இடுகைகள்

இளையராஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்

படம்
          எழுத்தாளர்  ஜெயமோகன்   இனிய தோழர் இரா . முருகானந்தம் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன . கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் . சேலம் கல்லாங்குத்து பஜார் , திண்டுக்கல் - பழநி நடைபாதை , சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன . நிருபர் வெ . நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது . அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார் . என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன் . விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை , புதுவித புனைவாக ஈர்த்தது . வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது . தீராத பகல் , தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது . குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர் , நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும் . இந்திய நிலப்பரப்பு , மனிதர்கள் , புழுதி , நீர் , உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து . பேச்சு மற