இடுகைகள்

இந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் என்னோடு போட்டியிட்டு மேம்படுத்திக்கொள்ள முயல்கிறேன் - ஷனாயா கபூர், இந்தி திரைப்பட நடிகை

படம்
  ஷனாயா கபூர் ஷனாயா கபூர் இந்தி திரைப்பட நடிகை கரண் ஜோகரின் இந்தி படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது நடிகை ஆகியிருக்கிறார். 23 வயதில் அவர் பேசும் விஷயங்கள் சற்று ஆச்சரியமாகவே இருக்கின்றன. ஷனாயா என்பவர் தனிப்பட்ட மனிதராக எப்படி?   என்னுடைய ஆளுமை என்பது வேலையை அடிப்படையாக கொண்டது. நடிப்பதை நான் வேலையாக பார்ப்பதில்லை. சில சமயங்களில் வேலையை அதீதமாக எடுத்துக்கொள்வதுண்டு. எனது குழுவினருடன் இணைந்து கேமரா முன்னே வேலை செய்வது வேடிக்கையான ஒன்று. இதை என்னுடைய நீட்சியாகவே பார்க்கிறேன். காலையில் எழும் பழக்கமுடையவரா? இல்லை. நான் இரவில் விழித்துக்கொண்டு இந்தி, ஆங்கில, கொரியன் படங்களைப் பார்த்துக்கொண்டிருபேன். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க நான் விழித்துக்கொண்டு ஏதேனும் செய்துகொண்டிருப்பேன்.இப்போது மைசூரில் விருசபா படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு இரவில் தேவதாஸ் படத்தை இரவில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், உறுதியாக காலையில் வேகமாக எழும் பெண் நானில்லை. உங்கள் குடும்பத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள். நடிகர்கள் உள்ளது , அழுத்தம் தருகிறதா?
  ஓப்பன் மைண்ட்ஸ் 2023 விக்ரமாதித்ய மோட்வானே 46 இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார். ‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர். ஆபிரஹாம் வர்கீஸ் 68 மருத்துவர், எழுத்தாளர் ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்று பல

காதலியின் துரோகத்தை சந்தித்து அதை திருப்பி அடிக்கும் ஜூனியர் டான்ஸ் மாஸ்டர்! கோவிந்தா நாம் மேரா...

படம்
  கோவிந்தா நாம் மேரா - விக்கி கௌசல், பூமி, கியாரா கோவிந்தா நாம் மேரா -இந்தி  கோவிந்தா நாம் மேரா இந்தி விக்கி கௌசல், கியாரா அத்வானி, பூமி பட்னாகர், ஷாயாஜி ஷிண்டே கோவிந்தா, சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் நோக்கத்தில் ஜூனியர் டான்சராக வேலை செய்கிறார். அந்த குழுவில் அவருக்கு காதலி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுக்கு. இருவரது நோக்கமும் ஒன்றுதான். தனியாக டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து பணம் சம்பாதித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள், கோவிந்தாவின் மனைவி. அடுத்து அவன் தங்கியுள்ள வீடு. சண்டை பயிற்சியாளரான அப்பாவுக்கும், ஜூனியர் டான்ஸ் மாஸ்டரான அம்மாவுக்கும் பிறந்த பிள்ளை கோவிந்தா. இரண்டாவது திருமணம். சட்டரீதியாக பதிவு செய்யப்படாத திருமணம். இதனால் முதல் மனைவி, அவரின் பிள்ளை இருவரும் சேர்ந்து   வழக்கு போட்டு, கோவிந்தாவின் வீட்டை வாங்க நினைக்கிறார்கள். அந்த வீடு, கோவிந்தாவின் அப்பா   மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது. கல்யாணம் செய்த மனைவி ‘’இரண்டு கோடி பணம் கொடுத்தால், உன்னை விவாகரத்து செய்கிறேன். நான் உன்னை கல்யாணம் செய்ய டௌரி கொடுத்தேன் இல்லையா அதைக் கொட

குஸ்திபோடும் கிராம பெண் பப் பவுன்சராகி சாதிக்கும் கதை - பப்ளி பவுன்சர் -மதுர் பண்டார்கர்

படம்
  பப்ளி பவுன்சர் இந்தி இயக்கம் மதுர் பண்டார்கர் தயாரிப்பு ஜங்லீ பிக்சர்ஸ்   டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில்  நடைபெறும் கதை. அங்குள்ள   கிராமத்தில் குஸ்தி அதாவது மல்யுத்தம் செய்யும் இளைஞர்கள் அதிகம். இவர்கள் டெல்லிக்கு சென்று அங்குள்ள கிளப்பில் பாதுகாவலர்களாக – பவுன்சர்களாக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். இரவில் கிளப் பாதுகாப்பு வேலை. பகலில் வீட்டில் வேலை செய்வது உடற்பயிற்சி செய்வது என இருக்கிறார்கள். மல்யுத்தம் சொல்லித் தரும் பயிற்சியாளருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் பப்ளி. மல்யுத்தம் கற்று அவளும் ஆண்பிள்ளை போல திடமாக வளருகிறாள். படிப்பு வருவதில்லை. பத்தாவது தேர்ச்சி பெறமுடியாமல் நின்று, வீட்டு வேலைகளை செய்து வருகிறாள். இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மகன் விராஜைப் பார்த்ததும் காதல் பூக்கிறது. அவனைப் பார்க்கவேண்டுமெனில் டெல்லி செல்லவேண்டும். அதற்கு அவளுக்கு குக்கு என்ற பள்ளிக்கால நண்பன் உதவுகிறான். டெல்லி சென்று நவ நாகரீக இளைஞன் விராஜை கிராமத்து பெண் சந்தித்தாளா, காதலைச் சொன்னாளா என்பதுதான் மீதிக்கதை.   பெண்களுக்கும் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. வாய

சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?

படம்
  ஜட்ஜ்மென்டல் ஹை கியா ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் இயக்கம் பிரகாஷ் கோவலமுடி கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான்   குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை.   சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில்   பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்   என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த

விவாகரத்து வழக்குரைஞருக்கும் காதலர்களை சேர்த்து வைக்கும் பெண்ணுக்குமான மோதல் - பிளான் ஏ, பிளான் பி

படம்
  பிளான் ஏ, பிளான் பி நெட்பிளிக்ஸ் - இந்தி  திருமணமானவர்களுக்கு வேகமாக விவாகரத்து பெற்றுத்தரும் வழக்குரைஞருக்கும், காதலர்களை அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஒன்றாக சேர்த்து வைக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் மோதல் காதல் இன்னபிற சம்பவங்களே கதை.  ஷேர்ட் ஸ்பேஸ் எனும் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள், பொதுவான கிச்சன் என உள்ள இடத்திற்கு இருவர் வாடகைக்கு வருகிறார்கள். ஒருவர், சுக்லா எனும் விவாகரத்து பெற்றுத் தரும் வழக்குரைஞர் - ரிதேஷ் தேஷ்முக். இன்னொருவர் தமன்னா. இருவரின் கொள்கைகளே வேறுபாடனவை என்பதால், இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. சுக்லா அவரது மனைவியுடன் வாழாமல் தனியாக வாழ்கிறார். அவரது மனைவி அவரது முதலாளியுடன் பாலுறவு கொண்டுவிடுகிறார். இதை சுக்லா அறிந்துகொண்டுவிடுகிறார். இதனால் மனைவியை விட்டு பிரிந்துவிடுகிறார். ஆனால் மனைவிக்கு     குற்ற உணர்ச்சியை உருவாக்கும்படி    விவாகரத்து தருவதில்லை. இதேபோல தமன்னாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. ரிதேஷ், தமன்னா என இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்னை கடந்து எப்படி வாழ்க்கையில் ஒன்றாக சேருகிறார்கள்

குருதத் ரசிகனை சினிமா விமர்சகர்கள் கோபப்படுத்தினால்... சுப் - துல்கர்சல்மான், ஸ்ரேயா - ஆர்.பால்கி

படம்
  சுப்  மொழி - இந்தி  இயக்குநர் - பால்கி  துல்கர் சல்மான், சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்திரி  சீரியல் கொலைகாரர்கள் அனைத்துவிதமாகவும் வந்துவிட்டார்கள். அப்படி கொலைகாரன் சினிமா வழியாக வந்தால்... அதுதான் படத்தின் மையம். இந்தி சினிமா இயக்குநரான குருதத்தின் ரசிகன், மோசமாக விமர்சனங்கள் எழுதும் பத்திரிகை, டிவி, வெப் என ஆட்களை போட்டுத் தள்ளினால்... அதை பிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறினால் என்னாகும் என்பதே கதை.  முதல் காட்சியே பெண்மணி ஒருவர் வேலை முடிந்து தனது அபார்ட்மெண்டிற்கு வருகிறார். வீட்டில் அழைப்புமணியை அழுத்துகிறார். ஆனால் கதவு திறக்கவில்லை. தனது சாவியைப் போட்டு திறந்து உள்ளே செல்கிறார். பாத்ரூமில் தனது கணவரின் செல்போன் ஒலி கேட்டு சென்றால், அவர் மீனை வகுந்து வைப்பார்களே அப்படி ரத்த விளாராக கொல்லப்பட்டு கிடக்கிறார். நெற்றியில் முக்கோணச்சின்னம் இருக்கிறது.  இது ஒரு கதை. அடுத்த கதை. பூ விற்பவரான டேனியின் கதை. டேனி காலையில் எழுந்து பூ கொண்டு வருபவர்களிடம் பூ வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறார். பிறகு தனது பூத்தோட்டத்தில் அமர்ந்து இரண்டு டம்ளர்களில் டீயைப் போட்டுக்கொண்டு அமர்ந்து குடிக்கிறார்

இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா

படம்
  அனெக்  ஆயுஷ்மான் குரானா இயக்கம் - அனுபவ் சின்கா பாடல்கள் -அனுராக் சைகியா வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.  யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.  வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள்  என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே,  வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்

உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

படம்
  அர்மான் மாலிக் பாடகர் நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா? சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.  தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா? நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள்

தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

படம்
  காந்தி நமது மொழிப்பிரச்னை காந்தி தமிழில்  அ.லெ. நடராஜன் இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும்.  பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார்.  இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார்.  நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்

நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

படம்
  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா சபாநாயகராக உங்களது சாதனை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.  மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே? என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.  முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா? நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்திறன் தொடர்ச்சியாக

விருது வெற்றிக்கு எழுத்துலகில் இடம் இல்லை! - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ இந்தி மொழி எழுத்தாளர்  ரெட் சமாதி என்ற பெயரில் கீதா எழுதிய நூல் டாம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டெய்ஸி ராக்வெல் என்பவர் இதனை மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 64 வயதான கீதாஞ்சலியை சந்தித்துப் பேசினோம்.  நீங்களே உங்கள் நூலை ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதியுள்ளீர்கள். தற்போது விருதுபெற்ற நாவல் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய படைப்புகளை நீங்களே மொழிபெயர்க்க ஆசைப்பட்டுள்ளீர்களா? என்னுடைய கிரியேட்டிவிட்டியான எழுத்து என்பது இந்தி மொழியில்தான். பிரேம்சந்தின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பதைவிட நான் இந்தியில் புதிதாகவே நூலை எழுதிவிட முடியும்.  டாம் ஆஃப் சாண்ட் நாவல், எப்படி ஒருவரின் இறந்தகாலம் தினசரி வாழ்க்கையை மாற்றுகிறது, வடிவமைக்கிறது என விவரிக்கிறது. 60 ஆண்டுகள் கழித்தாலும் கூட இந்த விளைவுகள் நடைபெறுகின்றன. வரலாற்றோடு ஒருவர் சரியான உறவை எப்படி பேணுவது? நாவலில் வரும் இறந்தகாலம் என்பது 50-60 ஆண்டுகள் ஆகும். இறந்த காலத்தின் பாதிப்புகள் நம்மை

