இடுகைகள்

இருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய் பல்கலைக்கழக உதவி

மனதின் இருளைப்பேசும் படம்- மனு - துரத்தும் துயரத்தின் தடம்!

படம்
மனு - தெலுங்கு இயக்கம் - பனிந்திரா நசரேட்டி ஒளிப்பதிவு - விஸ்வநாத் ரெட்டி இசை - நரேஷ் குமரன் கதைக்கரு: சொல்லமாட்டோம். கதையின் பாதையை வேண்டுமானால் சொல்லலாம். ஒரு பார். அங்கே ஒரு பெண் அமர்ந்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் பேச்சிலிருந்து ஆண், ஓவியர் என்று தெரிகிறது. அப்போது ஓவியரின் செய்கை அப்பெண்ணுக்கு எரிச்சலூட்ட அப்பெண் மதுவை அவரின் சட்டை மீது ஊற்றி விட்டு கோபமாக எழுந்து போகிறாள். பாரின் மூலையில் இருப்பவன், கையில் இருந்த தாளைப் படித்துவிட்டு ஆத்திரமுறுகிறான். அதில் அவன் பணத்தை கட்டாவிட்டால் இரண்டாவது சிறுநீரகமும் பிடுங்கப்படும் என்று எழுதியிருக்கிறது. பின் அப்பெண் கோபமாக நடந்துகொள்வதைப் பார்க்கிறான். மதுவைக்குடித்துவிட்டு மெல்ல எழுந்து அவளை பின் தொடர்கிறான். ஓவியர், பார் சர்வரிடம் மேலும் மது வாங்கி அருந்துகிறார். அப்போது அங்கு இன்னொரு வயதானவர் வருகிறார். தன் கையில் எதையோ ரசித்துப் பார்க்கிறார். திடீரென வாசல் பக்கம் பார்த்தால் மூவர் அந்த வயதானவரை வெறித்து பார்த்துவிட்டு அவரை நோக்கி வருகின்றனர். இதுபோதும்... காட்சிகளாக இவ்வளவு கூறினால் போதுமானது