஜிஸ்(Lyme Regis) பகுதியில் பிறந்தார். தந்தை ரிச்சர்ட் ஆன்னிங்,தச்சு வேலைகளை செய்து வந்தார். மனைவி, மேரி மூர். பிறந்த 10 பிள்ளைகளில் மேரியும், ஜோசப் மட்டுமே நோய்களைத் தாங்கி வளர்ந்தனர்.  1811 மேரியின் தம்பி ஜோசப், புதைப் படிமங்களை சேகரிக்கும்போது இக்தியோசரஸ் விலங்கின் (Ichthyosaurus) மண்டையோட்டைக் கண்டுபிடித்தான். சில மாதங்களுக்குப் பிறகு மேரி அதன் மீதங்களை கண்டுபிடித்தார். தந்தை 1810ஆம் ஆண்டு இறந்துவிட, குடும்பத்திற்காக மேரி புதைப்படிம வணிகத்தில் இறங்கினார்.  1821 6.1 மீட்டர் நீளமுள்ள  இக்தியோசொரஸ் பிளாட்டிடன் (Ichthyosaurus platydon) என்ற கடல் உயிரின பு

மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

படம்
              மார்க் கார்னே Mark carney former central banker மார்க் கார்னே என்றால் என்ன ? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே ? உண்மைதான் . 2008 ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார் . 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 1694 ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான் . 2020 ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் . வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார் .    நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன? நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறேன். பேங்க் ஆஃப் இங்கிலாந்திலு

வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

படம்
  சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.  2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது.  மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம்.  எப்படி பரவுகிறது? நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக

சிரச்சேதம் செய்யப்பட்ட மன்னர் சார்லஸ்! - யுனைடெட் கிங்டம்

படம்
  யுனைடெட் கிங்டம் இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. சுருக்கமாக, யுகே. இங்கிலாந்து என்றும் கூட கூறலாம். 1707ஆம் ஆண்டுதான் இங்கிலாந்திற்கு முதன்முதலில் யுனைடெட் கிங்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி வைக்கப்பட்ட இப்பெயருக்கு முக்கியமான காரணம் உண்டு. இந்த தேதியில்தான், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தோடு ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றமும் இணைக்கப்பட்டது. இதற்கு ஆக்ட்ஸ் ஆப் யூனியன் என்று பெயர்.  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளும் 1706, 1707 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு கொள்கைகளை வெளியிட்டு நாடாளுமன்றத்தை ஒன்றாக இணைத்தன. 1603ஆம்ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, முதலாம் எலிசபெத் ராணி மறைந்தார். அந்த ஆண்டு முதலே இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளின் நாடாளுமன்றமும் இணைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.  எலிசபெத் ராணிக்கு குழந்தை இல்லை. எனவே, ஸ்காட்லாந்து நாட்டிலிருந்த அவரது சகோதரர் ஆறாம் ஜேம்ஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளுக்கும் மன்னராக இருந்தார்.  1625ஆம் ஆண்டு ஜேம்ஸ் இறந்தபிறகு, அவரது

நான்சென்ஸ் இலக்கிய எழுத்தாளர் லூயிஸ் கரோல்- 190qsa

படம்
  ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நாவல் எழுதிய எழுத்தாளர்தான் லூயிஸ் கரோல். இவர் தன்னுடைய இலக்கியப் படைப்பை நான்சென்ஸ் இலக்கியம் என்றுதான் கூறினார். 1832ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று சேஷையர் நகரில் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.  படிப்பு, வகுப்பில் முதலிடம் என்ற விஷயங்கள் எல்லாம் லூயிஸ் கரோலுக்கு இயல்பாகவே கைவந்த திறன். இவரின் இயற்பெயர், சார்லஸ் லுட்விட்ஜ் டாட்ஜ்சன். இலக்கியப் படைப்புகளை எழுத தேர்ந்தெடுத்த புனைப்பெயர்தான் லூயிஸ் கரோல்.  1852ஆம் ஆண்டு கணிதப் படிப்பில் பட்டம் பெற்றார். அதிலும் கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்காரர், கண்டுபிடிப்பாளர் என பல்வேறு விஷயங்கள் சார்லஸிடம் உண்டு.  1862ஆம் ஆண்டு ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதைகளை தனது நண்பர்களிடமும், குழந்தைகளிடமும் சொல்லி சந்தோஷப்படுத்தினார் சார்லஸ். பலருக்கும் அக்கதைகள் பிடித்திருக்க அக்கதைகளை தொகுத்து நூலாக எழுதினார். எழுதிய ஆண்டு 1865. உடனே இக்கதைகள் மக்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டன. எழுத்தாளர் லூயிசும் பிரபலமானார். இக்கதைகளை இங்கிலாந்து ராணி விக்டோரியாவும் படித்து பரவசப்பட்டார்.  வெற்றி பெற்றாலும் கூட

காலனித்துவம், அகதிகளின் பிரச்னை பற்றிப் பேசிய எழுத்தாளர்! - இலக்கிய நோபல் 2021

படம்
  தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா என்ற எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியுள்ளனர்.  எந்த சமரசமும் செய்யாமல் அகதிகளின் பிரச்னைகளையும் காலனித்துவ பாதிப்புகளையும் அப்துல்ரசாக் பதிவு செய்துள்ளார் என நோபல் கமிட்டி கூறியுள்ளது.  குர்னா, தனது இருபது வயதிலிருந்து எழுத தொடங்கியுள்ளார். இதுவரை பத்து நாவல்களை பதிப்பித்துள்ளார். நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் பிரிட்டனுக்கு அகதியாக வந்து குடியேறியவர்.  1987இல் மெமரி ஆப் டிபார்ச்சர் என்ற நூலை முதலில் வெளியிட்டார். பிறகு 1990இல் பில்கிரிம்ஸ் வே என்ற நூலை வெளியிட்டார்.  அகதிகளின் பிரச்னைகள், இனவெறி, அடையாளம் சார்ந்த பிரச்னைகளை நூலில் பேசியுள்ளார் குர்னா.  1994ஆம் ஆண்டு பாரடைஸ் என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் உலகப்போரின்போது ஆப்பிரிக்கவில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிறது. இந்த நாவலை புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் வைத்திருந்தனர். இறுதியில் ஸ்காட்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் கெய்மன் புக்கர் பரிசை வென்றார்.  கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நான் எழுப்பிய கேள்விகள் புதிதானவை கிடையாது. மன்னர் ஆட்சி, மக்கள் இடம்பெய

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