இடுகைகள்

மரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1

படம்
    இன்செக்ட் டிடெக்டிவ் சீன தொடர் யூட்யூப் ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது. முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின். இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிற...

இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி

படம்
                      அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்? சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்...

குரங்கம்மை தொற்று!

படம்
        எம்பாக்ஸ் - குரங்கம்மை ஆப்பிரிக்காவில் மக்களைத் தாக்கி கொன்று கொண்டிருந்த எம்பாக்ஸ் இப்போது வெளிநாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. ஸ்வீடன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எம்பாக்ஸ் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்ட நோயாளிகள் இருவருமே ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் என மருத்துவர்கள் தகவல்களை அறியத் தருகிறார்கள். 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்ட அம்மை நோய் இது. டென்மார்க் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. குரங்கம்மை என்று கூறுவதில் இனம் சார்ந்த சிக்கல் எழ உலக சுகாதார அமைப்பு, மங்கி பாக்ஸ் என்பதை எம்பாக்ஸ் என அழைக்கலாம் என்று கூறியது. 1970ஆம் ஆண்டு, பத்து வயது சிறுவனுக்கு குரங்கம்மை தாக்கியது. அந்த சிறுவன் காங்கோ நாட்டை பூர்விகமாக கொண்டவன். முன்னெச்சரிக்கை குரங்கம்மை தாக்குதல் கொண்ட நாடுகளுக்கு செல்பவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களையும் விலங்குகளையும் பார்த்த உடனே பதறி விலகி இருக்கவேண்டும். காய்ச்சல், தோலில் அழற்சி இருந்தால் உடனே மருத்துவரை ...

காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

படம்
              காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.  தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...

அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்! அல்டிமேட் நோட் சீன டிராமா 34 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் 1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.  தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக்...

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவ...

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார...

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, ...

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ...

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன...

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகை...

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்ப...