பொதுமுடக்க காலத்தில் வாசிக்கப்பட்ட முக்கியமான நூல்கள்! - வாசிக்கலாம் வாங்க
வேகம் பிடிக்கும் வாசிப்பு கொரானோ காலத்தில் மக்களின் வாசிப்பு நேரம் 9 மணி நேரம் முதல் பதினாறு மணி நேரம் வரை கூடியுள்ளது என நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது . பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்களின் வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக மாற்றியது புத்தகங்கள்தான் . இவைதான் , மக்களுக்கு உண்மையைத் தேடும் பயணத்திற்கு துணையாக நின்றன . அரசியல் சூழ்நிலை தடுமாற்றம் , நோய்ப்பரவல் , மரணம் , பொருளாதார பிரச்னைகள் என நாடு கடும் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்துள்ளது . இப்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது . மேற்கு நாடுகளிலும் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . வயது வந்தோருக்கான கட்டுரைகளின் மூலமாக கிடைக்கநும் வருமானம் அமேஸானில் 22. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது . சுய முன்னேற்றம் , வாழ்க்கை வரலாறு , ஆன்மிகம் , வரலாறு ஆகிய துறைகளும் மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன . இப்படி வாசிக்கப்பட்ட நூல்களில் சிலவற்றைப் பார்ப்போம் . அன்ஃபினிஸ்டு எ மெமோர் இப்போது அதிகம் விற்றுவரும் சுயசரிதையாகவும் நியூயார்க் டைம்ஸ் விற்பனைப்பட்டிய