இடுகைகள்

பெருநகரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரான சிந்தனையோட்டம் கொண்டவரால் திருத்தப்பட்ட கட்டுரை- வெப்பஅலை

படம்
 வெப்ப அலை காற்றின் வெப்பநிலை, மனிதர்களின் உடல்நலனை பாதிக்கும் விதமாக மாறுவதை வெப்ப அலை என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள இயல்பான வெப்பநிலையை விட கூடுதல் வெப்பநிலை இருந்தால் அதை வெப்பஅலை எனலாம். சில நாடுகளில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றையும் வெப்ப அலையை மதிப்பிட பயன்படுத்துகின்றனர்.  சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு மேல் உள்ள வெப்பநிலை; மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸிற்கும் மேல் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை மதிப்பிட்டு, அச்சூழலை வெப்ப அலை என வானிலையாளர்கள் அறிவிக்கின்றனர்.  இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்ஸியஸ் தொடங்கி 6.4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்தால், அதனை வெப்பஅலை (Heatwave) எனலாம். இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையையும் தாண்டிச் சென்றால், அது தீவிர வெப்ப அலை (Severe Heatwave) ஆகும்.  இச்சிறு கட்டுரைக்கான படம் சீரான சிந்தனையோட்டம் இல்லாதவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.. நன்றி - திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு 

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு,...

கழிவுநீர் சுத்திகரிப்பு

படம்
  கழிவுநீர் சுத்திகரிப்பு உலகெங்கும் தினசரி பல லட்சம் லிட்டர் கழிவு நீர் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதோடு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு தனி. இப்படி ஒன்றாக கலக்கும் கழிவுநீரில் மலக்கழிவுடன் ஆபத்தான வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளும் இருக்கும். எனவே, கழிவுநீரை இதற்கென தனி நிலையம் அமைத்து அரசு சுத்திகரித்து அதனை  நன்னீராக்கி வெளியேற்றுகிறது. இதில் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது. கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதால் நீர் தட்டுப்பாட்டின் அளவு குறைகிறது. உயிரியல் மற்றும் வேதியியல் முறையில் கழிவுநீரை பல்வேறு கட்டமாக சுத்திகரிக்கிறார்கள். இந்த முறையில் கழிவுநீரிலுள்ள திடக்கழிவுகளை அகற்றும் முறைக்கு செடிமென்டேஷன் (sedimentation)என்று பெயர்.  கழிவுநீரை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் உலர்ந்த திடக்கழிவுக்கு ஸ்லஜ் கேக் (Sludge cake)என்று பெயர். இதனை தாவரங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கான உரமாக பயன்படுத்துகின்றனர். தகவல் super science encyclopedia book pinterest