இடுகைகள்

கம்யூனிஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்

படம்
      அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள் மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில்  செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன...

மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

படம்
  மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ சவுத் விஷன் புக்ஸ் தமிழில் எஸ் இந்திரன் ப.127 இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது. மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்த...

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுல...

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல...