இடுகைகள்

மரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்! அல்டிமேட் நோட் சீன டிராமா 34 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் 1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.  தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக் கொல்லும் வெறி

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாள

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிற

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வ

மயிலாப்பூர் டைம்ஸ்! - குடியால் கெட்ட வேலு சித்தப்பாவின் வாழ்க்கை!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் எதிர்பாராத மரணம் இதோ  இன்று காலையில்தான் அம்மாவிடம் பேசினேன். அவள் எப்போதும், தனக்கு நேர்ந்த அனுபவங்களை துல்லியமாக காட்சிப்பூர்வமாக விவரிப்பாள். தூங்கி எழுந்தபோது எப்படியிருந்தது, முகத்தின் இடது கண் எப்படி கண்ணாடியில் தெரிந்தது, இடதுகாலை எடுத்து வைக்கும்போது வீட்டின் தரை குளிர்ந்திருந்தது வரையில் சொல்லுவாள். ஆனால் இறப்பு என்பது யாரையும் மருட்டுவதுதான். இறப்புச்செய்தியை சொல்லும்போது, குரலில் ஆழ்ந்த அமைதி எப்படி பூக்கிறது என்று ஆய்வுதான் செய்யவேண்டும்.  அவள் சொன்னது வேலுச்சித்தப்பாவின் இறப்புச்செய்தியை. வேலு சித்தப்பாவைப் பொறுத்தவரை, அவருக்கு வாழ்க்கையில் மது பாட்டில்தான் எல்லாமே என்று ஆகி வெகுகாலமாகிவிட்டது. திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, அடித்து துரத்திவிட்டார். அவர் மனைவியும் தாய் வீட்டுக்கு சீராட்டு போய்விட்டார். இன்று அவரது மகனுக்கு 11 வயது. வேலை செய்வதே குடிப்பதற்குத்தான் என்று சொல்லுமளவு குடிநோயாளியாகிவிட்டார். இவருக்கு நேர்ந்த இறப்பை இங்கு பதிவிடும்போது, படிக்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்?  சிரோசிஸ். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோய்விட்டார்

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரட

பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  Fungus bread image -TOI உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா? உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன.  சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.  உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா? வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது!- ஜனவரி 11

படம்
  சார்லஸ்,பிரடெரிக் படம்: இந்து தமிழ் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டானதை எப்போதும் போல முந்திக்கொண்டு ஆனந்த விகடனின் அகஸ்டஸ் எழுதிவிட்டார். இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் ஒருமுறை அதனை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.  நூறாண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவரை புற்றுநோய் வந்தவர்கள் போலவே பார்ப்பார்கள். என்ன பாவம் பண்ணினியோ போச்சு உசுரு போச்சு என பாவப்பார்வை பார்த்து நொட்டுப் பேச்சு பேசுவார்கள். அவர்கள் பொய்யாக வருந்திய விஷயம் உண்மைதான்.  குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சில மாதங்களில் நோயாளி இறந்துபோய் கல்லறை வாசகங்களை தேடி பொறித்து விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நோயாளி உணவுக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிறைய ஆண்டுகள் வாழலாம்.  கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இப்படி இறப்புக்கு காரணம் என்பதை எட்வர்ட் ஆல்பெர்ட் ஷார்ப்பி ஹாபர் என்பவர் கண்டுபிடித்தார். இன்சுலின் என்ற வார்த்தையே இவரது உபயம்தான். 1921ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவர், கணையத்திலிருந்து

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

படம்
  ரொமான்டிக் ரொமான்டிக்  தெலுங்கு  இயக்குநர் அனில் பதூரி கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத்.  கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை.  படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள்.  ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள்.  படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை.  கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவ