இடுகைகள்

செரிமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

படம்
    டீ டாக்ஸ் உணவுகள் உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.   மாவுச்சத்து உணவு, வறுத

உடல் எடை குறைப்பில் ஆண்கள் எளிதாக வெற்றி பெறுவதற்கான காரணம்!

படம்
  ஆண்/ பெண் உடல் எடை வேறுபாடுகள் உடல் எடையைக் குறைப்பதில் உள்ள வேறுபாடுகள் ஆண், பெண் என இருவருக்குமே உடல் எடையைக் குறைப்பதில் நிறைய வேறுபாடுகள் உண்டு, என்ன வேறுபாடுகள் என அறிய நினைத்தால், ஆண், பெண் இருவரது உடலிலுள்ள ஹார்மோன்களைப் பார்க்கவேண்டும். ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உள்ளது. இதன் விளைவாக, அவனுக்கு உடலில் தசைகள் உருவாகின்றன. உடற்பயிற்சி, டயட், உணவுமுறை என வடிவமைத்து ஆண், பெண் என இருவருமே ஜிம்மில் பயிற்சிகளை செய்தாலும், ஆண்களுக்குத்தான் உடலில் வேகமாக எடை குறையும். பெண்களோடு ஒப்பிட்டால் இந்த மாற்றம் வேகமாக இருக்கும். காரணம், உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசையிலுள்ள ஆற்றல் எரிக்கப்படுவதேயாகும். ஆனால் பெண்களுக்கு எடை குறைப்பு சற்று கடினமாகவே இருக்கும். இதற்கு, அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணம். இந்த ஹார்மோன், இயற்கையில் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு பால் சுரக்க வசதியாக மார்பு, இடுப்பு, ஆகிய இடங்களில் கொழுப்பை சேமிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பி நிற்கும்போது, வளர்சிதை மாற்றம் மாறுதல்களுக்கு உட்பட்டு ஆண்களைப் போல பெண்களின் வயிற்றில் கொ

உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? - அலசல்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பது என்பது, மிகப்பெரிய வணிக சேவையாக மாறிவிட்டது. உண்மையில் உடலின் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதாக என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என ஏராளமான நூல்கள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழில் பா.ராகவன் எழுதியுள்ள பேலியோ டயட் இந்த வகையில் முக்கியமான நூல். ஒருவரின் உடல் எடையைக் குறைப்பதில் அவரது மரபணுக்களுக்கு முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர் பா.ராகவன், தனது பேலியோ டயட் அனுபவங்களை குங்குமத்தில் தொடராக எழுதினார். அதுதான் பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலானது. பாராவுக்கு, பேலியோ டயட் வேலை செய்தது என்றால் அதேபோல இன்னொருவருக்கு அப்படியே அதே முறையில் வேலை செய்யும் என்று கூறமுடியாது. உடல் மிக சிக்கலான இயந்திரம். குறிப்பிட்ட காலத்திற்கு டயட் முறை வேலை செய்யும்தான். ஆனால் பிறகு உடல் மீண்டும் தனது இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். என்ன பிரச்னை? உடல் எடை குறைப்பதில் ஒருவரின் அடிவயிற்றுக் கொழுப்பு மட்டுமே கரைகிறது என மேலோட்டமாக புரிந்துகொள்வது தவறு. நம்மில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பது, உணவுப்பொருட்களை அதிகமாக சாப

செரிமானத்தின் வேதியியல் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர் - வில்லியம் குஹ்னே

படம்
  வில்ஹெம் குஹ்னே ( wilhelm kuhne) வில்ஹெம், 1837ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.  கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் வேதியியல், உடல் அமைப்பு, நரம்பியல் பற்றிய பாடங்களைப் படித்து தேறினார். பட்டதாரியான பிறகு தவளையில் ஏற்படும் நீரிழிவு பற்றி செய்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார்.  ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்து உடலியல் பற்றிய பாடங்களைக் கற்றார். 1871ஆம் ஆண்டு ஹெய்டெல்பர்க் பல்கலையின் தலைவராக ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதவியேற்கும் முன்னரே, வில்ஹெம் உடலியல் பாடங்களைக் கற்றுவிட்டார். இப்பல்கலையில் வில்ஹெம் சேர்ந்தபிறகு, தசைகள், நரம்புகள் பற்றி கவனம் எடுத்து படித்தார். குறிப்பாக கண் நரம்புகள்.  கூடுதலாக, செரிமானத்தின் வேதியியல் பற்றியும் ஆய்வுகளைச் செய்தார். இதில்தான் ட்ரைப்ஸின் எனும் புரத என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1899ஆம் ஆண்டு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் பல்கலையில்தான் இருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் காலமானார்.  the biology book big ideas simply explained book

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

படம்
                    என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ? என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும். என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம். மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும். டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லல

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

வயிற்றுக்குள் நுண்ணுயிரிகள் எப்படி வருகின்றன?

படம்
              வயிற்றுக்குள் பிரளயம் ! ஒருவரின் வயிற்றுக்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . தினசரி வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் நடத்த நுண்ணுயிரிகள் உதவுகின்றன . மனித உடலில் முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்றால் வயிற்றில் மட்டும் முப்பத்து ஒன்பது டிரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . இதில் வைரஸ் , பாக்டீரியா , பூஞ்சை ஆகியவை உள்ளடங்கும் . மிகச்சிறியவை எ்ன்பதால் உடல் எடையில் பாதிதான் வரும் . ஆனால் இதன் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது . ஒவ்வொரு செல்களிலும் இருபது முதல் இருபத்தைந்தாயிரம் டிஎன்ஏக்கள் இதில் உள்ளன . நுண்ணுயிரிகளை இதோடு ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகம் . நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி வேகம் அதிகம் . மரபணுக்களை மாற்றிக்கொண்டு தனக்கு தேவையான செல்களில் புகுந்துகொண்டு செயல்படும் வேகம் இவற்றுக்கு அதிகம் . மனிதர்களின் உ

வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு. வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது. காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும்

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி 

மது, மட்டன் கொண்ட டின்னருக்குப் பிறகு?

படம்
கிறிஸ்துமஸ் டின்னர் சாப்பிட்டால் என்னாகும்? ஷாம்பெய்ன், விஸ்கி, ரம், பிளம் கேக்குகள், பிரியாணி என கலந்துகட்டி அடித்திருப்பீர்கள். இதனால் வயிற்றுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தகொள்ள ஆசையா? இதோ.. 5 நிமிடங்கள் மது, உங்கள் ரத்தத்தில் தேளின் விஷம் போல வேகமாக ஏறும். முதல் சிப்பில் இந்த மாற்றம். பெரும்பாலும் மதுவை சிறுகுடல் ஏற்றுக்கொள்ளும் பின்னரே அவை வயிற்றுக்குள் சேகரமாகும். மது ரத்தசெல்களின் செயல்திறனை குறைக்கின்றன. இதனால் வயிறு மெல்ல சூடாகிறது. ஒரே நாளில் கேக்,பிரியாணி, மது என வெளுப்பது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. ஆனால் என்ன கொண்டாட்டம் என்பதே பெரும்பாலும் சாப்பாடுதானே? 20 நிமிடங்கள் வயிற்றின் கொள்ளளவு என்பது ஒரு லிட்டர்தான். எனவே வெறித்தனமாக பஃபே விருந்தில் வேட்டையாடி, மாஸா குடித்து தீர்த்தாலும் மூத்திரம் முந்திக்கொண்டு வந்துவிடும். ஒருமணி நேரத்திற்கு ஒரு லிட்டம் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. இதுபோன்ற மொடாக்குடி விருந்துகளில் ஹரி படத்தில் பிரியன் கேமரா சுற்றுவது போல வேகமாக நடைபெறும். எனவே மூச்சு வாங்கியபடி வெஸ்டர்ன் கக்கூசில் குடலை கழுவ வேண்டி இருக்க

சாப்பிட்டபிறகு உடனே குளித்தால் ஆபத்தா? - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்தபிறகு குளிக்க வேண்டுமா? நாம் அப்படி நினைத்து வருகிறோம். ஆனால் அது தேவையில்லை என்று பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் கூறி வருகின்றன. 1960ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், இதுபற்றிய நமது கருத்து தவறு என்று கூறியது. இக்காலகட்டத்தில் நீச்சல் வீரர்களுக்கு பல்வேறு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்மூலம், அவர்களின் உடல்நலனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆராய்ந்தனர். ஆனால் உடல்நலன் பாதிப்பிற்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிரூபணமானது. 2005, 2011 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும் இதனை நிரூபித்தன. எனவே சாப்பிட்டபிறகு ஒரு மணிநேரம் காத்திருந்து குளிக்க வேண்டியதிலை. அதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிடுங்கள். மேற்சொன்ன ஆராய்ச்சிகளைப் படிக்க வேண்டிய தொல்லை மிச்சம் பாருங்கள். நன்றி: பிபிசி

இனிப்பு சோளம் செரிமானம் ஆவதில்லை ஏன்

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி இனிப்பு சோளத்தை சாப்பிட்டால் அது ஜீரணமாக தாமதம் ஆவது ஏன்? பீச்சில் சோளம் வாங்கித் தின்று செரிமானம் ஆகாமல் இப்படியொரு கேள்வியா? எதுவாக இருந்தாலும் சரி அறிவியலாக பார்ப்போம். சோளம் சிறந்த உணவு. எப்படி என்றால் அதில் மாவச்சத்து அதிகம். ஆனால் செரிமானத்திற்கு பிரச்னை வருவது அதிலுள்ள செல்லுலோஸால்தான். இதனை செரிமானத்திற்காக உடைப்பது மிக கடினம். சரி எதற்குங்க பிரச்னை முழுங்கிடுவோம் என்று முழுங்கினாலும் சில சோள பற்கள் வயிற்றுக்குள் கிடக்கும். அதாவது செரித்து வெளியே வர நேரம் எடுக்கும். நீங்கள் சாதாரணமாக சோளத்தை சாப்பிட்டாலும் அதில் செரிமானமாகி வருவது முழுக்க அரைபட்டு என்ற விதம் மிக குறைவுதான். நன்றி: பிபிசி

சூயிங்கம் உடலில் தங்கி விடுமா?

படம்
பிபிசி சூயிங்கம் நம் உடலில் தங்கிவிடுவது உண்மையா? நிச்சயம் இல்லை. பிளாஸ்டிக், சோயா ஆகிய பொருட்களிலான சூயிங்கம் நிச்சயம் வயிற்றுக்குள் போனால் செரிக்காது. ஆனால் அது வயிற்றுக்குள் அப்படி இருக்க முடியாது. காரணம், நம் செரிமான அமைப்பு அப்படி. மூன்று நாட்களுக்குள் மலம் வழியாக வெளியே வந்துவிடும். அதுதான் சூயிங்கம்மின் லிமிட்.  நன்றி: பிபிசி