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்

கதையும் இயக்குநரும்தான் படத்திற்கு மிக முக்கியம்! - ராஜ்குமார் ராவ், இந்தி சினிமா நடிகர்

படம்
  ராஜ்குமார் ராவ் இந்தி சினிமா நடிகர் நீங்கள் பதாய் டோ படத்தில் நடித்த ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரமான ஷர்துல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் நீங்கள் எப்படி தயார் செய்துகொண்டீர்கள்? ஷர்துல் பாத்திரம் பிற ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் போல இருக்க கூடாது என முன்னமே நினைத்தோம். அந்த பாத்திரம் உண்மையாக இருக்கவேண்டுமென நினைத்தோம். சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவனின் வாழ்க்கையில் பாலியல் என்பது சிறுபங்கு வகிக்கிறது. ஆனாலும் அது முக்கியமானது. தன்னை வெளிக்காட்டாமல் அவன் வாழ்கிறான். அவனைப் போலுள்ள பிறர் அவனை தொடும்போது அது அவனுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் விழிப்பாகவே இருக்கிறான். நானும் படத்தின் இயக்குநரான வர்தான் குல்கர்னி இந்த நீளத்திற்குத்தான் பாத்திரம் பற்றி பேசினோம். இதைத்தாண்டி கூடுதலாக நான் ஏதும் செய்யவில்லை. காதல் என்பது நீங்கள் உணர்வது அதனை வெளிக்காட்டலாம்.  ஷர்துல் ஒரு ஆணழகன். கட்டழகு உடலுக்காக பயிற்சி செய்தது கடினமாக இருந்தது. நான் சைவ உணவு சாப்பிடுபவன் என்பதால், சற்று கடினமான சவால்தான். ஆனாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். ஆண்மைத்தன்மை கொண்ட நாயகன் என்பதால்தான் பா

தோல்விகள்தான் நிகழ்காலத்தைப் பற்றி கற்றுக்கொடுத்துள்ளன! - ஹன்சல் மேத்தா, இந்தி சினிமா இயக்குநர்

படம்
  ஹன்சல் மேத்தா இந்தி சினிமா இயக்குநர் ராஜ்குமார் ராவ், மனோஜ் பாஜ்பாய் ஆகிய சிறந்த நடிகர்களை வைத்து ஆழமான பல்வேறு படங்களை எடுத்தவர் ஹன்சல் மேத்தா. அவரது வீட்டுக்குச் சென்றால் அறை முழுக்க சமையல் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன. கானா கஸானா என்ற டிவி தொடரை எழுதி இயக்கியவர் ஹன்சல் தான். தற்போது ஸ்கூப் என்ற வெப் தொடரை உருவாக்கி வருகிறார்.  பிகைண்ட் பார்ஸ் இன் பைகுல்லா மை டேஸ் இன் ப்ரீஸன் என்ற நூலைத் தழுவிய கதை. ஸ்கேம் 1992 என்ற வெப் தொடரை எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவரே.  ஃபராஸ், ஸ்கூப், மாடர்ன் லவ், ஸ்கேம் 2 என நிறைய தொடர்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி பரபரப்பாக இயங்க முடிகிறது? டிவியைப் பொறுத்தவரை உங்களது வேலை என்பது நீளமானது. அதனை விரும்பி செய்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அந்த வேலை அமையும். நான் செய்யும் வேலையை நேசிக்கிறேன்.எனக்கு அது சுமையாக தெரியவில்லை. டிவியின் வரம்புக்குள் என்னால் கதையை உருவாக்கி படமாக்கமுடியவில்லை. நான் அதில் இயங்கியது வயிற்றுப் பிழைப்பிற்காகத்தான். அதில் நான் உழைத்தாலும் நினைத்தளவு பணம் கிடைக்கவில்லை. நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞன் என்பதால் டிவி துறையில்